Saturday, March 31, 2012

Thirukkural Vs Hinduism - An Analytical Purview


These are excerpts of specific posts and comments exchanged by Thuglak Online Reader Forum (Thuglak Issue dated 29.3.2012) courtesy by Messrs. Cheenu, Venkat and others.

Cheenu 
வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று (பாரதி) பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது. சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி"என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிக்கிறார்கள். அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.'இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினுமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையலியைக் கேட்டுக் கொண்டு தான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்"என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.


திருக்குறளில் பல இடங்களில் வேதநெறி சிறப்பித்துப் பேசப்படுகிறது. வேதத்திலுள்ள பஞ்ச மஹாயக்ஞங்களைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தார் ஒம்பல் தலை.

ராஜநீதி தவறினால் கோ-ப்ராம்மணர்களுக்கு க்ஷீணம் உண்டாகும் என்பது ஒரு முக்யமான வைதிகக் கொள்கை. கோ (பசு) வையும், பிராம்மணர்களையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், கோ தருகிற நெய், பால், சாணம் முதலியனதான் யக்ஞ திரவியங்களில் முக்யமானவை;யாகத்தைப் பண்ணுகிற அதிகாரம் பெற்றவர்களோ பிராம்மணர்கள்- என்பதுதான். இதே மாதிரி கோ-பிராம்மணர்களைத் திருவள்ளுவர் குறிப்பிட்டு, அரசின் நீதித் தண்டம் தவறினால், இந்த இருவராலும் கிடைக்கிற லோக உபகாரம் வீணாகிவிடும் என்கிறார். (Contd..)
2 days ago, 20:00:56
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

'ஷட் கர்ம நிரதர்'என்று பிராம்மணர்களுக்கு உள்ள வைதிகமான பெயரை, அப்படியே மொழிபெயத்து "அறு தொழிலோர்"என்கிறார். அத்யயனம்-அத்யாபனம் (தான் வேதம் ஒதுவது-பிறருக்கும் ஒதுவிப்பது) ; யஜனம்-யாஜனம் (தான் வேள்வி செய்வது-பிறருக்கு வேள்வி செய்விப்பது) :தானம் - ப்ரதிக்ரஹம் (வேள்வியில் தானே தக்ஷிணை தருவது;இம்மாதிரி செலவழிப்பதற்கு வேண்டிய மூலதனத்துக்காகவே பிறத்தியாருக்கு சி¬க்ஷ சொல்லி முடித்தபின் அவர்களிடமிருந்து தக்ஷிணை வாங்கிக் கொள்வது) என்ற ஆறும் தான் பிராம்மணனுக்கு உரிய ஷட்கர்மாக்கள். இது மநுஸ்மிருதியில் சொன்னது. தர்ம சாஸ்திரங்களில் இன்னொன்றான பராசர ஸ்மிருதியில் வேறு தினுசாக ஆறு கர்மாக்களை பிராம்மணனின் நித்யப்படியாக (daily routine -ஆக) சொல்லியிருக்கிறது.

ஸந்த்யா-ஸ்நானம் ஜபோ ஹோமம் தேவதானாம் ச பூஜனம்|

ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட்கர்மாணி தினே தினே|

ஒன்று ஸந்தியாவந்தனம்;அதை ஸ்நானத்தோடு செய்ய வேண்டும். ப்ராம்மணன் பச்சைத் தண்ணீரில் முழுகப் பயப்படவே கூடாது. எப்போது பார்த்தாலும், தினமும் இரண்டு மூன்று வேளையும் ஸ்நானம் செய்யவேண்டும். ப்ராத ஸ்நானம் (விடியற்காலை) , மாத்யான்னிக ஸ்நானம் (பகல்) ஸாயங்கால ஸ்நானம் என்று பண்ண வேண்டும். இப்படி மூன்று வேளையும் ஸ்நானம் பண்ணியே அந்தந்த வேளைக்கான ஸந்தியா வந்தனம், அப்புறம் ஸ்நானம் என்று சொன்னதால், ஸந்தியா வந்தனம் பண்ணிவிட்டுப் பிறகு ஸ்நானம் செய்யவேண்டும் என்று குயுக்தி பண்ணக் கூடாது...

இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் விதண்டாவாதம், மரியாதைக்கு அர்ஹமான (உரிய) விஷயங்களில் கேலிப்பேச்சுக்கு பேசுவதெல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யாள் முடிவாக உபசதேசித்த "ஸோபான பஞ்சக"த்தில் 'துஸ்தர்க்காத் ஸுவிரம்யதாம்'என்று சொல்கிற போது, குதர்க்கமாக, குயுக்தியாக மத விஷயங்களில் அர்த்தம் பண்ணுவதைத்தான் கண்டித்திருக்கிறார். மிகவும் பூஜ்யமான வேதத்தின் விஷயத்தில் இது மிகவும் அவசியம். பவ்யத்தோடு பணிவோடு அதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். வேதாந்த நிர்ணயத்துக்கு நல்ல யுக்திகளை ஒரு பிரமாணமாக ஆசார்யாள் ஒப்புக் கொள்கிறார். குயுக்தி, துஸ்தர்க்கம் (குதர்க்கம்) தான் கூடாது என்கிறார். எந்த அளவுக்குத்தான் மநுஷ்ய அறிவு போக முடியுமோ அந்த எல்லைக்குள்ளேயே அதற்கு அதிகாரம் கொடுத்து வேதத்தை ஆராய்ச்சி பண்ணுவதில் தப்பில்லை. ஆனால், நம் சிற்றறிவுக்கு எல்லையே வகுக்காமல் பூரண அதிகாரம் கொடுப்பதுதான் தப்பு... (Contd..)
2 days ago, 20:05:31
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
ஸ்நானம்-ஸந்த்யா என்றில்லாமல், ஸந்த்யா-ஸ்நானம் என்றதற்குக் காரணம்:பிராம்மணனுக்கு ஸந்த்யா வந்தனம் தான் மற்ற எல்லா அனுஷ்டானங்களைவிட முக்கியமாக இருப்பது. அதனால் அவனுடைய கர்மாவைச் சொல்லும்போது அதற்கே முதலிடம் கொடுத்திருக்கிறது.

ஆறு தொழில்களில் முதலாவது ஸந்த்யா-ஸ்நானம். இரண்டாவது ஜபம் - அநேக மஹாமந்திரங்களை, அவரவர் குலதேவதை இஷ்டதேவதை முதலியவற்றின் மந்திரங்களை ஜபிப்பது. மூன்றாவது ஹோமம், அதாவது யக்ஞம். நாலாவதாக தேவதா பூஜனம் - கந்த, புஷ்ப, தூப, தீப, நிவேதனங்களால் ஈச்வரனை வழிபடுவது. ஐந்தாவதாகச் சொன்ன ஆதித்யம் என்றால் அதிதியை உபசரிப்பது.. அதாவது விருந்தோம்பல். கடைசியில் வைச்வ தேவம். பஞ்சமனும், நாய் முதலான ஜந்துக்களும் உள்பட ஸகலப் பிராணிகளுக்கும் பலி போடுவது வைச்வதேவம்.

இப்படிப் பண்ணுபவர்களைத்தான் 'அறுதொழிலோர்'என்று ரொம்பவும் பெரியவரான வள்ளுவர் சொல்கிறார். கெட்ட ராஜ்யத்தில் பிராம்மணர்கள் வேத அத்யயனம் பண்ண மாட்டார்கள், வேதத்தை மறந்து விடுவார்கள் என்கிறார் - அறு தொழிலோர் நூல் மறப்பர். பிராம்மணர்கள் வேதத்தை மறக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்ட நல்ல ராஜ்யம் ஏற்படவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் ஆசை என்று இதிலிருந்து தெரிகிறது.

தமிழ்த் தெய்வம் என்று சொல்லப்படும் ஸுப்ரமண்ய ஸ்வாமியின் ஆறுமுகங்களை வர்ணிக்கும்போது, சங்க நூலான திருமுருகாற்றுப் படையில், அவருடைய முகங்களில் ஒன்று பிராம்மணர்கள் வேதவிதி தப்பாமல் செய்யும் யக்ஞங்களை ரக்ஷிக்கவே இருக்கிறது என்கிறது.

ஜைன பௌத்த சம்பந்தமே முக்கியமாக உள்ள ஐம்பெரும் காப்பியங்களில்கூட, பல இடங்களில் வேதத்தை, வைதிக தர்மத்தை ரொம்பவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் எங்கே பார்த்தாலும் வர்ணாச்ரம தர்மங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறது;'அந்தணர் ஒம்பலை' விசேஷித்துச் சொல்லியிருக்கிறது; வேத சப்தம், யக்ஞம் ( ஆரண ஒதையும் செந்தீ வேட்டலும் ) இவற்றைக் கொண்டாடியிருக்கிறது என்று புலவர்கள் சொல்லுகிறார்கள். வைச்யனான கோவலன் அநேக வேத கர்மாநுஷ்டானங்களைப் பண்ணினதற்கு அதிலே குறிப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். (Contd..)
2 days ago, 20:08:55
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
தமிழ் வார்த்தைகளும், வழக்கிலுள்ள அநேக வசனங்களுமே, இந்த நாட்டின் வைதிக ஈடுபாட்டுக்குப் பெரிய சான்றுகளாக இருக்கின்றன. 'யஜனம், யக்ஞம்' என்பனவற்றுக்கு 'வேட்டல், வேள்வி'என்ற வார்த்தைகள் பிராசீனமாக இருந்து வருகின்றன. 'சயனம்'என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் 'பரப்பு'என்ற வார்த்தை பழங்காலத்திலிருந்து இருக்கிறது. இம்மாதிரி வேறு நாகரிகத்திலிருந்து வந்த விஷயங்களுக்கு, ஒரு பாஷையில் தனிப்பெயர்கள் ஆதிகாலத்திலிருந்து இருக்க முடியாது. இப்போது கிறிஸ்துவ தேசத்திலிருந்து பைபிள் வந்தால், அதற்கு நாம் 'கிறிஸ்துவ வேதம்' என்று பேர் கொடுத்தாலும், வேள்வி மறை என்பவை போல் இந்தப் பேர் வேரூன்றாமல் பைபிள், பைபிள் என்றேதான் சொல்கிறோம். அதுவுமில்லாமல் அதை வேதம் என்கிறபோது, வேதம் என்று ஏற்கெனவே நம்மிடமிருக்கிற மூல சாஸ்திரத்தின் பேரைக் கொண்டுதான் அதற்குப் பேர் வைத்திருக்கிறோம். பைபிளைத் தவிர வேறு வேதம் நமக்கு உண்டு. ஆனால் வேத யக்ஞத்தைத் தவிர வேறே 'வேள்வி'என்று ஒன்று கிடையவே கிடையாது. 'வேள்வி' என்று தமிழிலே பெயர் இருந்தாலும், வைதிக தர்மத்தில் இல்லாததாகத் தமிழ் நாட்டுக்கு என்று மட்டும் வேள்வி என்ற வேறு கர்மா இருக்கவில்லை. இப்படியே 'மறை'என்றால் வேதம்தான். தமிழிலே வேறே மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை.


