Sunday, December 25, 2011

Sanatana Dharma - Thought for the day (22.12.2011) Part 2

ஹரி ஓம் ! மரியாதைக்கு உரிய அன்பு நண்பர்களே,  
 
கடந்த ஐந்து மாதங்களாக நாம் சநாதன தர்மத்தின் அடிப்படை பற்றியும் அந்த தர்மத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் பார்த்தோம். அது தவிர பல் வேறு விதமான கர்மாக்களும் சடங்குகளும் எதற்காக செய்யப் படுகின்றன என்றும் பார்த்தோம். நாம் தினமும் உட்கொள்ளும் பல்வேறு விதமான உணவு வகைகளும் அதனுடைய ஆன்மிக சம்பந்தம் பற்றியும் அறிந்தோம். இதை வெறும் படித்துணர்தவர்கள் சொல்லவில்லை. பழுத்த ஞானிகளின் மூலம் அறிந்தோம்.  
 
இந்த அடிப்படை அறிவு மிக முக்கியமானது. ஆனால் ,மேற்கூறியபடி, இது வரை நாம் பார்த்தது வெறும் மேலோட்டம் தான். இனி நாம் அந்த மஹா ஞானிகளின் துணையோடு நமது தர்மத்தின் மூலத்தையும் அதன் சிறப்புமிக்க சில விசேஷங்களையும் பார்க்கப் போகிறோம். எதையுமே நுனிப் புல் மேயாமல் அல்லது இல்லவே இல்லை என்று மறுக்காமல் ஒவ்வொரு விஷயத்தையும் அதன் ஆழத்தில் சென்று தீர்மானம் பண்ணுவது தான் சனாதன தர்மத்தின், அதன் ஞானிகளின் சிறப்பு.  
 
இனி நாம் வாரம் ஒரு முறை சநாதன தர்மத்தின் சில முக்கியமான அம்சங்களைப் பார்க்கலாம்.  
நாம் இனி பார்க்கப் போவது:  
 
1 . பக்தி - ஸ்வாமி என்றால் என்ன? இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம், கர்மமும் பக்தியும், உருவமும் அருவமும், மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும், ஆலய வழிபாடு முதலியன.  
 
2. மதம் என்றால் என்ன? எதற்கு மதம் வேண்டும் ?  
 
3. பாப புண்ணியங்கள். பாப புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ள அல்ல கழுவிக் கொள்ள வழிகள்.  
 
4 . வைதீக அல்லது வேத மதம் என்றால் என்ன? அதனுடைய பாகுபாடு, வர்ண தர்மம், சமயமும் சமூகமும், வேற்றுமையில் ஒற்றுமை முதலியன.  
 
5 . பொதுவான தர்மங்கள், விசேஷ தர்மங்கள், பண்பாடு, பரோபகாரம் - இது மிக மிக முக்கியமானதாகும். நமது தர்மத்தில் பரோபகராத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை, வெறுமனே பூஜை, வரட்டு சாஸ்திரம், கர்மாநுஷ்டானம் என்று நம்மிலேயே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு தவறு என்று நமது தர்ம சாஸ்திரங்களை பார்த்தால் புரியும். மனிதம் மட்டுமே வாழ தகுதி உடையவன் இறைவன் படைத்த மற்ற ஜீவ ராசிகளை பற்றியக் கவலை கூட சில மதங்கள் கவலைப் படுவதில்லை. அதை எல்லாம் பார்க்கும் பொது இந்த தர்மத்தின் மேல் மிக மிக மேலான மதிப்பும் பிடிப்பும் ஏற்படுகிறது.  
 
