Wednesday, March 28, 2012

கடவுள் (ஒரு வினா விடை விவாத மேடை)

கடவுள் (ஒரு வினா விடை விவாத மேடை)

(கடவுள் என்பது வினைப்பயனா? பயனுள்ள வினையா? பயனற்ற வினையா? வினா விடையற்ற பயனா? )


வினாவும் விடையும் அவனேவா? ஒரு ஆக்கபூர்வமான மற்றும் நாகரிகமான உரையாடல் அல்லது விவாதம் அல்லது கருத்துப் பரிமாற்றல் எனக் கொள்ளலாம்.

விவாதக்களத்தின் சூத்திரதாரிகள் (கர்த்தாக்கள்) ஸ்ரீ மதுக்கூர் ஷாகுல் ஹமீது, ஸ்ரீ வெங்கட் மற்றும் ஸ்ரீ எஸ்.கே.எம், துக்ளக் வாசகர்கள் பரஸ்பர விவாதம், [நன்றி துக்ளக் இதழ் 22.3.2012 ஆன்லைன் வாசகர் கருத்துப்பகுதி (பக்கம்>> "எனக்குள் எம்.ஜி.ஆர் (ஒரு எக்ஸ்.ரே. தொடர்   கவிஞர் வாலி அவர்கள் வழங்கி வருவது]
--------------------------------------------------------------------------------------------------------------


Guest
வாலி போகூழ் காலத்தில் சென்னையை விட்டு திருச்சிக்குத் திரும்பியிருந்தால் ஆகூழ் வந்தே இராது. சரியாகச் சொல்வதானால் சில வகை மரங்கள் பலனுக்கு வருவதற்கு பல வருடங்கள் பிடிக்கும். சினிமாத் தொழிலில் பெரும்பாலோர் கதை அப்படிப்பட்டதே அல்லவா? ஆகையினால் விதியை தன்னுடைய ஆரம்ப காலத் துன்பத்திற்குக் காரணம் காட்டுவது ஏற்கத் தக்கதாக இல்லை. மேலும் அவருடைய திறமையும் சாணை தீட்டப்படுவதற்குப் பலகாலம் பிடித்துள்ளது அல்லவா? இன்னொரு விசயம் அவர் தாக்குப் பிடித்தற்குக் காரணம் அவருக்கு அவ்வப்போது சிறிய வெற்றிகள் கிடைத்துக்கொண்டே இருந்ததால்தான். அப்படி என்றால் அவர் தொடர்ந்து தொழிலில் இருந்திருக்கிறார் என்றாகிறது. ஆகையால் அவர் இப்படி முகாரி பாடி நம்மிடம் இரக்கம் சம்பாதிப்பதைவிட தன்னுடைய வாழ்வினை ஒரு படிப்பினையாக மற்றவர்களுக்கு எவ்வாறு தருவது எனச் சிந்தித்து எழுதினால் தேவலாம்.
Thursday, March 22, 2012, 17:35:26
– Like – Reply
Liked by
N.S.M. Shahul Hameed
Singai Sivas
3 Guests
N.S.M. Shahul Hameed
பெரும்பாலும் எல்லோரது வாழ்விலுமே கல்லும் முள்ளும் பாதையில் கிடந்துதான் இருக்கின்றன. பலர் அவற்றைப் பெரிதாக கருதாமல் இன்னும் தொடர்ந்து நடக்க வைப்பதே இறைவன் நமக்களிக்கும் பாக்கியம் என்று மேன்மேலும் நன்றிகூறியவாறே நடையைத் தொடர்கிறார்கள்.

மற்றவர்களால் உயர்த்திவைத்துப் பார்க்கப்படும் பெருமை வரும்போது, கடந்தது காட்டாறாகவும், தாண்டியது தீயாகவும் பெரிதாகத் தெரியும் மாய போதையில், சுமந்து வந்த இறைவனின் தோள்கள்கூட தாமே தூக்கிவந்த சுமையாகத் தெரியும் சிலருக்கு,

ஆனாலும், இங்கே வாலி தனக்கு உதவியவர்களை தொடர்ந்து பட்டியலிட்டு வருவது அவரின் நன்றிப்பெருக்கின் அடையாளம். ஒரு நல்ல உதாரணம்.
Thursday, March 22, 2012, 17:48:45
– Like – Reply
Liked by
Guest
வெங்கட்
மன்னியுங்கள் அன்பு சாகுல் இறைவன் மனிதன் வாழ்வில் தலை இடுவதே இல்லை. அவன் கொடுப்பதும் இல்லை கொள்வதும் இல்லை தடுப்பதும் இல்லை தண்டிப்பதும் இல்லை. இதைப்பற்றி நான் திருக்குறளில் தெளிந்ததைத் தெரிந்து கொள்ள சில வாரங்கள் பொறுத்திருங்கள்.
Thursday, March 22, 2012, 19:15:16
– Like – Reply
N.S.M. Shahul Hameed
அன்புள்ள வெங்கட் அவர்களுக்கு,

"இறைவன் மனிதன் வாழ்வில் தலையிடுவதே இல்லை; அவன் கொடுப்பதும் இல்லை கொள்வதும் இல்லை; தடுப்பதும் இல்லை தண்டிப்பதும் இல்லை" என்று நீங்கள் கூறியுள்ளதை என்னால் சிறிதளவும் ஏற்கமுடியவில்லை.

திருக்குறளில் இருந்து எதற்கும் விடை தேடும் தங்கள் பணி சிறக்க வேண்டும். அதே சமயம், இறைவன் பற்றியும் இறை பண்புகள் பற்றியும், அவனது படைப்பினங்களின் பால் உள்ள உறவுக்கும் முழுமையான - உண்மையான - விளக்கம் நாம் இறைவனிடமிருந்தேயல்லாமல் ஒரு இறையடியாரின் - அவர் எவ்வளவுதான் சிறந்தவராக இருந்தாலும் - பெறமுடியும் என்பதை நான் ஏற்பதில்லை.

குறைந்த பட்சம் கருத்து மாறுபாடு இறைவனின் வேதக் கருத்திற்கும், இறைவனின் அடியானின் கருத்துக்கும் (அந்த கருத்து விளக்கமளிப்பதில் உள்ள வித்தியாசமாயில்லாமல் தெளிவாக காணக்கூடியதாய் இருந்தால்) இருக்குமேயானால், நான் அடியானின் கருத்தை விட்டுவிட்டு அந்த வேதம் உரைப்பதையே விரிவாக ஏற்றுக்கொண்டு, பின் அதன் அடிப்படையில் அடியானின் கருத்தை அலச முயலுவேன்.