இந்த 'மறை' என்ற வார்த்தை ரொம்பவும் ஆழமான, பொருத்தமான பொருள்

கொண்டதாகும். வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு 'ரஹஸ்யம்' என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக்கிறது;உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட ரஹஸ்யமான பாகங்களையே தனியாக 'உபநிஷதம்'என்று குறிப்பிட்டிருக்கிறது. வேதியர்கள் தங்களுக்குள்ளயே ஜாக்ரதையுடன், கொஞ்சமும் அம்பலப் படுத்தி விடாமல் மறைவாக ரக்ஷிக்க வேண்டிய சில பாகங்களை மட்டுமே வேத, உபநிஷத்துக்கள் இப்படிச் சொல்கின்றன. தமிழ் இன்னம் ஒரு படி மேலே போய் வேதம் முழுதையும் 'மறை' என்று சொல்லிவிட்டது!'மறை'என்றால் மறைத்து ரஹஸ்யமாகக் காப்பாற்றப்பட வேண்டியது என்று அர்த்தம். வேதம் அதிலே அதிகாரம் பெற்றவர்களிடம் மட்டும் பேசிற்று. 'இன்னின்ன பாகங்களை நீங்கள் மறைவாகப் போற்றி வாருங்கள் என்று அதிகாரிகளுக்குச் சொல்லிற்று. (Contd..)
2 days ago, 20:16:18
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
தமிழ் பாஷை வேதியர்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஸமஸ்த ஜன சமூகத்தையும் எடுத்துக் கொண்டு பேசும்போது, எப்படி வேதமானது பிராம்மணர்களுக்குள்ளேயே சில பாகங்களை ரஹஸ்யமாக ரட்சிக்க வேணடும் என்கிறதோ, அதே மாதிரி ஸகல வர்ணத்தாரையும் எடுத்துக் கொள்கிறபோது வேதம் முழுதையும் அதில் அதிகாரமுள்ளவர்கள் அதிகாரமில்லாதவர்களிடமிருந்து ரஹஸ்யமாக ரட்சிக்க வேண்டும் என்று கருதியே, முழு வேதத்துக்கும் "மறை" என்று பேர் கொடுத்து விட்டது!அதை எல்லாருக்கும் என்று democratise பண்ணிவிடக்கூடாது என்பதுதான் தமிழ் ஜனங்களின் தொன்று தொட்ட அபிப்ராயம் என்பது "மறை"என்ற இந்த வார்த்தையிலிருந்தே தெரிகிறது.

இன்னொரு விதத்திலும் 'மறை' என்று பெயர் பொருத்தமாயிருக்கிறது. வேதத்தினால் ஏற்படும் பயன் முழுவதும் உடனே தெரிந்து விடாது. ஆத்யாத்மிகமாக அதனால் அடையப்படும் பிரயோஜனங்கள் இப்போது மறைந்திருந்து பிற்பாடுதான் வெளிப்படும். இதனால் வேதமானது 'அதிருஷ்ட பலனை'ச்சொல்வது என்பார்கள். திருஷ்டியில் தெரியாதது தான் அதிருஷ்டம். தெரியாதது என்றால் மறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?எதன் பலன் இப்படி மறைந்திருக்கிறதோ அதை "மறை" என்றே சொல்லி விட்டார்கள்.


நம் மதத்துக்கு வேதம் வேர். பக்தி, கோவில், தியானம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் அது. மூலம் என்றால் வேர் என்றே அர்த்தம். கோவில், பக்தி, பூஜை முதலான மற்றதெல்லாம் வெளியே தெரிகிற அடிமரம், கிளை, பூ, காய், பழம் என்றால் வேதம் வேர். அதனால்தான் அடிமரம் முதலானவை இருக்கின்றன. வளர்கின்றன. ஆனால் வேர் இவற்றைப் போல் வெளியில் தெரியாமல் பூமிக்குள்ளேதான் ஒடிக்கொண்டு மறைவாக இருக்கிறது. இவ் விதத்திலும் மறை என்ற பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.


'ஒத்து'என்றும் வேதத்துக்கு அழகான, அர்த்த புஷ்டியுள்ள தமிழ்ப் பேர் இருக்கிறது. எது எழுதப்படாமல், வாய்மொழியாகவே, அதாவது ஒதப்பட்டே அப்யஸிக்கப் படவேண்டுமோ அதுதான் "ஒத்து". திருக்குறளில் இந்தப் பேர் இருக்கிறது. வடார்க்காடு ஜில்லாவில் திருவோத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஞானஸம்பந்தர் அங்கே ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றினார். திருஒத்து-ஊர் என்பதே திருவோத்தூர் என்பது. வேதங்கள் பரமேச்வரனைப் பூஜை பண்ணின க்ஷேத்ரமாதலால் இப்படி பேர் ஏற்பட்டது. ஸம்ஸ்கிருதத்தில் அதற்கு 'வேதபுரி' என்று பெயர் இருக்கிறது. (Contd..)
2 days ago, 20:17:29
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
மறை, ஒத்து, என்பது போல் "ஆரணம்" என்ற பெயரும் வேதத்துக்கு தமிழ் பாஷையில் இருக்கிறது. "ஆரணன்காண்"என்று அடிக்கடி திருமுறைகளில் வரும். 'வேத வாக்கோ!' என்று கேட்பது, தர்மசாலையை 'சத்திரம்' என்பது, முதலாளியை 'யஜமான்'என்பது, 'ஸாங்கோபாங்கம்'என்பது - இப்படி நடுவே நடுவே நான் சொன்ன ¢நேக விஷயங்களும், வைதிக அநுஷ்டானங்கள் தமிழ் தேசத்தில் எப்படி வேரோடியிருக்கிறது என்று காட்டுகின்றன. எழுதி வைக்காமல் குரு-சிஷ்யன் என்று தலைமுறை தத்துவமாகக் காதால் கேட்டே பாடம் பண்ணப்பட வேண்டிய வேதத்துக்கு 'ச்ருதி'என்று ஸம்ஸ்கிருதத்தில் பேர் இருக்கிறதென்றால், தமிழிலோ 'எழுதாக் கிளவி' என்று இன்னம் அழுத்தமான பேர் இருக்கிறது. 'ச்ருதி என்றால் 'கேட்கப்படுவுது'. இப்படி சொல்வதாலேயே 'எழுதப்படக்கூடாதது'என்று ஊகித்துக் கொள்ளும்படியாக விட்டு விட்டார்கள்.

ஆனால் தமிழிலோ வேதத்தை எழுதக்கூடாது என்று வெளிப்படையாக தெரியும்படியாக 'எழுதாக் கிளவி' என்று பேர் வைத்திருக்கிறது. வேதம் அதற்குள்ள நியமப் படியே ரக்ஷிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசத்துக்கு அவ்வளவு உறுதியிருந்திருக்கிறது!

இப்போது எந்த மதக் காரியமானாலும் 'சடங்கு' என்றுதானே தமிழில் சொல்கிறோம்?இது நான் இனி மேலே சொல்லப் போகும் "ஷடகங்கள்" என்கிற வேதத்தின் ஆறு அங்கங்களை வைத்தே ஏற்பட்ட பேர்தான்.