சத்தியம், அஹிம்சை, அன்பு, கருணை, காம குரோதத்தை கை விடுதல், சுயநலமில்லாத பரோபகாரம், உலகின் மீதும் பொருட்களின் மீதும் பற்றை விடுதல், ஜீவன் இருக்கும் போதே முக்தி நிலை போன்ற மிகப் பெரிய தத்துவங்களை உலகில் உள்ள சில மதங்கள் சொன்னாலும் அவை அனைத்தையும் அதை அம்மதங்கள் காரிய ரூபமாக்கித் தரவில்லை. மேற்குரிய அனைத்தையும் எவ்வாறு அப்பியசிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. அதே போல் மற்ற மதங்கள் என்று வரும் போது அவை ஒன்றிரண்டு மகான்களோடு முடிந்து விடுகிறது. தொடர் சங்கிலி போல் அம்மதங்களின் கருத்துக்களை விளக்க வழி வழியாக மஹான்கள் தோன்றவில்லை. இதனால் அம் மதங்களின் கோட்பாடுகள் நன்றாக இருந்தாலும் அவை சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் காலப் போக்கில் பாதை மாறிப் போகின்றன. இதை நம் காலத்திலேயே பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம்.  
 
இந்த உன்னதமான தர்மத்திலோ நமது தர்ம சாஸ்திரங்கள் இவை எப்படி காரிய ரூபமாக செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குவதோடு மட்டுமில்லாமல் பல ரிஷிகள், மஹான்கள் நம் போன்ற மக்களுக்கு அது எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று யுகங்கள் தோறும் தோன்றி இன்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 



இந்த மாதிரி விஷயங்களை வெறுமே படித்துணர்ந்தால் மட்டுமே போதாது. அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விடும். தீர்க்க தரிசனத்தாலும், த்ரி காலமும் உணர்ந்த ஸ்ரேஷ்டமான ஞானிகளால் மட்டுமே இம்மாதிரியான விஷயங்களின் ஆழத்திற்கு சென்று நம் போன்ற சாமானியர்களுக்கு விளக்க முடியும். தலைமுறை தலைமுறையாக இந்த பாரத புண்ணிய பூமியில் பல மஹான்கள் இறைவனின் அவதாரமாக தோன்றி இருக்கிறார்கள். எப்போதெல்லாம் தர்மம் நலியுமோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்று பகவான் கீதையில் கூறிய வாக்குப் படி இன்றும் எண்ணற்ற மஹான்கள் நம்மிடையே மனித உருவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மஹா உன்னதமான மகான் நம் கூடவே 100 வருடங்கள் மனித உருவிலே வாழ்ந்து நமக்கு வழி காட்டினார். கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் மஹாபெரியவரைப் பற்றி சொல்லி மாளாது. அவர் பல நூறு வருடங்களோ அல்லது பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தியோ வாழ்ந்த மஹான் அல்ல. நம்முடன் மனித உருவில் வாழ்ந்த சம காலத்தவர். அவரை அறிந்து அவரின் அருளும், ஆசீர்வாதமும் பெற்ற ஆயிரக் கணக்கானோர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் அந்த நடமாடும் தெய்வத்துடன் நடந்த சம்பவங்களை மயிர்க் கூச்செறிய, மெய் சிலிர்க்க, ஆனந்தக் கண்ணீருடன் சொல்கிறார்கள்.

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சுப்பிரமணியம் ஸ்வாமி, பால் ப்ருண்டன், ராபர்ட் வால்செர், தலாய் லாமா, ர. வெங்கடராமன், நேபால் ராஜா ராணி, கிரீசின் ராணி, MS சுப்புலக்ஷ்மி, அடல் பிஹாரி வாஜ்பாய், பல இஸ்லாமிய பிரமுகர்கள் போன்ற எண்ணற்ற தலைவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும் அவர் செய்த அற்புதங்களும், அருளும் கணக்கில் அடங்காது.

பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள். அவர்கள் செய்த தவமும், செய்து கொண்டிருக்கிற பேரருளும், பேணிக் காக்கும் பேரருளும் எண்ணற்ற பக்தர்களின் வாயிலாக வெளி வந்திருக்கிறது. அப்படிப் பட்ட அருள் துளிகளில் சிலவற்றை நாம் பாப்போம். அவரை ஏன் எல்லோரும் (அவரைத் அறிந்த பிற மதத்தவர் உட்பட) ‘பரமாச்சாரியார்’, ‘மஹா பெரியவர்’, 'நடமாடும் தெய்வம்' என்று அழைத்தார்கள் என்று புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அவரைப் பற்றிய சில அனுபவங்களை இன்னொரு கார்டூன் பகுதியில் வாரம் தோறும் பதிவு செய்கிறேன்.