இந்த வகையில், நீங்கள் என்னதான் திருக்குறளில் இருந்து கொண்டுவந்தாலும், அவை வேதத்தின் விளக்கத்திற்கு - தெளிவான கருத்திற்கு மாறுபாடாய் இருந்தால் என்னால் ஏற்கமுடியாது. அதே நேரம், வேதங்களை நண்கு உணர்ந்திருக்கக் கூடிய திருவள்ளுவரின் குறளில் இருந்து நீங்கள் கூறிய கருத்துக்கு ஆதாரம் கிடைப்பதும் அரிது என்றே நான் நினக்கிறேன். மேலும் உங்களின் புரிதலில் கூட தவறு இருக்கலாம்.

page 1 of 2
5 days ago, 02:15:25
– Like – Reply
Liked by
Singai Sivas
N.S.M. Shahul Hameed
அன்புள்ள வெங்கட் அவர்களுக்கு, (page 2 of 2)

மனிதனின் ஜனன மரணத்திலேயே இறைவனின் கொடுப்பதும் கொள்வதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட வாழ்விலும் இறைவனின் தோள்கொடுக்கும் பணி, உள்ளுணர்வில் ஆரம்பித்து, அங்கங்கே உதவும் கரங்களாக, தடுக்கும் நிகழ்வுகளாக, தண்டிக்கும் எதிர்விளைவுகளாக எண்ணற்ற நிகழ்வுகள் ஆதாரங்களை அடுக்குகிறது.

ஒரு பேரிடர் வந்து விடும்போது, அதில் எண்ணற்றோர் அழிந்துவிடும்போதும், தனக்கே உதவிக்கொள்ள முடியாத சிசுக்கள் உயிர்பிழைத்து மீண்ட காட்சிகளை கடந்தகாலம் நமக்கு காட்டியுள்ளது.

இறைவன் தான் தண்டித்த ஒரு வரலாற்றுச்செய்தியை திருக்குரானில் (அத்தியாயம் 15 வசனம் 73 - 75) கூரியுள்ளான்;
"பொழுது உதிக்கும் நேரத்தில் பேரிடி முழக்கம் அவர்களைப் பிடித்தது. அவர்களின் ஊரின் மேற்புறத்தை அதன்
கீழ்புறமாக நாம் ஆக்கிவிட்டோம்; இன்னும் சுட்ட களிமண்ணிலான பொடிக் கற்களை அவர்களின் மீது நாம் பொழியச் செய்தோம். நன்கு கவனித்துப் பார்ப்போருக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

இதுபோல், நீங்கள் மறுத்த அத்தனை பண்புகளுக்கும் திருக்குரானிலும் அதற்கு முன்பே அருளப்பட்ட வேதங்களிலும் ஏராளமான உதாரணங்கள் - விளக்கங்கள் உண்டு.

இறைவன் அளித்த புத்தியோகத்தால் மனிதன் (பக்தன்) அடையும் நன்மைகள் பற்றி பகவத் கீதையிலும் சிறப்பாக உள்ளது. (பார்க்க அத்தியாயம் 10].

இறைவன் அவனது அளப்பெரும் கருணையினால் நம்மில் பலரை வெளிச்சத்திலேயே வைத்திருக்கிறான். அதனால்தான் நமக்கு இருட்டில் இருந்து கதவுகளின் ஊடே வரும் வெளிச்சத்தை உணர்பவனின் நன்றிப்பெருக்கான நிலை ஏற்படுவதில்லை. இறையடியார்களோ இதனை தங்களின் புத்தியைக்கொண்டு உணர்ந்து கருணையாளனான கடவுளின் மீது மேலும் அதிக நன்றியுடையவர்களாக தம்மை ஆக்கிக்கொள்கிறார்கள்.

பகவத் கீதை அத்தியாயம் 10 சுலோகம் 11-ன் கருத்து; "நான் அவர்களுக்கு அருளால் இரங்கி, அந்தக் கரணத்தில் வீற்றிருந்து, மெய்ஞானச்சுடர் விளக்கால் அஞ்ஞானத்துதித்த ஆரிருளை அகற்றி விடுகிறேன்".

மேலும், "அழைத்தவர் குரலுக்கு வருவேன் " என்று இறைவன் வாக்குரைத்த சம்பவமும் பகவத்கீதையில் உண்டுதானே!.

நான் நம்பிக்கொண்டிருக்கும் அளவில், திருவள்ளுவர் இறைவேதத்திற்கு மாற்றமான கருத்துக்களை தம்பாடலில் வைக்கத் துணியமாட்டார். ஒன்று அவரின் அறியாப்புரத்திலிருந்தோ, அல்லது அவரை நாம் தவறாய் புரிதலில் இருந்தோ அதுபோன்ற கருத்துக்கள் வந்தால் அவற்றை நாம் ஏற்கவேண்டிய தேவையில்லை!.
5 days ago, 02:16:24
– Like – Reply
Liked by
SKM, USA
Singai Sivas
SKM, USA
Dear Sri. Venkat and Sri. NSM,

//மன்னியுங்கள் அன்பு சாகுல் இறைவன் மனிதன் வாழ்வில் தலை இடுவதே இல்லை. அவன் கொடுப்பதும் இல்லை கொள்வதும் இல்லை தடுப்பதும் இல்லை தண்டிப்பதும் இல்லை. //

I agree with Sri. Shahul on this.

Sri. Venkat, to me, your quoted view above, seems almost a direct contradiction to the spirit of Thiruvalluvar.

Does not the Thirukkural start with "கடவுள் வாழ்த்து"? Why would Thiruvalluvar want to use this as the opening topic if God was indeed so useless?

Secondly, take the example of our saints. Was not Maarkkandeyan saved from Yaman by Lord Shiva? Was not Prahlad saved by Narasimha? Did the Nandi not move to reveal Lord Shiva at the temple when Nandanaar sang, "சற்றே விலகி இரும் பிள்ளாய்"? All these devotees conducted their lives in such a way as to be deserving of Divine Grace. So Divine intervention came to them when they needed it the most. Our history is replete with such examples. So I don't know how you are of such an obviously contrarian opinion.

Also, I second Sri. Shahul's point about the countless times we see the Hand of God in our own lives, when things seem out of control and then we see something miraculous happen.

If anyone feels God "does not do anything", that person's faith is a fault. Never Divine Intervention.

As someone who has personally seen many situations that were beyond my control and have seen a mysterious, miraculous way out, from seemingly out of nowhere, I cannot subscribe to your view.

As a wise person once said: There are two ways to look at life - one is to see everything as a miracle, and the other is to miss seeing everything as a miracle.
3 days ago, 01:43:37
– Like – Reply
Liked by
Singai Sivas
வெங்கட்
I know I have agitated your mind and that of Sahul. Let me say some thing which potentially could open my thinking on this subject.