வேதங்களுக்குப் பிராணன் மந்திரங்கள் என்றால், அந்த மந்திரங்களுக்குப் பிராணன் அக்ஷர சுத்தம். அதாவது, சரியான உச்சரிப்புத்தானே?இது மாறினால் வெளி ஆகாசத்து சலனம் (vibration) , உள்ளே நாடி சலனம் இரண்டும் மாறிப் பலனே மாறிவிடும் என்று சொன்னேனல்லவா?எந்தெந்த அக்ஷரம் சரீரத்தில் எங்கே யெங்கே பிறந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் ரொம்பவும் scientific- ஆக விஞ்ஞான ரீதியில்) சிக்ஷ£ சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. வெளியிலே மநுஷ்யர் காதுபடக் கேட்கிற 'வைகிரி' என்ற சப்தத்துக்கு ஆதாரமாக உள்ளே 'பரா' என்ற சப்தம் இருக்கிறது. 'வைகிரி' வாயில், உதட்டில் வருவது. 'பரா' என்ற மூல ரூபம்தான் மூலாதாரத்தில் நாபிக்குக் கீழே இருக்கிற சப்தம். அது வைகரியாக வாய் வழியே வருவதற்கு முன் பச்யந்தி, மத்யமா என்ற இரண்டு நிலைகள் இருக்கின்றன. (Contd..)
2 days ago, 20:21:55
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
யோக சித்தியில் மேலே போகப் போகத்தான் படிப்படியாக பச்யந்தி, மத்யமா, பரா முதலிய சப்தங்களை கேட்க முடியும். யோகேச்வரர்களான ரிஷிகள் பரா வாக்கையே கேட்கக் கூடியவர்கள். மூலாதாரத்தில் பரா வாக்காக எந்தெந்த சப்தங்கள் இருந்தால், அவை வைகரியாக எல்லா மநுஷ்யர்களும் வெளிப்படக் கேட்கக் கூடியபடி வரும்போது, அவற்றால் தேவதாப் பிரீதியும், லோகக்ஷேமமும், ஆத்மாபிவிருத்தியும் உண்டாகுமோ, அப்படிப்பட்ட பரா வாக்குகளையே ரிஷிகள் அகண்ட ஆகாசத்திலிருந்து கிரஹித்து வேத மந்திரங்களாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விவரங்களைத் தொல்காப்பியத்தில் ரொம்பவும் நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருக்கிற விஷயம் ஸமீபத்தில் தெரிய வந்தது.

பரா, பச்யந்தி என்பவற்றைப் பரை, பைசந்தி என்று என்று பழைய தமிழ் நூல்களிலேயே சொல்லியிருப்பது முன்னமே தெரிந்தது. ஆனாலும் பஞ்சப் பிராணங்களில் உதானன் என்ற மேல்நோக்கிப் போகிற காற்றினால்தான் மூலாதாரத்தில் சப்தங்கள் உண்டாகின்றன என்பது உள்பட, மந்திரயோகம் இத்தனை நுணுக்கமாகத் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறதென்று இப்போது தான் தெரிந்தது. வேத ஸ்வரங்களைத் தூக்கியும், தாழ்த்தியும், ஸமனாகவும், ஸ்வரபேதமில்லாமலும் சொல்வதை உதாத்ம், அநுதாத்தம், ஸ்வரிதம், பிரசயம் என்று சொல்கிறார்கள். அந்த சூட்சுமங்களை எல்லாம்கூடத் தெரிந்து கொண்டு தொல்காப்பியத்தில் சொல்லியிருக்கிறது.

கோவிலில் ஏன் ஸம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்ல வேண்டும்?தமிழில் சொன்னால் என்ன? என்ற ஒரு கேள்வி ஸமீபத்தில் வந்ததல்லவா?அப்போதுதான் நன்றாகப் படித்த தமிழ்ப் புலவர்கள் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு விளக்கிச் சொன்னார்கள். 'மந்திரங்களைப் பொறுத்தமட்டில் எந்த பாஷை என்று பார்ப்பது அடிப்படையிலேயே தப்பு;இங்கே பாஷை, அர்த்தமெல்லாம் இரண்டாம் பக்ஷம்தான். சப்த மாத்திரத்திலேயே ஏற்படுகிற பலன்தான் மந்திரங்களுக்கு இப்படி சப்தத்தினாலேயே கௌரவம், சக்தி இருக்கிறது என்று தொல்காப்பியரே சொல்லியிருக்கிறார்'என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். (Contd..)
2 days ago, 20:24:17
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
அந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள், இங்கே நான் இன்னொன்றையும் சொல்லி விட வேண்டும். உங்களில் ரொம்பப் பேருக்கு அது விசித்ரமாக இருக்கும். அதாவது, வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?அதுவே தப்பு. வேத பாஷைக்கு 'ஸம்ஸ்க்ருதம்'என்று பேர் இல்லை. அதற்குப் பேர் 'சந்தஸ்' என்பதுதான். சந்தஸ் என்றால் சந்தம் (meter) மட்டுமில்லை. சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும்கூட 'சந்தஸ்'என்றே பேர். வேதம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் (லௌகிகமான பேச்சு, எழுத்து, காவியங்கள் ஆகியன மட்டுமின்றி தர்ம சாஸ்திரம், புராண இதிஹாஸம் உள்ப்ட எல்லா விஷயங்களிலும்) பிரயோகமாகிற பாஷக்குத்தான் ஸம்ஸ்கிருதம் என்று பேர். வேத பாஷை சந்தஸ். 'வேத பாஷையில் இப்படி இருக்கிறது'என்று சொல்லுமிடங்களில், வியாகரண சாஸ்திரம் எழுதிய பாணினி, 'இதிசந்தஸி' என்பார். மற்றபடி ஸம்ஸ்கிருதத்தைச் சொல்லும்போது 'இதி லோகே'என்பார்.

ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட- அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்ணப்பட்ட - பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். 'கிருதம்' என்றால் 'செய்யப்பட்டது' என்று அர்த்தம். 'ஸம்ஸ்கிருதம்'என்றால் நன்றாக செய்யப்பட்டது. அப்போது யாரோ உட்கார்ந்து கொண்டு பிரயத்தனப்பட்டு இந்த பாஷையை செய்திருக்கிறார்கள் என்று ஆகிறது. வேத பாஷை இப்படி இல்லையே !அது தானாக flash ஆனது (பளிச்சிட்டது) என்றுதானே இத்தனை நாழி கதை சொன்னேன்? அதனால் அதில் grammar (இலக்கணம்) முக்கியமில்லை. லோகோபகாரமாக இப்படி வந்த சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக grammar முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள். அதனால்தான் Vedic Grammar (வேத இலக்கணம்) , Vedic Prosody (வேதத்தின் யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. வேதத்திலிருந்து ஸம்ஸ்கிருதம் பண்ணப்பட்டது என்பதாலேயே வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை. (contd..)
2 days ago, 20:41:04
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
பிற்பாடு ஸம்ஸ்கிருதம் தானாக வளர்ந்தும், ஸர்வ தேசப் பரிவர்த்தனைகளாலும் அநேக புது வார்த்தைகள் அதில் சேர்ந்த மாதிரி வேதத்தின் பாஷையில் ஏற்படவில்லை. வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை என்பதே, இப்போது நம் தாய் பாஷைகளுக்கு இல்லாத ஸ்தானம் ஸம்ஸ்கிருதத்துக்கு ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேத வித்யையை ஆதரிக்காமல் கோபப்படுகிறவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இரண்டு கால் பிராணி, நாலு கால் பிராணி ஆகிய அனைத்துக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணும் சலனங்களை உண்டாக்கக் கூடிய சப்தங்களையே உடையதான வேத பாஷையும், மற்ற அநேக மந்திர சாஸ்திர மந்திரங்களின் பாஷையும், நாம் நடைமுறையில் சொல்கிற அர்த்தத்தில் பாஷையே இல்லை. அவை ஒரு ஜாதிக்கோ, இனத்துக்கோ உரியன இல்லை. ஸமஸ்தப் பிரபஞ்சத்துக்குமான பாஷை என்று வேண்டுமானால் சொல்லலாம். சந்திரன் எல்லா தேசத்துக்கும் ஜிலுஜிலு என்ற நிலா அடிக்கிறது;சூரியன் லோகம் பூராவுக்கும் ஜீவஸத்தைத் தருகிறது. "எந்த தேசத்து சந்திரன்?எந்த தேசத்து சூரியன்? எங்களுக்கு இது வேண்டாம்"என்பார்களா?

தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லி, "இப்படிப்பட்ட அக்ஷரங்களைப் பற்றி இந்த தொல்காப்பியத்தில் நான் சொல்லப் போவதில்லை. இங்கே சாதாரண மனிதர்களின் காதுக்கு எட்டும் வைகரி சப்தங்களை மட்டுந்தான் விவரிக்கப் போகிறேன். மற்றது, உள் விஷயம், மந்திராக்ஷரம், 'அந்தணர் மறைத்தே'என்று எழுத்ததிகாரத்தில் (102ம் சூத்திரம்) சொல்லியிருப்பதாகவும், ஆதலால் ஆலயங்களில் மந்திர சப்தங்களை மாற்றாமல் ரக்ஷிப்பதற்குத் தொல்காப்பியமே ஆதரவாகத்தான் இருக்கிறது என்றும், அந்தத் தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் காட்டினார்கள். (Contd..)
2 days ago, 20:42:44
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்தது;வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம்; அது வேண்டாம்'என்று நினைப்பது கொஞ்சம்கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தனமும், நல்லதும் நம் பாஷையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்களும் இப்படித்தானே தங்கள் தங்கள் தாய் பாஷையைப் பற்றி நினைப்பார்கள்?அதனால் இநதப் பாஷைதான், அந்தப் பாஷைதான் என்றால் - அதில் துளிகூடப் பகுத்தறிவும் இல்லை;யதார்த்த ஞானமும் இல்லை. ஒரு பக்கத்தில் நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்கவேண்டிய ஆஸ்திக்யத்தை பரிஹாஸம் செய்து, "பகுத்தறிவு, பகுத்தறிவு"என்கிறார்கள். இன்னொரு பக்கத்தில், இப்படி பிரத்யக்ஷத்திலேயே பகுத்தறிவு இல்லாமல் இருக்கிறது!ஒரு பக்கத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என்பதுதான் தமிழ்நாட்டின் தேசாசாரம் என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம், ஆதிகாலத்திலிருந்து இங்கு உறைந்து போய்விட்ட ஸநாதனமான ஸமாசாரங்களைக்கூட எப்படியாவது இல்லாமல் பண்ணிவிட்டால் தேவலை என்று நினைக்கிறோம்!மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்குத்தான் நஷ்டம். மைசூரிலிருந்து காவேரி வருகிறது, வெளிதேசத்திலிருந்து உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மருந்து வருகிறது என்றால், அதெல்லாம் வேண்டாம்; உள்ளூர் ஜலம் கிடைத்தால்தான் குடிப்போம்;உள்ளூர் மருந்தானால்தான் சாப்பிடுவோம்'என்று உயிரை விடுவார்களா?நமக்குப் பெரிய ர¬க்ஷயாக இருக்கிற மந்திரங்களில் பாஷையைக் கொண்டுவந்து, அந்நியம் எனறு ஒதுக்குவது இப்படித்தான். வாஸ்தவத்தில் அது அந்நியமும் இல்லை. நம்மோடு அந்நியோந்நியமாக ஆதிகாலத்திலிருந்து கரைந்ததுதான். (Contd.)
2 days ago, 20:46:55
 Unlike  Reply