அனனவருக்கும் அந்த மஹானின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும். லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து !
ஸ்வாமி  
----------------  
 
ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இன்ன இஞ்சினியர் கட்டினார் என அறிகிறோம். ஒரு வண்டியைப் பார்த்தால் அதைச் செய்த ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். விசாரித்துப் பார்த்தால் இன்ன தச்சன் செய்தான் என்று அறிகிறோம். ஒரு வீடு அல்லது ஒரு வண்டி என்றால் அதில் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று இசைவாக சேர்ந்து அமைந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட பிரயோஜனத்தை உத்தேசித்து அவை இவ்வாறு உருவாக்கியிருப்பது தெரிகிறது. எனவே, இந்த வீடு, இந்த வண்டி ஏதோ தானாகவே அகஸ்மாத்தாக (accidental) ஆக உண்டாகிவிடவில்லை. இதை உச்சத்தோடு ஒர் அறிவே செய்திருக்கிறது. என்று ஊகிக்கிறோம். ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுப் பல வஸ்துக்களைப் சேர்த்து உண்டாக்கியிருக்கிற எதைப் பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.  
 
அப்படியானால் எத்தனையோ ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தைச் செய்தவனாக ஒருவன் இருக்கதானே வேண்டும்? எத்தனையோ வேறு விதமான வஸ்துக்களைப் பலவிதங்களில் சேர்த்து வைத்து, பலவிதமான பிரயோஜனங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிற இயற்கையை, லோக வாழ்க்கையைப் பார்க்கிறபோது, இவைகளை எல்லாம் இந்த உத்தேசத்திற்காகவே உண்டாக்கி, இவற்றை நடத்தி வருகிற ஒரு மகா பெரிய சக்தி இருக்கத்தான் வேண்டும் என்று தெரிகிறது.  
 
நாம் உட்கார்ந்திருக்கும் இந்தக் கொட்டகையை யார் போட்டார்கள் என்றால் சொல்லத் தெரிகிறது. இந்த வாழை மரத்தை யார் செய்தார்கள்? கண்ணில் காட்டும் படியாக அதைச் செய்தவனைச் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் ஒருவன் அதைச் செய்திருக்கிறான். அதனால் இப்படி பட்டை பட்டையாகக் கணக்குப் பிசகாமல் உள்ளுக்குள்ளே அடுக்கிக்கொண்டே இந்த வாழை உண்டாகியிருக்கிறது. எந்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு அந்த ஒருவன் இத்தனை அழகாகப் பட்டைகளை அடுக்கினான் என்றால் தெரியவில்லை. இப்படியே அந்த மலையை, இதோ மேல் உள்ள நக்ஷத்திரங்களை, சந்திரனைச் செய்தவனை நம்மால் காட்ட முடியவில்லை. இவையெல்லாம் எத்தனையோ காலம் முன்னால் உண்டானவை. செய்தவனை எப்படிக் காட்டுவது என்று கேட்கலாம். சரி, இந்த ரோஜாப் புஷ்பம் இருக்கிறதே, இது அந்த வாழையைவிட சற்று சமீபத்தில் உண்டானதுதான். முந்தநாள் சிறு மொட்டாக இருந்தது. இப்போது அழகிய பூவாகியிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான இதழ்கள், ஒவ்வொன்றிலும் நுண்ணிய நரம்புகள், வாசனை எல்லாம் வந்திருக்கின்றன. நம் கண்முன்னமே இது மலர்ந்தது. ஆனாலும் மலர்த்தினவனை நமக்குத் தெரியவில்லை.  
 