1. The purpose of life is to evolve at the level of our souls in order to reach the abode of God.
2. Soul's evolution is set on motion with those who imbibe the spirit of Tirukkural and put it to practice in every walk of their
lives.It might take several births to complete.
3. World's materials and the tribulations human beings undergo are the in basket materials and scenarios.
4. Every person comes to this world with a randomly assorted package which Tiruvalluvar calls Fate. With the facilitation
and the brakes the package bestows on human beings he or she has to wade through his journey to reach God.
5. The so called miracles are earned and those who had them fully deserve them because of what they have accomplished
earlier.
6. Having created this system with all the components needed for the project of soul evolution God waits to receive his children
into his fold.
Dear friends it is my humble opinion that any one who tries to appropriate Tirukkural into his religion is doing a great disservice to the treatise. I do not know enough about any of the existing religions to comment on them. But I believe that Tirukkural is different from them. Thanks all.
3 days ago, 06:53:01
– Like – Reply
வெங்கட்
சரி இவ்வளவையும் அமைத்துவிட்டு கடவுள் என்ன செய்துகொண்டு இருப்பார்? உலகம் என்னும் நாடகத்திரையில் நடக்கும் நாடகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார். நாடகம் பார்க்கும்போது துன்பமான காட்சிகளைக்காணும் நாம் அழுது புலம்புவோம். அருகில் இருப்பவர் அட . . .இது நாடகங்க . . . என்றால் நம் அழுகை மறந்து போகும். கடவுளுக்கு அது தேவையில்லை. அவருக்குத்தெரியும் தீயினால் சுடச்சுட ஒளிர்வதைப்போலத் துன்பத்தில் இருக்கும் ஒருவனுக்கு அத்துன்பம் தன்னுடைய ஆன்மாவைச் செம்மைப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு என்று. திருவள்ளுவர் இதை உணர்ந்து இருந்ததால்தான்

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

என்ற குறளைப்படைத்தார். இப்போது சொல்லுங்கள் ஆன்ம மேம்பாடு அடைய ஒரு வாய்ப்பு வரும் வேளையில் அதைக் கெடுக்கும் வகையில் கடவுள் தலை இடுவாரா?.

(வித்தகன் =ஆன்ம மேம்பாட்டுப் பாதையில் வெற்றி நடை போடுபவன்)
3 days ago, 08:10:25
– Like – Reply
வெங்கட்
சரி தண்டனையும் வழங்குவதில்லை என்று கூறுகிறீர்களே அது எப்படி என்று கேட்கிறீர்களா? மனிதக் குழந்தை இப்பூமிக்கு வரும்போது தன்னுடன் எடுத்துவரும் பேக்கேஜ்ஜில் அன்பு, அடக்கம், ஒப்புரவு அதாவது சக மனிதர்களின் வளர்ச்சிக்குத் தான்னால் இயன்ற பொருள் உதவி , திறனேற்றல் ஆகியன் தருதல், கண்ணோட்டம் அதாவது ஒருவனைப் புரிந்து கொள்வதற்கு அவனிடத்தில் நம்மை வைத்து அவன் தரப்பு உண்மைகளையும் நிலவரத்தையும் புரிந்து அதற்குத்தக ஆவன செய்தல் எல்லாச்சமயங்களிலும் கெடுதல் விளைவிக்காத உண்மையை மட்டுமே பேசுவது ஆகிய குணங்களும் அடங்கும். இவை பலரிடத்தில் கருவிலே அமைந்த திருவாக மிக அதிகமாக இருப்பனவாம். பலரிடத்தில் பயிற்சியின் மூலம் வருவனவாம். இப்படிப்பட்ட மனிதர்கள் இயல்பாக நீதியும் நியாமும் வழங்குபவர்களாக இருப்பர். அவர்கள் மூலம் காலம் கடந்தேனும் தண்டனை கிட்டும்.
இப்போது சொல்லுங்கள் கடவுள் தானே தண்டிக்கிறாரா? அல்லது அதற்காவன செய்து வைத்துள்ளாரா? இது தொடர்பான ஒரு குறளும் அதற்கான முழுவிளக்கமும் மேலே உள்ள விளக்கங்களின் விளக்கமான உரைகளும் சம்பந்தப்பட்ட குறள்களோடு என் புத்தகத்தில் உள்ளன.
3 days ago, 10:13:49
– Like – Reply
N.S.M. Shahul Hameed
முழுமையான ஞானமுடைய வாலறிவனின் நடவடிக்கை பற்றி அறைகுறை ஞானமுடைய அடியான் அறியமுடியாது. இறைவனே தனது வேதங்களின் மூலம் சொல்லித்தந்தது தவிற, மனிதனால் அவன் இப்படித்தான் நினைக்கிறான், இப்படித்தான் நடந்துகொள்வான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆனால், நண்கு உணரமுடிந்தவர்கள், தனது சக்தியையும், நிகழ்வுகளின்போது தான் நடந்துகொள்ளும் விதத்தையும் அல்லது தனக்கு ஏற்படும் மாற்றங்களையும் வைத்து இறைவனின் உதவி எந்த அளவு இருக்கமுடியும் என்பதைக் கூட ஒவ்வொரு தனிமனிதனும் உணரமுடியும்.

இவ்வகையில் காணும் இறைவனின் உதவிகளை கண்டோர் விண்டுரைக்கமுடியாது எனினும், சில ஞானிகள் பல உதாரணங்களைக் காட்டிக்கூட தெளிவாக விளக்கியுள்ளனர். இறைவன் நம்முடன் ஓடிக்கொண்டிருப்பவனா, அல்லது நம்மை ஓடவிட்டு வேடிக்கைப் பார்ப்பவனா, அல்லது எங்கும் யாதுமாய் வியாபித்து இருப்பதன் காரணமாக நம்முடன் சேர்ந்து ஓடிக்கொண்டே நம்மைவிட்டு பிரிந்து நின்று வேடிக்கை பார்க்கும் வல்லமை பெற்றவனா? என்பதெல்லாம் மனித சக்தியை மனதில் வைத்து இறைவனைப் பார்க்காமல், இணையற்றவனின் இயல்புகள் எவ்வாறு இருக்கும் என்று சிந்திக்கும்போது ஞானிகளின் உதவியால் உணரக்கூடியவை.

நான் முன்பே எழுதியதுபோல் வள்ளுவர் என்ன சொல்கிறாரோ அதுதான் இறைத்தன்மை என்று பார்ப்பது சரியாக இருக்காது. வள்ளுவர் இறைத்தன்மை பற்றி வேதங்களில் சொல்லப்பட்டவற்றின் விளக்கமாக எழுதியுள்ளாரா என்றுதான் பார்க்க வேண்டும். இந்த வகையில், நான் அறிந்த வரையில், இறைவனின் வேதங்களின் பதிவுகளான திருக்குரான், மற்றும் அதற்கும் முந்தய வேதங்களில் உள்ளவைதான் நாம் நம்பக்கூடிய விளக்கம்.