Cheenu 
ஆதிநாளிலிருந்து சென்ற நூற்றாண்டு வரை நம் தமிழ் தேசத்தில் இப்படிப்பட்ட பேத உணர்ச்சி இல்லவே இல்லை. ரொம்பவும் தொன்மை வாய்ந்த புறநானூற்றிலேயே, நீண்ட சடாமுடியைக் கொண்ட இறைவன் எப்போது பார்த்தாலும் ஆறங்கத்துடன் கூடிய வேதத்தை ஒதிக் கொண்டிருக்கிறான் என்று இருப்பதாக ஸமீபத்தில் ஒரு கட்டுரையில் பார்த்தேன். இன்னொரு புறநானூற்றுப் பாட்டில் இப்படி வருகிறது - அதாவது:தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கிடையில் எப்போது பார்த்தாலும் குஸ்திதான். இதற்கு மாறாக ஒரு சமயத்தில் சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் மூன்று பேரும் ஒரே இடத்தில் சிநேகத்தோடு சேர்ந்திருந்தார்களாம். அந்தச் சோழ ராஜாவின் பேரே வைதிக ஸம்பந்தமானது- இராசசூயம் வேட்ட பெருநற்கள்ளி என்று அவன் பெயர். இப்படி மூவரும் ஒற்றுமையுடன் சேர்ந்திருப்பதைப் பார்த்தாளாம் அவ்வைப்பாட்டி. அவளுக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. இந்த காட்சியை ரொம்பவும் உசந்த ஒன்றோடு ஒப்பிட வேண்டுமென்று நினைத்துக் கடைசியில், "பிராம்மணர் வீட்டில் கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளும் ஒன்று சேர்ந்திருக்கிற மாதிரி அல்லவா நீங்கள் மூவரும் சேர்ந்திருக்கிறீர்கள்?"என்றாளாம்.

சங்க காலத்துக்கு அப்புறம் பார்த்தாலும், சேர சோழ, பாண்டிய, பல்லவ ராஜாக்கள், எங்கே பார்த்தாலும் பிராம்மணர்களுக்கு 'இறையிலி'யாக (வரியில்லாததாக) நிலம் கொடுத்து ரட்சித்திருக்கிறார்கள். கடிகை என்றும், பாடசாலை என்றும் நிறைய வைத்து, ஏராளமாக மான்யங்கள் தந்து வேத வித்யைகளை வளர்த்திருக்கிறார்கள். தமிழ் மறைகளாக முறையே சைவர்களும், வைஷ்ணவர்களும் கொண்டாடுகிற தேவாரத் திருமுறைகளையும் திவ்வியப் பிரபந்தங்களையும் பார்த்தாலோ, ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது.

பக்தி என்பதுதான் தேவார-திவ்யப் பிரபந்தங்களுக்கு முக்கியம், கர்மா இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், இவற்றைப் பார்த்தால் ஈச்வர பூஜையைவிட ஒரு படி அதிகமாகவே யக்ஞ கர்மாவைத்தான் ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறது. (Contd..)
2 days ago, 20:49:15
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
தமிழில் தொல்காப்பியம் என்று மிகப் பழைய இலக்கண நூல் இருக்கிறதல்லவா? அது அகஸ்திய சிஷ்யர்கள் பன்னிரண்டு பேர்களுல் ஒருவரான திருணதூமாக்கினியால் செய்யப்பட்டது. அந்தப் புஸ்தகத்துக்கு பனம்பாரனார் செய்துள்ள சிறப்புப் பாயிரத்தில், 'அரங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்' என்று வருகிறது. இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதும் போது, 'இங்கே ரிக்-யஜுஸ்-ஸாம- அதர்வ வேதங்களை நான்மறை என்று சொல்லவில்லை. அல்பாயுஸும், அநேக வியாதிகளும், ஸ்வல்பமே அறிவும் கொண்ட கலிகால ஜனங்களான 'சின்னாட் பல்பிணிச் சிற்றறிவின'ரின் ஸெளகரியத்தை முன்னிட்டு, மஹா ஸமுத்ரமாயிருந்த வேதங்களை வியாஸர் நாலாகப் பிரிப்பதற்கும் முற்பட்ட காலத்தில் தொல்காப்பியம் உண்டாயிற்று. ஆகையால், இங்கே நான்மறை என்பவை தைத்தரியம், பௌடிகம், தலவகாரம், ஸாமம் என்ற ஆதிகால வேத பாகங்களே என்று எழுதியிருக்கிறார். திவ்வியப் பிரபந்தத்தில், 'பௌழியா சந்தோகா'என்று வருகிறது. அதில் 'சந்தோகம்' என்பது ஸாமவேதம். 'பௌழியம்'என்பதே மேலே சொன்ன 'பௌடிகம்'. ரிக்வேத சாகைகளில் ஒன்றைச் சேர்ந்த 'கௌஷீதகீ ப்ராஹ்மணம்'என்ற 'பௌஷ்யம்'தான் பௌழியம் என்றும், பௌடிகம் என்றும் ஆகியிருக்கிறது. தலவகாரம், தைத்ரீயம், பௌழியம் என்பவை முறையே ஸாமவேதம், க்ருஷ்ண யஜுர்வேதம், ரிக் வேதம் ஆகியவற்றைச் சேர்ந்த வேத சாகைகளின் பெயர்கள். ஸாமம் மட்டுமே முழுவேதத்தின் பெயர்.
2 days ago, 20:52:31
 Unlike  Reply
Liked by
You
Partha 
Cheenu:
What you have written is interesting. I appreciate this posting of yours. Kural is such universal one we can find similarity with any holly scripture in the world. Valluvar was Hindu and he might have read all the books. He is original from Thamizh. Certain truths are universal and can be found in all.
Yesterday, 03:12:25
 Like  Reply
வெங்கட் 
Mr.Partha how are you? I am afraid you have mixed up two things. Discrimination and certain practices specific to castes. Discrimination would go when the the so called lower caste people become economically well of. In Tamil Nadu itself a caste which was almost treated like untouchable has become a respectable caste as soon as people belonging to that caste became rich. The fact that caste has become informally into two division vouchsafes my hypothesis. Those who are still poor and continue their caste related work are treated alike . Whereas those who have become rich are referred with a respectable title indicating their caste.
Every thing hinges on money. The discrimination of women and widows are slowly going away. I know a number of women who are officer goers not wearing mangalsutra to demonstrate that they would never accept a subordinate position.
2 days ago, 20:25:18
 Like  Reply
Liked by
Partha
Partha 
Venkat:
I agree with you. Once somebody is rich he will be upper caste automatically. Recently I read a article in Hindustan times I think, a dalith was not allowed to go in the main street of a village when he was a boy. He went to Mumbai and learned some trade and become very good in it. He started a small business along with brother. His trade was some thing to do with petroleum industry. Some Middle East businessman joined hand with him in his business. He is now running a small multinational company and worth few million dollars. He went to village in BMW car and helped his people. He built a big house for his mother. The temple which he could not enter as small boy requested money to renovate. He gave them.
Now he is a "Raja" and gets kingly welcome. What a world. Any religion if one has money he is upper caste.
2 days ago, 23:22:54
 Like  Reply
வெங்கட் 
திராவிடக்கட்சியினர் திருவள்ளுவரை கடவுள் மறுப்பாளர் என்று அறிமுகப்படுத்த முயல்வது மோசாமான ஒரு சூழ்ச்சி. ஆனால் அதே சமயத்தில் திருக்குறள் ஒரு இந்து மத நூல் எனக் கூறுவதும் சரியல்ல. சீணு அவர்கள் கூறியுள்ள யக்ஞம் என்பது நான் புரிந்து கொண்டுள்ளது சரியெனில் உலகச் சேமத்திற்காக குறிப்பாக பல இடங்களில் மழைபொழிவதற்காக செய்யப்படும் ஒன்று அல்லவா? அதாவது யக்ஞம் செய்தால் அதனால் மனம் குளிரும் தேவாதி தேவர்கள் அல்லது வருணபகவான் மனம் குளிர்ந்து மழைபொழியச் செய்வான் என்பது பொருள் அல்லவா? உண்மையில் திருக்குறளில் இந்த கோட்பாட்டினை நேரடியாக மறுக்கும்படி ஒரு குறள் உள்ளது. அக்குறள்:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு 18

கண்டிப்பாக தமிழர்கள் வேத முறை இந்து மதத்தை பல ஆயிரம் வருடங்களாக தழுவி வந்துள்ளனர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஆனால் திருக்குறள் இந்து மதத்தின் அடைப்படைக் கொள்கைகளான பூர்வ ஜென்ம கர்ம பலாபலன், நோன்பு நோற்றல் தெய்வம் குற்றம் அதற்கு பரிகாரம் நரகம் போன்ற கருத்துக்களை கொண்டிருக்கவில்லை.