மனிதன் எல்லாம் தெரிந்த கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு காட்டுமிருகம் சென்னைப் பட்டணத்தைச் சுற்றி வந்தால் எதுவுமே தனக்குத் தெரியவில்லை என்று எப்படி ஆச்சரியப்பட்டுப் பார்க்குமோ, அப்படித்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். மனிதனைவிடக் கெட்டிக்காரனாக ஒருவன் அவனை இப்படி வைத்திருக்கிறான்.  
 
அத்தனை ரோஜாப் பூக்களும் ஒரே தர்மத்தில் மலர்வதால், அத்தனை மலைகளும் ஒர் தர்மத்தில் நிலைத்து இருப்பதால், அத்தனை நக்ஷத்திரங்களும் ஒரே தர்மத்தில் சுற்றுவதால், இந்தச் சகலத்தையும் செய்தவன் ஒரே இஞ்சினியர் என்று தெரிகிறது. ஒரே ரீதியில், காரண காரிய விதியில், பிரபஞ்சம் முழுதும் கட்டுப்பட்டிருந்தால், இதைச் செய்தது ஒர் அறிவு எனத் தெரிகிறது.  
 
கெட்டிக்காரன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனிதன், இத்தனையையும் இவனையும் செய்த அந்த மகா கெட்டிக்காரனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவன் மகா கெட்டிக்காரன் மட்டுமல்ல, மகா நல்லவனுங்கூட, இத்தனையை திட்டமிட்டுப் படைத்த பேறறிவு என்பதோடு, இத்தனையையும் ரக்ஷிக்கும் பெரும் கருணையும் அவன். நமது கெட்டிக்காரத்தனமும் அவன் தந்ததே என்று தெரிந்து கொண்டு அவனிடம் பிரார்த்தித்து கொண்டால் நமக்கு அவன் நல்லது செய்வான்.  
 
அவன்தான் ஸ்வாமி. ஸ்வாமி என்பவன். 
இந்த நமது கெட்டிக்காரத்தனமே அவனுக்கு ஒர் அடையாளம்தான். கள்ளனைக் கண்டுபிடிக்க மண்ணில் பதித்த காலடிச் சுவடு இருக்கிறதுபோல், உள்ளம் கவர் 'கள்வ'னான ஸ்வாமியின் காலடி, பிரபஞ்சத்தின் எல்லா இடத்திலும் பதித்து கிடைக்கிறது. நம் கெட்டிக்காரத்தனமும் அவனது காலடி அடையாளம்தான். இந்தக் கெட்டிக்காரத்தனத்துக்கெல்லாம் ஒர் ஆதாரம் இருக்க வேண்டும் என்று அது காட்டிக் கொடுப்பதால் அதுவே காலடியாகிறது. சிருஷ்டிகார்த்தனாக ஒரு ஸ்வாமி இருப்பதற்கு நாமே அடையாளம். நாம் ஒவ்ஒருவர் உள்ளங்கையிலும் அவன் தினுசு தினுசாகப் போட்டுள்ள ரேகை மாதிரி நம்மால் போட முடியுமா? இந்தப் பட்டணம் முழுவதிலும் அநேகம் மனிதர்களின் கெட்டிக்காரத்தனத்தால் செய்துள்ள காரியங்களைவிட அதிகமாக ஒரு சிறு இலையில் போட்டிருக்கிற ரேகைகளில் விசித்திரம் செய்திருக்கிறான் அவன். பிரபஞ்ச வஸ்து எல்லாமே அந்த மகா திருடனின் ரேகை அடையாளம்தான், திருடன் பதுங்கியிருப்பதுபோல் இவனும் பதுங்கியிருப்பவன்தான். அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பித் திரும்பித் சொல்லும்.

நம் இதயம்தான் அந்தக் குகை. நமக்குள்ளேயே ஒளிந்து கொண்டு நமக்கு வெளியே இத்தனை அற்புதங்களைச் செய்து, நம்மை ஆச்சரியப்படுத்தித் தன்னை தேட வைக்கிறான் ஸ்வாமி. அப்படி அவனைத் தேடுகிறதுதான் பக்தி .