ஒரு வகையில், நீங்களும் இறைவனின் தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். என் தந்தை என்னை கடைக்குப்போய் ஒரு சாமான் வாங்கி வரச்சொல்கிறார், எந்த கடைக்குப் போகவேண்டும், என்ன சாமான், அங்கே அது இல்லையென்றால் அடுத்த கடை, அதுவும் இல்லை என்றால் சும்மா திரும்புவதா அல்லது வேறு எதேனும் மாற்றுப்பொருளா, எவ்வளவு, பணம் கொடுத்தா, கடனாகவா இப்படியெல்லாம் சொல்லிக்கொடுத்து அல்லது பயிற்சிகொடுத்து என்னை அனுப்பிவைத்தால், அந்த என்னுடைய நடவடிக்கையில் என் தந்தையின் தலையீடு இல்லை என்பது எப்படி சரியாகும். தவிற என்னுடைய செயல்பாட்டின் இறுதி நிலையைப் பொறுத்து அவரின் நடவடிக்கை இன்னும் இருக்கலாம் - அவர் தன் நண்பரை எனக்கு எதிர்ப்படும் வகையில் அனுப்பி எனக்கு உதவச்செய்யலாம்.

நாமும் நமது அசைவுகளும் கூட இறைவனுள் அடக்கம் என்பதை உணர்ந்தால், கேள்வியே அர்த்தமற்றதாகிவிடும்.
3 days ago, 21:57:29
– Like – Reply
Liked by
SKM, USA
வெங்கட்
"imbibe the spirit of Tirukkural" இந்த வாசகம் எப்படித் தங்கள் மனதில் அர்த்தமாகிறதோ என எனக்குத்தெரியவில்லை. திருக்குறளில் உள்ளபடி அல்லது திருவள்ளுவர் கூறுகிறபடி என்று நான் கூறும்போது அவர் கூறும் அறவழி என்றுதான் கூறுகிறேன். நிச்சயம் உலக சரித்திரத்தில் பல பேர் பல நாடுகளில் அவற்றைக்கூறி இருப்பர். இன்றைய தினம் பல ஜனநாயக நாடுகளின் சட்டங்களில் அவை இடம்பெற்று இருக்கும். திருவள்ளுவர் மட்டுமே அத்தாரிட்டி என்று நான் நினைக்கவில்லை.

கடவுளின் உதவி நேரடியாக அவரிடமிருந்து வருவதில்லை. ஆனால் அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் அமைப்பின் மூலம் வரும் என்பதுதான் திருவள்ளுவர் கருத்து என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது நிகழ்வதற்கு உதவி பெறுபவன் தன்னுடைய அறம் தழுவிய வாழ்க்கையால் செயல்களால் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். குடிசெயல் வகை அதிகாரத்தில் ஒரு குறட்பா தெய்வம் தன் குடும்பத்தை அல்லது குலத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என முயற்சிப்பவனைக்கண்டால் வேட்டியை மடித்துக்கொண்டு வந்து உதவும் என்று கூறுகிறது. அக்குறள்:

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் 1023
2 days ago, 05:28:03
– Like – Reply
வெங்கட்
ஆனால் அதே அதிகாரத்தில் பின்னர் வரும் இரண்டு குறட்பாக்கள்

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு 1029

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி 1030



தெய்வம் தானே வரவில்லையாயினும் அவனுடைய பக்தனுக்கு உதவியாக மற்றவரை அனுப்பி வைப்பான் என்று 1023 வது குறளுக்குப் பொருள் கொண்டால் ஒரு குடும்பத்தை குற்றம் குறைகள் இல்லாமல் மேலெடுத்துச் செல்லவேண்டும் என்று செயல்படும் குடும்பத்தலைவனின் உடம்பு என்ன துன்பங்களைக்கொட்டி வைக்கும் கொள்கலனா என்பது எவ்வாறு சரியாகும். கடவுள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? அதேபோல குடும்பத்தின் தலைமை பட்டு விட்ட நிலையில் அடுத்த தலைவன் உருவாகவில்லையானால் அக்குடும்பம் பட்டு வீழ்ந்து விடும் என்ற குறட்பாவை எவ்வாறு 1023 வது குறட்பாவுடன் ஒருங்கிணைப்பது? வள்ளுவர் உள்ளம் என்னவென்பது 1025 வது குறளில் தெளிவாகத்தெரிகிறது. அக்குறள்:

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு 1025
2 days ago, 05:28:44
– Like – Reply
வெங்கட்
குற்றம் இல்லாமல் குடும்பத்தை நடத்திச்செல்பவனைக்காணும் அவனுடைய உறவினர் நண்பர்கள் அக்கம்பக்கத்தார் அவனிடம் பெருமதிப்புக்கொள்வர். அவனை ஏதோ தம்முடைய உறவுக்காரர் போலப் பாவித்துக்கொள்வர். அப்படி மனம் நெகிழ பாசமும் நேசமும் கொண்டவர்கள் தெய்வமே வந்து உதவியதைப்போல உதவத்தானே செய்வார்கள். அவனைச்சுற்றி உள்ளவர்களில் யார் அவனால் கவரப்படுவார்கள் என்றால் யாருடைய பேக்கேஜில் அன்பு பழிச்சொல்லுக்கு நாணும் தன்மை ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை ஆகியன அதிகமாக உள்ளதோ அல்லது யார் அவற்றை திருக்குறள் போன்ற நூல்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் தம்மிடத்தில் அதிகப்படுத்திக்கொண்டு உள்ளனரோ அவர்கள் மட்டுமே அவனால் கவரப்படுவார்கள். ஆகவே தெய்வம் அனுப்பி வைப்பதில்லை. தெய்வத்தின் முறைமையில் அதற்கான ஏற்பாடு உள்ளது என்பதுதான் திருவள்ளுவரை நான் புரிந்து கொண்டுள்ள விதம்.
2 days ago, 05:29:49
– Like – Reply
.M. Shahul hameed
நீங்கள் நினைப்பது, திருக்குறளின் சில/பல குறள்களின் கருத்தை எடுத்து அதனை வைத்து நீங்களாக புரிந்துகொள்வது. நான் ஏற்கனவே சொன்னது போல இந்த வகை தீர்மாணத்தில், உங்களின் புரிதல் அல்லது குறளை இயற்றிய வள்ளுவனின் புரிதல் இரண்டும் இருக்கிறது என்பதையும் ஒரு கருத்தாக முன்வைக்க இடமுண்டு,

ஆனால், மனிதர்களால் எழுதப்படாமல், இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் சொல்லப்பட்டவை மிகத்தெளிவாக உள்ளவை. பல ஞானிகள் இன்றளவும் ஏற்பவை. உணரக்கூடிய ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்வில் அனுபவிப்பவை.