திருக்குறளை ஒரிரு வாக்கியங்களில் சொல்லவேண்டுமெனில் இப்படிக்கூறலாம்: மனித வாழ்வின் நோக்கம் ஆன்ம மேம்பாடு மட்டும்தான். குடும்பம்,தொழில் காதல் ஆகிய மூன்று நிலைகளிலும் திருவள்ளுவர் கூறி உள்ள அறங்களை ஒருவன் கடைபிடித்து வாழ்ந்தானானால் அவன் ஆன்மா மேம்பாடு அடையும். முழுமையாக மேம்பாடு அடைவதற்கு பல பிறவிகள் பிடிக்கும். அதன் பிறகு பிறவிச்சங்கிலி அறுந்து ஆன்மா கடவுளர் உலகு புகும்.

ஒரு டெயில் பீஸ்: செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் அதாவது ஆன்மச் செல்வம். அறம் வழுவிய திறமை ஆன்மச் செல்வமாகாது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.
2 days ago, 21:13:36
 Unlike  Reply
Liked by
You
Partha
Partha 
Venkat when will your book be in the market. I will buy it.
Is it possible to meet you in Chennai?
2 days ago, 23:24:27
 Like  Reply
வெங்கட் 
I live in Bangalore. My mail id is prof_venkat1947@yahoo.co.in Please get in touch with me when you travel at India. My book is about to be printed. I have inserted an add in Thuglak. It would appear on coming coming Thursday. Mostly I will be able to push it before the end of April. After that I have to concentrate on my English book. I want to self publish it through some company in US or Briton. I am benefited a lot by our friends in my effort to understand Tirukkural.
Yesterday, 09:33:55
 Like  Reply
Partha 
When I am in Bangalore I will send you email with my phone number there. I will talk to you if I could not meet you in person. I will be in India for 4 week visit in July. I am looking forward to meet you or talk to you.
Yesterday, 16:36:45
 Like  Reply
வெங்கட் 
Thanks Mr.Partha
Yesterday, 20:33:06
 Like  Reply
Cheenu 
வெங்கட் சார்,
/திராவிடக்கட்சியினர் திருவள்ளுவரை கடவுள் மறுப்பாளர் என்று அறிமுகப்படுத்த முயல்வது மோசாமான ஒரு சூழ்ச்சி.// அவர்கள் திருவள்ளுவரை கடவுள் மறுப்பாளர் என்று கூறவில்லை. திருவள்ளுவர் இந்து மதக்கருத்துக்ளை (வேத) கூறுவதால் அவர்கள் திருக்குறலையும் திருவள்ளுவரையும் மட்டம் தட்டுகிறார்கள். இது ஒன்றே போதும் அவர் இந்து என்பதற்கு. அவர் வேறு மதத்தை சார்ந்தவர் என்றால் இவர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

வள்ளுவர் இந்து மதக்கருத்தை கூறவில்லை என்றால், கீழ்கண்ட குறளை ஏன் எழுதவேண்டும்?

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலங் கரி


//சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு //

இது வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் வரும் குறள் இதில் மனழயின் சிறப்பைத்தான் கூறுகிறாரே தவிற யக்ஞம் செய்வதை அவர் கண்டிக்க வில்லை. உலகித்தில் மனழ இல்லை என்றால் எதுவுமே நடைபெறாது யக்ஞம் உட்பட அதைத்தான் அவர் கூறுகிறார்.
2 days ago, 23:51:53
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
வள்ளுவர் வேதப் பிராமணத்தை மதித்தே குரள் எழுதினார் மிகவும் ஆதரவாக இருக்கப்பட்ட குரள்களில் இதுவும் ஒன்று. திருவள்ளுவர் வைதிக மதஸ்தரே அல்ல. அவர் ஜைனர் அல்லது பெனத்தர் அல்லது எல்லா மதங்களையும் கடந்தவர். வேதம் கூறும் தர்மங்களுள் ஹிமைஸையுள்ள யாகத்தைத் திருவள்ளுவர் வெளிப்படையாகவே கண்டிக்கிறார் என்று சிலருக்கு அபிப்பிராயம். கீழ்கண்ட குரளை மேற்கோள் காட்டுகிறார்கள்.

அவிசெரித்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று

ஹவிஸை அக்னியில் ஆஹ§தி செய்து ஆயிரம் யாகம் செய்வதைவிட, ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமலிருப்பது சிரேஷ்டம் என்று இதன் அர்த்தம். இதைப் படித்த பின்னும்கூட என் அபிப்பிராயமோ திருவள்ளுவர் வைதிக அநுஷ்டானங்கள் அனைத்திலும் பூரண நம்பிக்கை கொண்டவர் என்பதே. காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர். ஆயிரம் கங்கையைவிட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொன்னால், கங்கையும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். காவிரியைச் சிலாகித்துப் பேச விரும்புகிற ஒருவர், ஆயிரம் சாக்கடையைவிட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொல்வாரா. அப்படியே திருவள்ளுவர் அஹிம்ஸையைச் சிலாகித்துப் பேசும்போது, ஆயிரம் யாகத்தைவிட அஹிம்ஸை உயர்ந்தது என்றால் யாகமும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். ரொம்ப உயர்ந்த ஒன்றைச் சொல்லி அதைவிட இது ரொம்ப ரொம்ப உசத்தி என்றுதானே சொல்வது வழக்கம்.

இந்தக் குறள் இல்லர இயலில் சொல்லப்படவில்லை. துறவற இயலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை. அவனுக்கு மட்டுமே வைதிக மதம் பூரண அஹிம்ஸையை விதித்திருக்கிறது. அதையே வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.

உலகத்துக்கெல்லாம் உபயேகமான ஒரு கிரந்தத்தை தந்திருக்கும் திருவள்ளுவர் வைதிகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் இல்லை. திருவள்ளுவர் விருந்து என்று சொல்கிற விருந்தோம்பல் வைதிக மதத்தில் மனுஷ யக்யம் எனப்படும் விருந்தோம்பல் என்பதே. இன்நும் குஞ்சம் விரித்தால் அன்னதானம் எனக் கொள்ளலாம்.
2 days ago, 23:53:57
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
A commentary to Thirukkural widely read and popular among the people until Dravidian chauvinists came up, was the one by the 10th century author 'Parimelazagar'. It shows how the entire book of Thirukkural is a Hindu Dharma sastra. But Dravidian chauvinists dismiss this commentary because Parimelazhagar was a Brahmin and the commentary explains Thirukkural as Hindu sastra written in Tamil. Karunanidhi and DK cannot deny the Hindu nature of Thirukkural, so they are ready to project the author, Thiruvalluvar in any other identity but not as a Hindu. For them Thiruvalluvar could be a Jain or even a Christian, though the image of Thiruvalluvar dated around 14th or 15th century, unearthed in Mylapore in Chennai showed him wearing the sacred thread of the Hindus.
PICTURES
2 days ago, 23:57:10
 Unlike  Reply
Liked by
You
வெங்கட் 
சீணு: “வள்ளுவர் இந்து மதக்கருத்தை கூறவில்லை என்றால், கீழ்கண்ட குறளை ஏன் எழுதவேண்டும்”?

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543

இக்குறட்பா செங்கோன்மை அதிகாரத்தில் உள்ளது. இன்று எப்படி சட்டங்கள் அரசின் அனுபவங் களுக்கும் மக்களின் தேவைகளுக்கும் அறத்தின் முறைமைக்கும் ஏற்ப இயற்றப்படுகின்றனவோ அதுபோல அன்றும் செங்கோன்மை மேலும் மேலும் திருந்தியவாறு இருந்திருக்கவேண்டும் . அடுத்து

அந்தனர் என்போர் அறவோர் மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான் 30

என்ற குறள் மூலம் அந்தனர் என்பவர் யார் என அடையாளம் காட்டி உள்ளார் திருவள்ளுவர். எவ்வுயிர்க்கும் செந்தண்மை என்றால் எல்லா உயிர்களுக்கும் நடுவு நிலையில் நின்று அவரவர் உரிமையைத் துய்ப்பதற்கு ஆவன செய்பவர் அதாவது அருளாளர் என்று பொருள். ஆகவே அந்தனர் என்ற சொல் பார்ப்பனர் எனப்படும் பிராமினைக்குறிக்காது. அவர்களை பார்ப்பனர் என்ற சொல்லாலேயே 134 வது குறளில் குறிக்கிறார். அவர்கள்தான் நீங்கள் முன்னர் குறிப்பிட்ட அறுவகைக் கடமைகளை ஆற்றுபவர்கள். இவ்விளக்கத்திற்குப்பிறகு தாங்கள் குறிப்பிட்டு உள்ள குறளுக்கு என் விளக்கம் கிழே:

அந்தனர் எனப்படும் சான்றோர்கள் தாங்கள் செய்யும் சட்டங்களை செங்கோன்மை செயல்படுத்தப்பட்டு அதனால் வரும் அனுபவங்களுக்கு ஒப்ப எழுதினார்கள் என்று பொருள்படும்.
Yesterday, 04:37:26
 Unlike  Reply
Liked by
You
வெங்கட் 
சீணு: “வள்ளுவர் இந்து மதக்கருத்தை கூறவில்லை என்றால், கீழ்கண்ட குறளை ஏன் எழுதவேண்டும்”?
தாங்கள் கூறி உள்ள இரண்டாவது குறள்:

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560

கொடுங்கோன்மை அதிகாரத்தில் வரும்இக்குறள் மிகப்பழங்காலத்திலிருந்தே தமிழர்களிடையே வேதவிற்பன்னர்கள் இருந்தனர் என்பதைக்காட்டுகிறதே ஒழிய திருவள்ளுவர் இந்து மதத்தைக் கடைபிடித்தவர் என்று கூறவில்லை. மேலும் அறு தொழில்கள் என்பன விவசாயம், நெசவு, அமைச்சுப்பணி, நிர்வாகம்,வர்த்தகம் மற்றும் கற்பித்தல் ஆகியனவற்றைக்குறிக்கும் என்றும் ஆகவே இங்கே அறு தொழிலோர் என்ற சொற் பிரயோகம் வேதவிற்பன்னர்களைக்குறிக்காது என்ற கருத்தும் உள்ளது என்பதை இங்கே நான் நினைவு கூற விரும்புகிறேன்.
Yesterday, 04:52:21
 Unlike  Reply
 
வெங்கட் 
சீணு: “வள்ளுவர் இந்து மதக்கருத்தை கூறவில்லை என்றால், கீழ்கண்ட குறளை ஏன் எழுதவேண்டும்”?