- காஞ்சி மஹா ஸ்வாமிகள்
[Above excerpts and thoughts on / from Shri Kanchi Paramaacharya courtesy Sri Sai, Thuglak Online Reader Forum posts on Thuglak dated 22.12.2011]

Sanatana Dharma - Thought for the day (22.12.2011)


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.
திருப்பாவை 7. பரந்தாமன் புகழ் பாடும் பாடல்

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

விளக்கம்: பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் "கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. "கேசவன் என்ற சொல்லுக்கே "தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள
மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.
திருப்பாவை பாடல் 8:  
 
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு  
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்  
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை  
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய  
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு  
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய  
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்  
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.  
 
பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.  
 
விளக்கம்: திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.
திருப்பாவை பாடல் 9:  
 
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய  
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்  
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்  
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்  
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?  
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?  
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று  
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.  
 
பொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.  
 
விளக்கம்: உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடையபகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.
ஆழ்வார்கள் திருப்பள்ளிஎழுச்சி BY ஆண்டாள் :  
 
From the Sixth to the Fifteenth Pasurams, ANDAL is said to have awakened Her “Fathers”, the Ten Azhwars excluding Madhura Kavi, who is adakkam in Swamy Nammazhwar . These ten Thiruppavai Paasurams (6-15) are considered the 'Azhwarkal Thirupalli Yezhuchci' Paasurams. The First Azhwar to be awakened according to this view is Her Own Acharyan and Foster Father பெரியாழ்வார் in “புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்” paasuram. “கீசு கீசு என்று” Paasuram is linked to குலசேகராழ்வார் and “கீழ் வானம் வெள்ளென்று” is associated with ஸ்வாமி நம்மாழ்வார், “தூமணி மாடத்து” is connected to திருமழிசை ஆழ்வார். The three Mudal Azhwars' Thirupalliyezhucchis are connected to the 10th, 11th and the 12th Paasurams. With Her ஞான திருஷ்டி, ANDAL is said to have awakened the remaining Three Azhwars, who incarnated after Her (viz)., தொண்டரடிப்பொடியாழ்வார் , திருப்பாணாழ்வார் and திருமங்கையாழ்வார் in her 13th, 14th and 15th paasurams.


திருப்பாவை பாடல் 10:  
 
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!  
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்  
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்  
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்  
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும்  
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?  
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!  
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.  
 
பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொன்னாõர்கள். நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பலின் இருப்பிடமே! கிடைத்தற்கரிய அணிகலனே! தடுமாற்றம் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.  
 
விளக்கம்: கோயிலில் திருவிழா என்றால், இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே நிற்கிறோம். இது சுயநலம். நம்மோடு மற்றவர்களும் சேர்ந்து பார்க்க வேண்டும் என அவர்களுக்கும் இடம் கொடுத்தால், அது பொதுநலம். ஆண்டாள் தான் மட்டுமின்றி, எல்லாரும் இறைவனை அடைய வேண்டும் என்று அழைக்கிறாள். புறப்படுவோமா?