நல்லவர்க்கு கிடைக்கும் உதவிகளும், பொல்லாதவர்களுக்கு கிடைக்கும் உதவாத போக்கும், இம்மை மறுமை ஆகிய இரண்டும் சேர்ந்த கால அளவில் வைத்துப் பார்க்கவேண்டியவை. குறுகிய காலத்தில் - அதுவும் இன்றய உலகில் - எல்லோருக்குமே ஒருவகையில் உதவிகள் கிட்டிக்கொண்டுதான் இருக்கும். இதனைத்தான், இறைவனும், "தான் நாடியவர்களுக்கு உதவுவதாக குறிப்பிடுகிறான்". அவனது நாட்டத்திற்கு விதி முறைகளை நாம் வகுத்துப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நன்மைக்கு கூலியும், தீமைக்கு தண்டனையும் நிச்சயம் ஒரு நாள் உண்டு (அது இம்மையிலே அல்லது மறுமையிலே இருக்கலாம்) என்ற புரிதல் - இறைவன் வேதங்களில் சொல்லியுள்ளதுபோல் - நம்மை அவன் வைக்கும் சோதணையில் வெற்றிபெறச்செய்ய போதுமானதாக இருக்கிறது. ஆக, நல்லவர்கள் வந்து உதவுவதோ, பொல்லாதாவர்களின் சேர்மானமோ, எல்லாமே இறைவனின் திருவிளையாடலால் (சோதணையாக) விளைவதுதான்.

திருக்குரான் அத்தியாயம் 10, வசனம் 1 முதல் 10 வரை, ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்கள் என்று ஆரம்பித்து, மனிதர்கள் இறைவனை சந்திக்க இருக்கும் ஒரு நாளைப் பற்றி அறிவித்துக்கொண்டு பல உதாரணங்களை கொடுத்து வரும்போது வசனம் 11-12ல் இப்படி வருகிறது;

"மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில், அவனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். ஆனால் நாம் அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நீக்கிவிடும் போது, அவன் தனக்கு ஏற்பட்டிருந்த துன்பத்திற்காக எப்போதுமே நம்மிடம் பிரார்த்திக்காதவன் போல் சென்றுவிடுகின்றான்!. வரம்பு மீறி நடப்பவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் இவ்வாறே அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றன."
2 days ago, 08:05:59
– Like – Reply
SKM, USA
Dear Sri. Venkat,

You have raised a lot of points. I will try to get to as many of them as possible.

//கடவுளின் உதவி நேரடியாக அவரிடமிருந்து வருவதில்லை. ஆனால் அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் அமைப்பின் மூலம் வரும் என்பதுதான் திருவள்ளுவர் கருத்து என்று நான் நினைக்கிறேன். //

Bill Gates-இன் trust-இல் இருந்து வரும் தர்ம காரியங்கள், அம்மனிதரே செய்யவில்லை அவர் ஏற்படுத்தி வைத்த அமைப்பு தான் செய்கிறது. ஆகவே Bill Gates நேரடியாக எவருக்கும் உதவுவதில்லை. சும்மா உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்.

இந்த கருத்து உங்களுக்கு ஒப்புமையா?
2 days ago, 22:28:02
– Like – Reply
வெங்கட்
மனித வாழ்வுக்கு ஒரே பயன் தான் உண்டு. அதை ஊதியம் என்று ஒரு குறளில் குறிப்பிடுகிறார். அதுவென்னவெனில் மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கை ஒருவாய்ப்பை அளித்திருக்கிறது. அது என்ன வாய்ப்பு? மனிதன் தன்னுடைய ஆன்மாவை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு. மேம்படும் ஆன்மாவின் அடுத்த நிலை என்ன? கடவுளர் உலகத்தில் வாழும் அளவுக்கு மேம்பாடு அடைந்த ஆன்மா அவனுடைய உலகத்தில் குடி புகுந்துவிடும். திரும்பவும் உடலெடுத்து இங்கு வராது. மனிதன் தன்னுடைய ஆன்மா மேம்பாடு அடைவதற்கு என்ன செய்யவேண்டும். அவன் திருக்குறளில் கூறப்பட்ட அறவாழ்வு வாழ்வு வாழவேண்டும். இவ்வற வாழ்வு என்ன வென்பதுதான் திருக்குறள் தன்னுடைய 133 அதிகாரங்களிலும் கூறுவது. தாங்கள் எடுத்தாண்டு உள்ள விவேகானந்தரின் மேற்கோள் மிக அழகாக இந்தக் கருத்தைக்கொண்டு உள்ளது. கடவுளே நீ வேண்டும் என்று கேளாது என் துன்பத்தைத் துடை எனக்கு வீடுகொடு பொன் கொடு பொருள் கொடு எனக்கு மன்னிப்பு கொடு என்று சதா சர்வகாலமும் நாம் கடவுளிடம் வேண்டுகிறோம். எந்த நிமிடத்தில் நாம் போதும் ஐயா இவ்வாழ்க்கை இனி நீதான் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறோமோ அந்த நிமிடம் நாம் அவனை அடையும் பாதையில் பயணிக்கத்துவங்கி விடுகிறோம். அறவாழ்வு வாழத்துவங்கி விடுகிறோம்.

மனிதன் எவ்வளவு காலம் வாழ்வான் என்பதை கடவுள் நிர்ணயிக்கிறாரா என்ற கேள்விக்கு எனக்குத் தெரிந்தவரை திருவள்ளுவர் கருத்து இவ்விதம் உள்ளது:

அன்றலர்ந்த மலர் போல களங்கம் இல்லாமல் தன் மனதினை வைத்துக்கொண்டு கடவுளிடன் தன்னை ஒப்புவித்து விடுபவனும் ஐந்து பொறிகளின் மூலம் பெறுபவற்றை அறநெறிப்படுத்தி துய்த்து வாழ்பவனும் நீண்ட காலம் வாழ்வான். ஒருவனுக்கு உற்றிருக்கும் ஊழில் அவன் எவ்வளவு காலம் வாழ்வான் என்பதுவும் அடக்கமா எனக்கருதுவதற்கு இடம் அளிக்கும் குறள் எதுவும் இல்லை. பொதுவாக ஒவ்வொரு உடம்புக்கும் அதனுடைய நசிவு பிறந்தவுடனேயே துவங்கி விடுகிறது என்ற கருத்துப்படி அந்நசிவு முற்றுப்பெரும்போது உயிர் நீங்கும் அதனுடன் ஆன்மாவும் அவ்வுடலை விட்டு நீங்கும் என்பது திருக்குறளில் காணப்படும் செய்தி.
Yesterday, 04:12:59
– Like – Reply
வெங்கட்
பில் கேட்ஸ் உதாரணம் எனக்குப்புரியவில்லை. பில் கேட்ஸ் மனித குலத்திற்கு உதவி செய்வதற்குக் காரணம் அவர் ஒரு அருளாளராக இருப்பதுதான். அருளுடைமை என்பது அன்பு நடுவு நிலைமை செல்வம் ஆகியவற்றின் முக்கூடல். இக்குணங்களெல்லாம் எவனொருவன் தன்னுடைய ஈகோவில் வாழாமல் ஆன்மாவில் வாழ்கிறானோ அவனிடத்தில் வெளிப்படும். அவர் அன்மையில் இந்தியாவிற்கு வந்து இருந்த போது ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார்: என்னையும் என்னுடைய மனைவியையும் பின்னால் வரும் சந்ததியினர் நினைவில் வைத்துக்கொள்ளப்போகிறார்களா என்பதை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வதேயில்லை. இன்றைய உலகத்தில் இருந்து .... (இந்த இடத்தில் ஒரு நோயினைக்குறிப்பிட்டார் அது என்ன நோய் என்பது எனக்கு மறந்து விட்டது) முற்றிலும் நீங்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் இலக்கு. ஆக பில்கேட்ஸ் ஒரு அருளாளர். அவரைப்போன்றவர்களின் இலக்கு கடவுள். அப்படி இருக்க பில்கேட்ஸை எவ்விதம் கடவுளுடன் ஒப்பிடுகிறீர்கள்?
Yesterday, 04:31:36
– Like – Reply
SKM, USA
Dear Sri. Venkat,