தாங்கள் குறிப்பிட்டு உள்ள மூன்றாவது குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை 43

இல்லறம் அதிகாரத்தில் வரும் இக்குறட்பா இல்லறம் என்னும் நிறுவனம் ஆற்ற வேண்டிய பணிகளை வரையறுக்கும் குறள். திருவள்ளுவர் கூறும் வள்ளுவம் என்னும் மதத்திலும் இப்பணிகள் இருப்பனவே அல்லவா? இதில் இந்து மதத்தைத் திருவள்ளுவர் கடைபிடித்தார் என எங்கு கூறப்பட்டிருக்கிறது?
Yesterday, 05:00:22
 Unlike  Reply
Liked by
You
வெங்கட் 
சீணு: “வள்ளுவர் இந்து மதக்கருத்தை கூறவில்லை என்றால், கீழ்கண்ட குறளை ஏன் எழுதவேண்டும்”?

தாங்கள் குறிப்பிட்டு உள்ள நான்காவது குறள்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலங் கரி 25

கடவுளுக்கு வாழ்த்து பிறகு மழைக்கு வாழ்த்து அதன்பிறகு நீத்தார் அதாவது முற்காலத்தில் வாழ்ந்து மறைந்த சான்றோருக்கு வாழ்த்து என்று திருவள்ளுவர் தந்திருக்கும் அதிகாரமான நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது. ஐந்து பொறிகளின் மூலம் வரும் செய்திகளை வாங்கி அவற்றை அறம் சார்ந்த நெறிக்குட்பட்டுத் துய்க்கும் ஆற்றல் பெற்ற சான்றோர்களது ஆற்றலுக்கு கௌதம முனிவர் இந்திரன் கதையே சரியான விளக்கமாகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். இங்கே உலகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்வையே தன்னுடைய குறளில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மக்களுக்கு நன்கு அறிமுகமாகி இருக்கும் ஒரு கருத்துருவம் imagery பயன்படுத்தப்பட்டு உள்ளது. இச்செயல் திருவள்ளுவரை இந்து மதத்துக்காரர் எனக்காட்டுமா?
Yesterday, 05:13:57
 Unlike  Reply
Liked by
You
வெங்கட் 
சீணு: “வள்ளுவர் இந்து மதக்கருத்தை கூறவில்லை என்றால், கீழ்கண்ட குறளை ஏன் எழுதவேண்டும்”?

//சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு //

சீணு: “இது வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் வரும் குறள் இதில் மனழயின் சிறப்பைத்தான் கூறுகிறாரே தவிற யக்ஞம் செய்வதை அவர் கண்டிக்க வில்லை. உலகித்தில் மனழ இல்லை என்றால் எதுவுமே நடைபெறாது யக்ஞம் உட்பட அதைத்தான் அவர் கூறுகிறார்.”

நான் சொன்னது சரியாக விளக்கமாக இல்லையோ என ஐயம் எழுகிறது. திரும்பவும் முயற்சிக்கிறேன்:

யாகம் செய்தால் மழைபொழியும் என்று இந்து மதம் கூற மழை இல்லாவிட்டால் பொருள்கள் இல்லாமல் போய் யாகமே நின்று விடும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். In the scheme of things as proposed by Tiruvalluvar Yaga does not have an important place is the inference I have drawn. Any how his is only an observation which obviously does not show him as a Hindu. Please remember I am a Hindu minus its rituals ever since my memory goes. But ever since I have become familiar with Valluvam I am slowly moving towards it. In nut shell Valluvam says life in all its three branches namely family, work and love is nothing but prayer. Doing whatever we do in a proper manner is prayer. What is proper is described in Valluvam. A properly lived life will help the soul to evolve and a fully evolved soul will settle with God.
Yesterday, 05:42:26
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
வெங்கட் சார், மன்னிக்கவும் நான் உங்கள் கருத்தில் இருந்து முற்றிலும் மாருபடுகிறேன்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543

பரிமேலழகர் - உரை
அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
மு.வரதராசனார் - உரை - அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
மணக்குடவர் உரை - அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்க்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

இங்கு அந்தண்ர் என்பது பார்ப்பனரை (பிராமணரை) தான் குறிக்கிறது அதோடு அவர்கள் போற்றும் வேதத்தையும் (மறை) நேரடியாக குறிப்பிடுவாதல் இது இந்து மத தொடர்பு உடையதே.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560

பரிமேலழகர் - உரை - காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத காவானாயின் , ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவார். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை).

மு.வரதராசனார் - உரை : நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும். அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

மணக்குடவர் - உரை : பசுக்கள் பால் குறையும், அந்தண்ர் வேதம் ஓதார்; அரசன் காவானாயின் இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

இங்கேயும் அந்தண்ர்களையும், வேதத்தையும், பசுக்களையும் குறிப்பதால் இது இந்து மத தொடர்பு உடையதே.

//தமிழர்களிடையே வேதவிற்பன்னர்கள் இருந்தனர் என்பதைக்காட்டுகிறதே ஒழிய திருவள்ளுவர் இந்து மதத்தைக் கடைபிடித்தவர் என்று கூறவில்லை//
தமிழர்களிடையே வேதவிற்பன்னர்கள் இருந்தனர் என்பதை காட்டவில்லை இந்த குறள் அரசன் முறைதவறினால் அந்தண்ர்கள் வேதத்தை மறப்பார்கள் மற்றும் பசு பால் தராது என்பதை கூறுகிறது, அதோடு வேதவிற்பன்னர்களும் தமிழர்களே.

புலால் உண்ணாமை பற்றி ஒரு அதிகாரம் எழுதிய வள்ளுவரும் புலால் உண்ணாதவராகத்தான் இருந்திருப்பார். அதைவிடுத்து அவர் புலால் உண்ணாமை பற்றி கூறினாரேவொலிய தான் புலால் உண்ணமாட்டேன் என்று எங்கு சொன்னார் என்று கேட்டால் எப்படி?
Yesterday, 07:25:27
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை 43

பரிமேலழகர் - உரை - தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர், விருந்தின்ர, சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட: ஐம் புலத்து ஆறு ஒம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குஸ் சிறப்புடைய அறம் ஆம்.

மு.வரதராசனார் - உரை : தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடைமயாகும்.

மணக்குடவர் - உரை : பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்று மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.

//திருவள்ளுவர் கூறும் வள்ளுவம் என்னும் மதத்திலும் இப்பணிகள் இருப்பனவே அல்லவா? இதில் இந்து மதத்தைத் திருவள்ளுவர் கடைபிடித்தார் என எங்கு கூறப்பட்டிருக்கிறது?// திருவள்ளுவர் வள்ளுவம் என்னும் மதத்தை உருவாக்கவும் இல்லை அதைப்பற்றி கூறவும் இல்லை. இக் குறளில் கூறப்பட்டுள்ள (பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார்) என்பவை வேதத்தில் முன்பே கூறப்பட்டுள்ள கருத்து அதனால் அவர் இந்து மதத்தைத் கடைபிடித்தான் எழுதியிருக்கிறார்.
.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மனழ.

வெறு தெய்வம் தொழாதவனாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மனழ பெய்யும்!
கணவனே கண் கண்ட தெய்வம், கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் என்பவை எல்லாம் இந்து மத வழக்கம் தான். இப்படி என்னற்ற உதாரணம் காட்டலாம்.
Yesterday, 07:37:56
 Unlike  Reply
Liked by
You
வெங்கட் 
பரிமேலழகர் இல்லை என்றால் திருக்குறள் இல்லை. ஏனெனில் அவர்தான் திருக்குறளைக் கண்டுபிடித்து அதற்கு உரை எழுதி அது அழிந்து போகாமல் காப்பாற்றியவர். ஆனால் திருக்குறளை இந்து மதநூலாக ஆக்கரமித்துக்கொண்டவரும் அவர்தான் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

இந்து மதம் கிருத்துவமதம் இஸ்லாம் ஆகியன கடவுளை மையப்படுத்தி இருக்கையில் வள்ளுவம் மனிதனை மையப்படுத்தி உள்ள நூல். நத்தம் போல் உளதாகும் கேடும் என்ற விதியின் எல்லைகளுக்கு இடையில் மனிதனை சுதந்திரமாக செயல்படவிட்டு அச்செயலே தெய்வ வழிபாடெனக் காட்டி உள்ளவர் திருவள்ளுவர்.
Yesterday, 18:48:30
 Unlike  Reply
Liked by
You
Arun 
//இந்து மதம் கிருத்துவமதம் இஸ்லாம் ஆகியன கடவுளை மையப்படுத்தி இருக்கையில் வள்ளுவம் மனிதனை மையப்படுத்தி உள்ள நூல்//

Venkat sir

From what I understood from these exchanges - Hinduism embraces both God-based worship and human values/service based elevation to exalted levels. Sanatana Dharma has elevated several saints to noble heights eventhough they shunned daily rituals and practices (Jabali is a classic example). Why can't we think of Thiruvalluvar in that sense ?