THULASI MAHATHMYAM  
Salutation to Sriman Naarayanan and His glories are housed in the passage “Naarat thuzhai  
mudi Naarayanan”. Here the Lord is invoked in the form of wearing the sacred Thulasi on  
His Siras to assure us that His Vratham is to give the boon of Moksham for those, who perform  
Saranagathi at His feet (nammai porra Parai tharum Punniyan).  
ThuLasi's glory is also indicated in this Paasuram (narra Thuzhai Mudi Naarayanan).  
“naarra Thuzhai” is fragrant Thulasi adorning His Siras (over the Kiritam). It has been  
presented by Soodikkoduttha Naacchiyar earlier. Lord Krishna says in this context in Maha  
Bharatham: “Among Pushpams, Thulasi flower is the most sacred”.  
Blue Lotus is lofty in status, when it is used in Bhagavath Aaradhanam; Red Lotus flower is  
loftier than blue lotus; the hundred petaled red lotus is loftier than the ordinary red lotus with  
fewer petals; PundarIkam (1000 petaled lotus) is more venerable than the 100 petaled variety of  
red lotus. Svarna Pushpam is loftier than the PundarIkam; even loftier in hierarchy of  
venerable flowers is Thulasi. It tops the list.  
ThuLasi was born during the time of the churning of the milky ocean (amrutha Matanam) by  
the Lord. The Thulasi flower, leaves, kattai/log (Kaashtam) and root are all important in  
Bhagavath Aaradhanam, Pithru Srardham and Yaagams/Yaj~nams. At Oppiliappan Koil,  
Sravana dheepam has at its center Thulasi Kaashtai covered by rags. This Kshethram is  
Thulasi Vanam. At Srivilliputthur, ANDAL incarnated at the foot of a Thulasi plant. During  
the month of Marghazhi, any one performing Pongal naivedhyam for Lord Vishnu cooked in the  
fire made from Thulasi Kaashtai obtains indescribable auspiciousness; so does one, who is  
cremated with Thulasi Kaashtai sambhandham. He ascends to Vaikuntam. In Maasi Ratha  
Sapthami and Ekadasi, naivedhyam for Perumal with food cooked over Thulasi Kaashtai  
gives the palan of 1000 year long Aaradhanams. Infinite indeed are the glories of Tulasi and  
the Tulasi Vana Sudari, ANDAL


திருப்பாவை பாடல் 11 :  
 
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து  
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்  
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே  
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்  
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்  
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட  
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ  
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.  
 
பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?  
 
விளக்கம்: நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.


திருப்பாவை பாடல் 12:  
 
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி  
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர  
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!  
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி  
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற  
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்  
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!  
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.  
 
பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?  
 
விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.  
 
SUMMARY OF SRI PERUKKARANAI SWAMY'S SVAPADESAM  
Mother MahAlakshmi thinks about Her young children (chEthanams) and She has nirvEdham  
for them because of their suffering and takes great pity (daya) on them. She feeds them the  
milk of JnA~na through Her breasts (mulai vazhiyAha) copiously until the heart of the  
chEthanam is drenched (“ninRu sOra nanaitthu seRu aakkum”) and the chEthanam becomes  
the possessor of limitless, evergrowing Jn~Ana sampath. Oh beautiful lady, the sister of the  
possessor of such visEsha Jn~anam! Please achieve through pancha samskAram the vivEkam  
banishing dEhathma bramam and take refuge at the sacred feet of the Lord, who is the  
embodiment of Sathyam, Jn~Anam, anantham, amalam and Aanandam. That prapatthi  
removes ancient prArabdha karmAs. It is easy to practice by anyone. Knowing how easy it is to  
practice, please awaken. The BhagavathAs around You have known the KshaNa phala  
daayakam of Prapatthi and have performed Prapatthi. Why you alone have the tendency to stay  
in the darkness of SamsAra kaaLa Raathri?





[Above Thiruvembaavai excerpts courtesy Sri Rajagopal, Thuglak online Reader forum posts dated 22.12.2011]

திருவெம்பாவை 6.  
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை  
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே  
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ  
வானே நிலனே பிறவே அறிவரியான்  
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்  
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்  
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்  
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6  
 
தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,  
"நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு,  
வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா  
பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும்  
அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி  
நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடிய  
கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத்  
தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !  
எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான  
சிவபெருமானைப் பாடு !  
 
நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்; ஊன் - உடல்.
திருவெம்பாவை 7.

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?!
பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம்
பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்று
சொல்லுவாய். "தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி
முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய்.
எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !"
என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.
இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம்
கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே !
தூக்கத்தின் தன்மை தான் என்னே !

உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.

திருவெம்பாவை 8.  
 
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்  
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்  
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை  
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ  
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்  
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ  
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை  
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8  
 
தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.  
இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.  
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்  
பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த)  
பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?  
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற  
பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்  
முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !  
 
குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);  
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;  
ஏழை - பெண்(சக்தி).

திருவெம்பாவை 9.  
 