//அப்படி இருக்க பில்கேட்ஸை எவ்விதம் கடவுளுடன் ஒப்பிடுகிறீர்கள்?//

இந்த ஒப்பீட்டைத் தெளிவு படுத்துவதற்காகத்தான் உங்கள் quotation-ஐ போட்டிருந்தேன்.

Bill Gates=God
Bill Gates' Charitable Trust = கடவுளின் அமைப்பு (உங்கள் பாஷையில்)
Yesterday, 21:14:44
– Like – Reply
வெங்கட்
Bill Gates=God
Bill Gates' Charitable Trust = கடவுளின் அமைப்பு (உங்கள் பாஷையில்)
பில் கேட்ஸ்சை நான் கடவுள் என்று எங்கே கூறினேன்?
மனிதவர்க்கத்திடம் காணப்படும் பல வித குணாதிசியங்களில் ஒன்று ஒப்புரவு செய்வது. இவ்வொப்புரவு செயல் தான் பில் கேட்ஸிடம் வெளிப்படுகிறது. ஒப்புரவு அறம் மனிதனின் ஆன்மாவைச் செம்மைப் படுத்துவதில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. மனித வாழ்க்கைக்கு ஒரே நோக்கம்தான் உள்ளது. அது தன்னுடைய ஆன்ம மேம்பாட்டில் முழு வெற்றி அடைந்து கடவுளர் உலகு புகுவதுதான். ஆகையால் பில் கேட்ஸ்ஸின் நோக்கமும்(உலகத்திலிருந்து அந்நோயை ஒழிப்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்) அவருடைய பதிலில் தெரிந்துள்ளபடி உள்ளதென்றால் நிச்சயம் அவர் கடவுளை அடையும் பாதையில் மிக முன்னால் சென்று கொண்டு உள்ளார் எனலாம்.
Today, 06:09:22
– Like – Reply
வெங்கட்
அடுத்து நீங்கள் நினைவு கூர்ந்தீர்களேயானால் இக்கருத்துப்பரிமாற்றத்தின் ஆரம்பம் திருவள்ளுவரை மற்ற மதத்துக்காரர் களெல்லாரும் தங்கள் மதத்துக்காரர் (ஜெயின், புத்தம், இந்து கிருத்துவம் இஸ்லாம்(?)) என்று கூறுகையில் அவர் இம்மதங்களிலிருந்து வேறு படுகிறார் என்று நான் கூறியதுதான். ஆனால் நான் மற்ற மதங்களை ஒப்புக்கொள்பவனல்லன்/ அவற்றை தாழ்வாக நினைப்பவன்/ கடவுள் இல்லை என்று சொல்கிறவன் என்றெல்லாம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன் என்பது நண்பர்களின் எழுத்துகளிலிருந்து தெரியவருகிறது. இது துரதிர்ஷ்டம். எந்த மதமும் உயர்ந்தது என்றோ அல்லது தாழ்ந்தது என்றோ நான் கூறவில்லை. திருக்குறள்தான் அத்தாரிட்டி ஆகையால் மற்ற மதங்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. எந்த மதத்தையும் பற்றி கருத்துச் சொல்லும் அளவுக்கு எந்த மதத்தையும்பற்றி எனக்குத் தெரியவும் தெரியாது. வள்ளுவம் முழுக்க முழுக்க ஒரு ஆன்மிக நூல். அந்த வகையில் பார்த்தால் அது மற்ற மதங்களிலிருந்து மிக முக்கியமாக வேறுபடுகிறது என்பது மட்டுமே என்னுடைய கருத்து.
Today, 06:09:59
– Like – Reply
வெங்கட்
Parimelazhar (பரிமேலழகர்) was singularly responsible for getting Tirukkural for humanity. He appropriated Valluvam into Hindu religion. Later Reverent G.U.Pope did the same when he translated Tirukkural into English by appropriating it into Christianity. (Now it is continued by people like Dr.Deivanayakam and his daughter Dr.Devakala). There are/were few who claim Tiruvalluvar was a Jain. Some claim him to be a Buddhist. My idea is Tiruvalluvar is none of these. If at all one wants to give a name to his religion he may call it as Valluva matham or shortly Valluvam. Any other claim attributed to me is unfortunate.
Today, 06:26:36
– Like – Reply
SKM, USA
Dear Sri. Venkat,

1.//பில் கேட்ஸ்சை நான் கடவுள் என்று எங்கே கூறினேன்?//


நீங்கள் கூறவில்லை.

கடவுளையும் அவர் அமைப்பையும் வித்தியாசப்படுத்திக் காண்பித்தீர். கடவுள் ஏற்படுத்தி வைத்த அமைப்பின் மூலம் நமக்கு வாழ்வின் இயக்கம் நடக்கின்றது, கடவுள் என்னவோ சும்மா தான் இருக்கிறார் என்ற ரீதியில் அமைந்த உங்கள் கருத்துக்கு பதிலளித்திருந்தேன்.

இந்த repetition தவிர்ப்பதற்காகத்தான் quotation போடுகிறேன்.

எங்கே எந்த பொருளுக்கு பதில் அளிக்கிறேன் என்பது உங்கள் பதிலில் இருந்து காட்டும் மேற்கோளைப் பார்த்தால் புரியும்.
Today, 06:51:11
– Like – Reply
SKM, USA
Dear Sri. Venkat,

This is a response to your post starting thus:

//அடுத்து நீங்கள் நினைவு கூர்ந்தீர்களேயானால் இக்கருத்துப்பரிமாற்றத்தின் ஆரம்பம் திருவள்ளுவரை மற்ற மதத்துக்காரர் களெல்லாரும் தங்கள் மதத்துக்காரர் (ஜெயின், புத்தம், இந்து கிருத்துவம் இஸ்லாம்(?)) என்று கூறுகையில் அவர் இம்மதங்களிலிருந்து வேறு படுகிறார் என்று நான் கூறியதுதான். //

I have used only one quote above to indicate which is the post I am responding to. But my answer applies to all the points you raised in this particular post.