One thing is sure - no one can deny the heavy influence of Santana Dharma/Hinduism, its concepts and its teachings in Thiruvalluvar's Thirukkural. Whether he believed in them or not, only he can clarify :-)

Just my humble opinion.
Yesterday, 21:41:17
 Unlike  Reply
Liked by
You
Cheenu
Singai Sivas 
I just finished surfing through all that has been posted this week (including exchanges and mutual clarification on respective interpretations put forth by Shri Cheenu and Shri Venkat. I fully agree with your inputs above, I never had this much insight about Hinduism, Valluvar and his Thirukkural, thus far..........I feel I stand informed to a greater extent this week, courtesy Shri Cheenu and Shri Venkat. Many thanks to both. It's a long way to go for me to grasp more and more on Hinduism, Thirukkural et al (of course, with prior inputs from Sai as well). Day by day, we continue our mission to learn something new and that's awesome indeed!!
Today, 22:20:36
 Like  Reply  Delete
Cheenu 
//ஆனால் திருக்குறளை இந்து மதநூலாக ஆக்கரமித்துக்கொண்டவரும் அவர்தான் //

திருவள்ளுவர் எழுதிய மூல செய்யுள் (குறள்) இன்று வரை அப்படியேதானே இருக்கிறது. அப்படி இருக்கையில் பரிமேலழகர் இந்து மதநூலாக அதை ஆக்கரமித்துக்கொண்டார் என்பது எப்படி சரியாகும்?? பல குறள்கள் உள்ளங்கை நெல்லிக்கனியாக அதன் கருத்தை தெரிவிக்கின்றன் அவற்றுக்கு உரையே தேவையில்லை.

இந்து மதத்தை கிருஸ்தவதுடனும், இஸ்லாமுடனும் ஒப்பிட்டு மூன்றும் இறைவனை மையமாக கொண்டுள்ளன் என்பது தவறு. மாதா, பிதா, குரு, தெய்வம் இப்படி தெய்வத்துக்கு நான்காவது இடம்தான் இந்து மதத்தில் உள்ளது. அதொடு பகவான் கீதையில் கடமையை செய் (தர்மத்தை ஓட்டி) பலனை எதிர்பார்காதே என்கிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்றுதான் இந்து மதம் சொல்கிறது. வள்ளுவரும் இதைதான் அறத்தை ஒட்டி காரியங்களை செய் என்கிறார். இதில் வள்ளுவரின் கருத்து எங்கு இந்து மதத்தின் கருத்தில் இருந்து மாரு படுகிறது? வள்ளுவம் ஒரு தனி மதம் என்றால், திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்றை வைத்துள்ள தமிழக அரசு வள்ளுவம் என்னும் மதத்தை ஏன் அங்கிகரிக்கவில்லை?
Today, 01:34:50
 Unlike  Reply
Liked by
You
Arun 
Cheenu

If I understood Thirukkural right, Thiruvalluvar talked only about these 3 things - அறம், பொருள், இன்பம் - he did not touch upon வீடு ( மோக்ஷம் ). The idea behind his work was - if you do the first 3 properly, you will reach the fourth stage without any issues.

Venkat sir : Is my understanding atleast in the vicinity of your profound knowledge about Thirukkural ??
Today, 04:01:30
 Unlike  Reply
Liked by
You
வெங்கட் 
Dear Mr.Arun
You have got it exactly correct. The important word is 'proper.' What is proper is spelt out through the 1330 couplets of Tirukkural.
Today, 04:32:43
 Like  Reply
Cheenu 
Arun, you are correct வீடு ( மோக்ஷம் ) is an end result of first three action (proper action).
Today, 07:59:44
 Like  Reply
வெங்கட் 
அன்பு சீணு,
ஆங்கிலத்தில் appropriate என்று சொல்வதைத்தான் ஆக்ரமித்துக்கொண்டார் என்று எழுதினேன். அது சரியான மொழியாக்கம் இல்லை என்பது அது நான் நினைத்த அர்த்தத்தை தங்களிடம் கொண்டு வராததிலிருந்து தெரியவருகிறது. பரிமேலழகர் திருக்குறளை இந்துமதப்படுத்திவிட்டார் என்று கூறினால் Parimelazhar appropriated Tirukkural into Hinduism என்ற பொருள் வருமா? நிற்க.

திமுக ஆட்சியில் கருணாநிதி திருவள்ளுவரை கடவுள் மறுப்பாளர் என்று காட்ட முயற்சித்துக்கொண்டிருந்தார். ஆகவே அவரிடமிருந்து அப்படி ஒன்றை எப்படி எதிர்பார்க்க இயலும்? மேலும் நான் வள்ளுவம் இந்துமதத்தின் அடிப்படைக்கொள்கைகளான கர்மா தியரி, நரகம்,நோன்பு, சன்யாசம் பூசை ஆகியனவற்றை ஏற்கவில்லை. ஆனால் கர்மா தியரியின் வேறு version ஐயும்ஆன்மா மறுபிறவி ஆகியவற்றையும் ஏற்கிறது. ஆகையால் அதற்கு ஒரு பெயர் வைக்கவேண்டுமெனில் வள்ளுவம் என்று அழைக்கலாம் என்றேன்.
எனக்குத் தற்சமயம் தோன்றுகின்ற கேள்விகள் இவை: திருக்குறள் இந்துமதத்தின் பரினாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லோ? அதை பரிமேலழகர் காணத்தவறிவிட்டாரோ? அதன் விளைவாக புதிய மொந்தையில் பழைய கள் என்றவாறு திருக்குறள் ஆக்கப்பட்டு விட்டதோ?
Today, 04:55:34
 Like  Reply
Cheenu 
// திருக்குறள் இந்துமதத்தின் பரினாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லோ? அதை பரிமேலழகர் காணத்தவறிவிட்டாரோ? அதன் விளைவாக புதிய மொந்தையில் பழைய கள் என்றவாறு திருக்குறள் ஆக்கப்பட்டு விட்டதோ?//

எது காலத்தால் மாறாத உண்மையோ அதுதான் வேதம் (மறை). அப்படி இருக்க தமிழ் மறை எனப்படும் குறள் அந்த மாறாத சத்தியத்தை கூறுகிறது இதில் பரினாம வளர்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லை, அப்படி இருக்கும்மானால் இந்த 2000 வருஷங்களில் அல்லது எதிர் காலத்தில் இந்த குறளும் மாற்றத்துக்கு உட்படும். அப்படி இருந்தால் குறளின் சிறப்பே அடிப்பட்டு போயிடும். குறளின் சிறப்பே காலத்தால் மாறாத சத்தியத்தை இரண்டு வரியில் சொல்வதுதான். அதனால் தான்
"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.- என்றால் ஒளவையார்."
இந்த ஒளவையார் பற்றிய சிறப்பை நாம் முதலில் தெறிந்து கொள்ள வேண்டும்.

ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒரு நாள்கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது என்கிறாள்.
ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான "விநாயகர் அகவலை"ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்சேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, "நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்" என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவளுக்குப் பிற்பாடுதான்

சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில்

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய

சேரர்..

இப்படிப்பட்ட ஒளவையார் வேதத்துக்கு புறம்பான் ஒரு நூலுக்கு இப்படி ஒரு சட்டீபிகேட் தருவாரா?
Today, 08:01:49
 Unlike  Reply
Liked by
You
Cheenu 
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பிராமனர் பரிமேலழகர் குறளை காபாற்றி நமக்கு தந்த மிகப் பெரிய்வர். அவர் வேதம் கற்று இந்து மதம் இன்று இருப்பதைவிட சிறப்பாக அறிந்து பின்பற்றப் பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர். தமிழ் மற்றும் ஸமஸ்கிரதம் கற்றரிந்தவர். அப்படிப் பட்டவர் குறளை சரியாக காணத்தவறிவிட்டாரோ என்று சந்தேகப்படுவது நம்மை நாமே எமாற்றிக் கொள்வதுதாகும்.

வெங்கட் சார்,

காஞ்சி மாமுனிவர் கூறியவற்றில் சிலதை இங்கு தருகிறேன்.

//திருவள்ளுவர் குறளை எழுதி அதை அரங்கேற்ற மதுரைக்கு வந்தார். பொற்றாமரைக் குலத்தில் சங்கப்பலகை இருந்தது. திருவள்ளுவர் தம் புத்தகத்தைக்

கொண்டுபோய் சங்கப் பலகையில் வைத்தாராம். குட்டைப் புத்தகம் அது. அதுமாத்திரம் பலகையில் இருக்கப் புலவர்கள் எல்லோரும் குளத்தில் விழுந்து விட்டார்களாம். குரள் அங்கே அரங்கேற்றப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் இன்னார் பண்ணினார், இதில் என்ன உயர்ந்த விஷயங்கள் இருக்கின்றன என்று அதைப் பற்றிப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். திருவள்ளுவ மாலை என்று அதற்குப் பெயர். அதில் ஒருவர் பாடுகிறார்.