My discussion with you has strictly been on the question of "God does not "do" anything" - for and against.

I wish to clarify that my responses to you have not been on the lines of religion but on the idea of "God" in general and His actions.
Today, 06:53:48
– Like – Reply
வெங்கட்
"I wish to clarify that my responses to you have not been on the lines of religion but on the idea of "God" in general and His actions."

Thank you Mr.SKM for your clarification. But i did not need it because I did not attribute the other comments to you either. I was just summarizing the positions or understandings shown by our friends. For your query if I am to reiterate my understanding of Tirukkural I may have to say, "Yes God does not interfere".

A tail piece before I close for the week: Every action of ours (including how we use a bath room) has the potential to become a prayer. If the activity is conducted following the precincts of aram it is a prayer and as such is soul evolving whereas if aram is not followed it is a blame-full and soul dipping act. A soul which is fully evolved reaches God. A person may embody several times before his soul is fully evolved.

Since life on the earth is a training period and its materials - your house, car, your job and whatever you think you possess - are all training materials and therefore are not real whereas God is only Real. This is the key to understand Tirukkural. If you keep this in mind and read any of the 1330 couplets you will find them dancing before you revealing their real meaning. It is a joyful experience which I am under going for few years now.
Today, 09:51:29
– Like – Reply
வெங்கட்
அடக்கம் என்றும் முற்றுப்பெறும் என்றும் இருக்கவேண்டும். இவை என்கண்ணில் பட்டவை. கண்ணில் படாத ஒற்றுப்பிழை மூன்று சுழி இரண்டு சுழி ஆகியனவற்றை சாகுல் சார் அன்பு கூர்ந்து கவனித்து திருத்த உதவவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன். பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்ற ஆவல் காரணமாகத்தான் இவ்வேண்டுகோள்.
Yesterday, 05:16:40
– Like – Reply
SKM, USA
Dear Sri. Venkat,

// தாங்கள் எடுத்தாண்டு உள்ள விவேகானந்தரின் மேற்கோள் மிக அழகாக இந்தக் கருத்தைக்கொண்டு உள்ளது.//

அந்த விவேகானந்தரின் சொற்களை முன் வைத்ததற்குக் காரணம் "கடவுள் ஒன்றும் செய்வதில்லை" என்ற தங்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்தாகத்தான்.

If you look at the first paragraph you will see that he says human beings are caught up in the law of causation. They cannot break free of it unless aided by Divine Grace.

I presented that quote to show you that THAT sort of intervention is what God does all the time.

I deeply admire your knowledge of Thirukkural, and your depth of understanding of it.

But if I may, Sri. Venkat, I believe that your knowledge and understanding will be greatly enhanced if you would do a dedicated reading of at least one other comparable book (if you can do more, that would be greater still). I think that might answer many of your questions. Moreover, I am confident that such an exercise will produce a NUANCED understanding of such matters. Such an understanding, in my humble experience, is the key to understanding many mystical truths.
Yesterday, 21:26:01
– Like – Reply
SKM, USA
Dear Sri. Venkat,

உங்கள் பதிவுகளிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. கடவுள் மனிதர்களின் துன்பங்களில் நேரிடையாகத் தலைடுவதில்லை மற்றும் தண்டனையும் வழங்குவதில்லை எனபது உங்கள் கருத்து என்று நினைக்கிறேன்.

"துன்பம்", "தண்டனை" என்ற இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு கடவுள் மனிதர்கள் வாழ்வில் தலைடுவதில்லை என்று வாதிக்கிறீர்கள்.

சரி.

இதைப் படிக்கும்போது உங்கள் நாசியில் மூச்சுக் காற்று உள்ளே சென்று வருகிறதா? எங்கிருந்து அது வருகிறது? இன்னும் மூன்று மணி நேரம் கழித்து அந்த மூச்சுக் காற்று வருமா? இன்று நீங்கள் உறங்கும்போது நாளை விழித்தெழப் போகிறீர்கள் என்பது நிச்சயமா?

இதை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்?

Forgive my obvious illustration. But I think you need to ask a different question. You are trying to ask and answer -"Does God interfere in human beings' lives?"

Instead, it would make for a truly fruitful discussion if you asked, "Why does God NOT interfere with human beings' lives?"
2 days ago, 22:41:35
– Like – Reply
SKM, USA
Dear Sri. Venkat,

//சரி இவ்வளவையும் அமைத்துவிட்டு கடவுள் என்ன செய்துகொண்டு இருப்பார்? உலகம் என்னும் நாடகத்திரையில் நடக்கும் நாடகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார். நாடகம் பார்க்கும்போது துன்பமான காட்சிகளைக்காணும் நாம் அழுது புலம்புவோம். அருகில் இருப்பவர் அட . . .இது நாடகங்க . . . என்றால் நம் அழுகை மறந்து போகும். கடவுளுக்கு அது தேவையில்லை. அவருக்குத்தெரியும் தீயினால் சுடச்சுட ஒளிர்வதைப்போலத் துன்பத்தில் இருக்கும் ஒருவனுக்கு அத்துன்பம் தன்னுடைய ஆன்மாவைச் செம்மைப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு என்று. //

ஆக, கடவுள் எப்போதுமே சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல முடியாது. நமக்கு துன்பம் வரும்போது மட்டுமே அவர் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார், என்று கொள்ளலாமா?


வெங்கட்
என்னுடைய பேரனுக்கு ஒரு வயது அன்மையில் பூர்த்தி ஆயிற்று. நடந்து பழகவேண்டுமல்லவா? ஆச்சர்யம் பெங்களூரில் எங்கும் பாரம்பரியமான நடைவண்டி கிடைக்கவில்லை. பிளாஸ்டிக் வாக்கர் ஒன்று முதலிலேயே வாங்கி அவன் அதில் நடந்து வந்த போதும் அது இல்லாமல் நடக்க இயலவில்லை. தற்போது கையைப்பிடித்துக் கொண்டு நடக்க பழக்கினோம் என் மகள் அவனுக்கே தெரியாமல் கையை நழுவவிட்டு விடுவாள் அவன் சில சமயம் நிலை தடுமாறி டப் என்று பின்புறமாக விழுந்துவிடுவான் அழுவான் மற்றவர்களெல்லாம் பதறி விட என் மகள் மட்டும் அவனுக்கு ஒன்றும் ஆகாது. நாலு தடவை அவ்வாறு விழுந்தானென்றால் நடக்கப் பழகி விடுவான் என்று கூறியதுடன் யாரும் அவனுக்கு பரிந்துகொண்டு செயல்படவேண்டாம் என்று கூறி விட்டாள். அவனும் விழுந்து எழுந்திருந்து என்று பழக ஆரம்பித்து தற்போது நடக்க ஆரம்பித்துவிட்டான். கடவுளின் செயல்பாடும் என் மகளின் செயல்பாடு போன்றதுதான்.

ஆனால் அதே சமயத்தில் ஒரு முறை அவனுக்கு உடம்புக்கு முடியாத போது இரவு பகலாக கண்விழித்து அவனைக்கவனித்துக்கொண்டாள். அந்த தாய் உள்ளம் கடவுளின் நன்கொடை. அத்தாய் உள்ளம் எல்லாருள்ளும் உள்ளது அத் தாய் உள்ளங்களே துயர் துடைக்க ஓடுகின்றன. இதுதான் கடவுள் செயல்படும் விதம். ஆகவே நான் கடவுள் தலையிடுவதில்லை என திருவள்ளுவர் கூறுகிறார் என கூறியது சரிதானே?
Yesterday, 05:08:51
– Unlike – Reply
Liked by
You
SKM, USA
Dear Sri. Venkat,

//ஆகவே நான் கடவுள் தலையிடுவதில்லை என திருவள்ளுவர் கூறுகிறார் என கூறியது சரிதானே?//

இல்லை. கொஞ்சம் misleading ஆக இருக்கிறது.

தங்கள் பெயரன் நடை பழகும்போது அவனைப் பிடித்துக்கொள்ள வேண்டாம் என்று சொன்னது தாயுள்ளம் தான்.

அவனுக்கு உடம்பு சரியில்லாதபோது பார்த்துக்கொண்டதும் அதே தாய்தான்.

ஆக, உங்கள் உதாரணத்தை வைத்துக் கொண்டு பார்க்கும் போது எப்போது எதைச் செய்ய வேண்டும் என்ற தாயன்பின் தேர்ந்தறியும் பாங்கு தான் மேலோங்கி நிற்கிறது.

எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து செய்வதற்கும், "பார்த்துக் கொண்டு ஒன்றுமே செய்வதில்லை" என்ற கருத்துக்கும் வேறுபாடு இருக்கின்றதல்லவா?

ஒன்றுமே செய்யாமல் இருப்பது போன்ற தோற்றம் இருக்கலாம். ஏனெனில் கடவுளின் வேலைப் பாடுகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். நாம் முழுமையான ஞானிகளாகும்வரை judgment-ஐ reserve செய்துகொள்ள வேண்டாமா?

ரொம்ப சாதாரணமாகப் பார்த்தாலே போதும் இந்த விஷயத்தை.

அவனை அறிந்தவர்களனைவரும் ஏகாதிபத்தியமாகச் சொல்வது இதுதான். God is an experience beyond human intellect.

I get the feeling that you are trying to fit the concept/experience of God within the feeble grasps of the mind. I am of the opinion that this method (the one you are currently adopting) will not give you a satisfactory answer.
Yesterday, 21:09:52
– Unlike – Reply
Liked by
You
வெங்கட்
"ஆக, உங்கள் உதாரணத்தை வைத்துக் கொண்டு பார்க்கும் போது எப்போது எதைச் செய்ய வேண்டும் என்ற தாயன்பின் தேர்ந்தறியும் பாங்கு தான் மேலோங்கி நிற்கிறது.

எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து செய்வதற்கும், "பார்த்துக் கொண்டு ஒன்றுமே செய்வதில்லை" என்ற கருத்துக்கும் வேறுபாடு இருக்கின்றதல்லவா? "

என் பதில் என்னுடைய கமண்டில் இருந்து: அந்த தாய் உள்ளம் கடவுளின் நன்கொடை. அத்தாய் உள்ளம் எல்லாருள்ளும் உள்ளது அத் தாய் உள்ளங்களே துயர் துடைக்க ஓடுகின்றன. இதுதான் கடவுள் செயல்படும் விதம். ஆகவே நான் கடவுள் தலையிடுவதில்லை என திருவள்ளுவர் கூறுகிறார் என கூறியது சரிதானே?
எல்லாருள்ளும் இருந்தாலும் பலருள் மங்கி மக்கி இருக்கக்கூடும். அதனை வெளிக்கொணரத்தான் திருக்குறள் கல்வி தேவைப்படுகிறது என்பது என் கருத்து.
Today, 11:59:30
– Unlike – Reply
Liked by
You
SKM, USA
Dear Sri. Venkat,

This is a response to the points you raised in your post that starts with:

//I know I have agitated your mind and that of Sahul. Let me say some thing which potentially could open my thinking on this subject. //

You have a numbered list of points in that post.

I think I should let Swami Vivekananda answer your question.

--

"Therefore, just as my soul is [to] my body, we, as it were, are the bodies of God. God-souls-nature — it is one. The One, because, as I say, I mean the body, soul, and mind. But, we have seen, the law of causation pervades every bit of nature, and once you have got caught you cannot get out. When once you get into the meshes of law, a possible way of escape is not [through work done] by you. You can build hospitals for every fly and flea that ever lived.... All this you may do, but it would never lead to salvation.... [Hospitals] go up and they come down again. [Salvation] is only possible if there is some being whom nature never caught, who is the Ruler of nature. He rules nature instead of being ruled by nature. He wills law instead of being downed by law. ... He exists and he is all merciful. The moment you seek Him [He will save you].

Why has He not taken us out? You do not want Him. You want everything but Him. The moment you want Him, that moment you get Him. We never want Him. We say, "Lord, give me a fine house." We want the house, not Him. "Give me health! Save me from this difficulty!" When a man wants nothing but Him, [he gets Him]. "The same love which wealthy men have for gold and silver and possessions, Lord, may I have the same love for Thee. I want neither earth nor heaven, nor beauty nor learning. I do not want salvation. Let me go to hell again and again. But one thing I want: to love Thee, and for love's sake — not even for heaven."

From: Complete-Works / Volume 1 / Lectures and Discourses: Soul and God
http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_1/vol_1_frame.htm
2 days ago, 22:44:55
– Unlike – Reply
Liked by
You
வெங்கட்
நிச்சயம் தவறுதல் இருக்கலாம். 80 களில் என்னுடைய டாக்டரேட் மாணவியுடன் திருக்குறளை நாங்கள் புரிந்துகொண்டிருந்த விதத்திற்கும் இப்போது நான் புரிந்துகொண்டு இருப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. தெரப்பிஸ்டாகப் பணி புரியும் அம் மாணவி தற்போதைய என்னுடைய புதிய புரிதலை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னைப்பொறுத்தவரை இன்றைக்கு நான் நினைப்பது இது. பின்னால் மாறலாம். ஆனால் நான் மாற்றத்துக்கு என் உள்ளத்தை எப்போது திறந்ந்து வைத்திருப்பேன் என்ற நிலையிலிருந்து மாறமாட்டேன்.
5 days ago, 07:26:41
– Like – Reply
Liked by
N.S.M. Shahul Hameed
SKM, USA
Guest
வாஹே குரு
Change is the only constant thing in life---Adaptability is the way of life.---WG



No comments:

Post a Comment