ஆரியமும் செந்தமிழும் ஆராயத் திதனினிது

சீரிய தென்றொன்றைச் செப்பரிதாம்-ஆரியம்

வேதம் உடைத்து தமிழ்திருவள்ளுவனார்

ஒது குறட்பா உடைத்து

ஸம்ஸ்கிருதம் உயர்வா. தமிழ் உயர்வா என்று யோசனைப் பண்ணிப் பார்த்தேன். ஸம்ஸ்கிருதமும் தமிழும் சமம்தான். ஒன்று உயர்வு, ஒன்று மட்டம் என்று சொல்ல முடியாது. எதனாலே என்றால், ஸமஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் இப்போது திருக்குறள் வந்துவிட்டது. இது தமிழ் மறை. வேதத்துக்குச் சமமான ஒன்று தமிழில் இல்லை என்றால் ஸமஸ்கிருதம் உயர்வாக இருக்கலாம் திருக்குறள் வேதத்துக்குச் சமானமாக வந்திருக்கிறது. அதனாலே இப்போது இரு பாஷைகளும் சமமாயின என்று இச்செய்யுளில் கவி சொல்லியிருக்கிறார்.//

இங்கே நாம் பார்க்க வேண்டியது இந்த சங்கப் பலகை ஸ்வாமி சுந்தரேஸ்வரர்லால் வழங்கப்பட்டு கோவில் குளத்தில் வைக்கபட்டுள்ளது. இப்படி இருக்க குறள் வேத கருத்துக்கு மாற்றாய் இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு வேதத்துக்கு சமமான ஒன்று என்று கூருவார்களா? அந்த சபையில் இருந்த புலவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா?
Today, 08:06:59
 Like  Reply

Cheenu 
தமக்கு கடுகளவும் சம்மந்தம் இல்லாத திருவள்ளுவரை கிருஸ்தவர்கள் திருவள்ளுவர் கிருஸ்தவர் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் நாம் நம்மவரை எனதவர் இல்லை என்று தூக்கி எறியப்பார்கிறோம். இதற்க்காகதானா பரிமேலழகர் நமக்கு திருக்குறளை தேடி பாதுகாத்து கொடுத்தது? இங்கு நாம் சற்று யோசித்து பார்த்தால் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் நன்மை செய்கிறோமா அல்லது தீமை செய்கிறோமா என்பது புரியும். இன்று வள்ளுவர் கிருஸ்தவர் என்பவர்கள் நாளை வள்ளுவர் தமிழர் இல்லை அவர் ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்து தமிழ் கற்று கிருத்துவத்தை குறள் மூலம் பரப்பினார் என்பார்கள், அதோடு வள்ளுவர் இந்து இல்லை என்பதை இந்துக்கலே எழுதியுள்ளார்கள் என்று கூறக்கூடும்.
Today, 08:27:36
 Like  Reply
Guest 
//ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பிராமனர் பரிமேலழகர் குறளை காபாற்றி நமக்கு தந்த மிகப் பெரிய்வர்.// Why there is so much stress on the word "பிராமனர்" here. What is his caste is do with his work? Some of his commetry were tailered to the prevailing Hindu theology at his time. For that matter kural cannot be a strict Hindu scripture.
Does it matter what religious views are found in kural? It may contain some views from Hindu scrptures. One thing important is it is available for all to read. For this reason this is great book. There is no stigma attached to it as it be read by one group only.
Let us adopt few kural as bed rock foundation of our life and follow it to get the benifit of it. That itself will make our life pleasant.
Today, 18:01:25
 Like  Reply
Guest 
//உலகத்துக்கெல்லாம் உபயேகமான ஒரு கிரந்தத்தை தந்திருக்கும் திருவள்ளுவர் வைதிகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் இல்லை.// Any one who opposes vaithigam need not be athist. He can still believe in God. Why should God be looked through "vaithigam"? I admire more about God when I read astophysics. May one time all wore thread and Valluvar might have had it too. Some aspect in kural may be similar to Hindu scriptures. It is based on Hindu scripture is not correct. Shahul showed how Koran teaching are in kural also.
Yesterday, 00:40:11
 Like  Reply
Liked by
வெங்கட்
Cheenu 
அதாவது, நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?இது தப்பு. ஸ்வாமி இல்லை என்று சொல்லிக்கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும். அப்படிப் பல பேர் இருந்திருக்கிறார்கள். 'இது என்ன வேடிக்கையாக இருக்கிறது?அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன?'என்றால், ஆஸ்திகம் என்றால் வேதத்திலே நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம். ஸ்வாமியிடம் நம்பிக்கை இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை;வேத சப்தங்களின் மந்திர சக்தியில் நம்பிக்கை வைத்து, யக்ஞாதி அநுஷ்டானங்களைப் பண்ணி விட்டாலும் அது ஆஸ்திகம்தான்.

//May one time all wore thread and Valluvar might have had it too// இந்து மதத்தை தவிர வேறு எங்கு பூணல் போட்டு கொண்டு இருந்தார்கள்?
Yesterday, 01:28:04
 Like  Reply
Partha 
Cheenu:
Iranians before Islam had fire worship and they used to have the thread. May be all Hindus had threads and women used to have them. All this I heard from Vedham Venkataraya Sastri. All vedhas as hyms glorifying God. God is much powerful than vedha sabthas. Andal and Meera wrote their own hyms to reach God. Kannaiya Naidu used to tell what you said above. He memorized Rig vedha and belongs to Arya samaj.
Can we say Christians and Muslims will not reach God because they do not know Hindu vedha? Of course they too will reach God.
God is and we are His, no mater one knows vedhas or not.
Yesterday, 03:03:22
 Like  Reply
Cheenu 
Partha,

Read my posting again. I did not say you need to know vedas to reach god. All it says is one who does not believe in vedas are called atheist. There are so many ways to reach god (பக்தி மார்கம், கர்ம மார்கம், ஞான மார்கம்) Andal and Meera followed பக்தி மார்கம்.
Yesterday, 08:06:53
 Like  Reply
Arun 
//Can we say Christians and Muslims will not reach God because they do not know Hindu vedha? //

Hinduism doesn't say such things nor do Hindus propogate/preach such ideas. It is mostly the other way around, that's the problem !!
Yesterday, 12:57:57
 Like  Reply
Liked by
Cheenu
Partha 
Arun :
No one said do not preach Hinduism. In scriptures there is a commandment says "spread your dharma." This is in one of the Upanishads. Shankara Mutt were created for spreading and safe guarding Hinduism. Shankara main idea was that. OK let us assume we have no such obligation to preach Hinduism. Why not preach high ideals to existing Hindus to hold on to it. Many dalith educated told me they need to be reached out by Hindu leaders. All people wants is recognizing them as part of religion and equal treatment. Once in Kanchi mutt I saw people who are dalith meet periyava and he spoke to them and gave kumkum in their hand. They felt so happy to talk to him and feel the sense of belonging.
Yesterday, 16:52:12
 Like  Reply
Arun 
"Spread your dharma" in Hinduism means to educate/enlighten like-minded people with the teachings from various scriptures. It is upto the people to pick what fits them and run with it. It doesn't mean

* Talk bad about other faiths, denigrate local customs/beliefs and banish those people to hell if they don't fall in line.
* Use money and/or threats to forcibly convert people from one faith to another.
* Use social service as a cloak and go soul harvesting to hood-wink the poor and gullible.
* Go to town saying that "My faith is the only truth in this world; rest everything is falsehood and ignorance"

Hinduism doesn't need to resort to such cheap gimmicks to spread its dharma.

Regarding the other points - I have made myself very clear, several times, over and over again in this blog. Whatever differences/problems that crept into Hinduism over several centuries, should be removed - and the responsibility falls on every Hindu to do their part to fix the issues. It is incorrect just to blame one sect of people, corner them and indulge in mudslinging. There are good and bad apples in all communities/sects/faiths - people think twice before painting everyone with the same colour.

If there is one thing that Sanatana Dharma taught us - it is to question ( not stupid ones like what the DMK/DMK thugs do, but queries that come out of genuine interest to understand the concepts) its teachings/beliefs , seek out logical answers and make course corrections rather than blindly follow something to a T.

In order to maintain the sanity of this blog, I am tuning out of this discussion.
Today, 03:45:44
 Unlike  Reply
Liked by
You
வெங்கட்
Cheenu
Partha 
/Hinduism doesn't need to resort to such cheap gimmicks to spread its dharma. / Preaching about Hinuism is not cheap gimmicks it is educating people who are not aware of what is in it. As Hanuman chalisa is recited ruthram and purushashuktam should be recited by all. Then one see the energy flows. I have seen Sai center reciting ruthram and its effects on individuals, Shankara school of thought telling only a group is allowed to recite them is wrong and as Arya samaj and Sai groups says scriptures are given to every one. Social service among hindus by Hindus should increase and every Hindu should adopt a Hindu family and see they come up. Then the outside forces will not act among Hindus. More than abishegam, and havans we need to increase service activity among people. Saibaba set a good example.
Today, 16:51:03
 Like  Reply
Partha 
The term Hindu signifies ‘H: Humility, I: Individuality, N: Nationality, D: Divinity, U: Unity’. These are verily our five life-breaths (pranas). Just as five elements, five senses, and five life-sheaths constitute our physical body; these five principles constitute the very essence of spirituality. Develop the spirit of unity. Never think that you belong to a particular state or country and thereby give rise to differences. Do not identify yourself with vyashti tattwa (individual principle). Instead, identify yourself with samashti tattwa (societal principle) and cultivate unity. Consider truth, righteousness, peace, love and nonviolence as your life-breath and uphold the sanctity of the name human (manava). Never give scope for differences of opinion, even in trivial matters. If any differences were to arise, each should be prepared to forgive the other. All are children of God; all are brothers and sisters. Understand this truth and conduct yourself accordingly.

Saibaba- Divine Discourse, Mar 20, 2007.
Yesterday, 03:23:21
 Like  Reply
KS 
Dear Sri Cheenu!

Thank you for the highly logical and totally educational treatment of the fundmentals. One of the marks of truth, IMHO, is the ability to explain it simply, however complex it may seem from the surface. As I read through your elaborations, I must say it feels eminently understandable and therefore rings quite true.

As India develops it is my fervent hope and prayer that more and more Indians will rise above the rat race and devote energy to systematic research and better understanding of our universal spirtual assets - or rather, the assets that were entrusted to us through our ancesters, for the benefit of the world.

Please continue your splendid work in this regard and by bringing forth such elaborations into the electronic media, help preserve the spirit of the timeless Vedas!
Today, 21:18:10
 Unlike  Reply
Liked by
You