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே  
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே  
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்  
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்  
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து  
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்  
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்  
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9  
 
பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே !  
இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !  
உன்னைப் பிரானகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான  
நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்; அவர்களுக்கே  
நண்பர்களாவோம்; அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம்;  
அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப்  
பணி செய்வோம். இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால்  
எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !  
 
பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு  
- அடிமை



திருவெம்பாவை 10.

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக்
கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய
மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ
ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும்
துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற
குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார்
உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.

திருவெம்பாவை 11.  
 
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்  
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி  
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்  
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்  
மையார் தடங்கண் மடந்தை மணவாளா  
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்  
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்  
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11  
 
வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து  
நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த  
அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற  
நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறிய  
இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின்  
மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில்  
உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் !  
நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !  
 
மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;  
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

திருவெம்பாவை 12.  
 
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்  
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்  
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்  
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி  
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்  
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்  
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்  
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12  
 
பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக  
நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன்; தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி  
ஆடுகின்ற கூத்தப்பிரான்; இந்த விண்ணையும், மண்ணையும், நம்  
எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும்  
வருபவன்; அவன் புகழைப் பேசியும், வளைகள் ஒலிக்கவும்,  
மேகலைகள் ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள்  
ரீங்காரமிடவும், பூக்கள் நிறைந்த இக்குளத்தில் ஈசனின்  
பொற்பாதத்தை வாழ்த்திக்கொண்டே நீராடுங்கள் !  
 
குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; குழல் - கூந்தல்.


[Above Thiruvembaavai excerpts courtesy Sri Cheenu, Thuglak Online Reader forum posts on Thuglak dated 22.12.2011]

The Divine is not separate from you. You are the Divine. This conviction must grow in you. In the beginning you regard yourself as a mere human being. Then gradually you realize your potential divinity. Finally you realize your own inner Divinity. Embark on this journey to attain union with the Divine from now. Time waits for no one. Concentrate all your efforts to realize God. The primary requisite is the elimination of the ego; without this, the bliss of Divinity cannot be experienced. Ostentatious worship, wealth, power and position will not help you in the spiritual quest. They cannot confer peace or remove the fear that haunts man all the time. Only the man of faith is completely free from fear. Hence develop faith in God and lead a God-directed life. The one who is conscious of one’s faults is blessed. Equally blessed are those wh o see the good in others.  
 
 
Sathya Sai Baba- Divine Discourse, Dec 25, 1987

Jesus sacrificed his life for the regeneration and welfare of mankind. He also proclaimed the truth: One Spirit resides in all beings. He said, “All lives are one, my dear son. Be alike to everyone." You must regard the body as the temple of the Spirit; bear in mind that Divinity is ever within you. Human body is a vesture for the Spirit. Only when you realise this truth can you begin to experience the Divine. Remember, wherever you may go, the Eternal Spirit remains with you. People may be different in form and name, in colour and nationality, and from varied historical circumstances. But God has no such differences. Hence you should not cavil at any religion or attack it or deride it. You may profess whatever faith you like. But you should not disparage another's beliefs. It is a travesty of devotion. We must always respect the div ine that is in every being.  
 
Sathya Sai Baba- Divine Discourse, Dec 25, 1985.

When you enter sincerely into the path of spiritual practice, the urge to find faults in others or to publicise one's own excellence will disappear. When you yearn to reach God, you have to observe the guidelines and walk along the stipulated path; every step will bring you nearer. When you need to reach a village, you have to rise and move towards it; it will not rise and come towards you! Similarly, when you need to reach God, rise and move, as He has directed you to! By this means alone, can you make life worthwhile. Jesus taught simple practical lessons in spiritual advancement for the good of mankind; Jesus exhorted people by precept and example to cultivate the virtues of charity, compassion, forbearance, love and faith. If you are a sincere aspirant, celebrate His birthday in a spirit of dedication, deepening the faith in your hearts an d revering His doctrines through more intense practice.  
 
Sathya Sai Baba- Divine Discourse, Dec 24, 1972

[Above Sathya Sai Baba - Divine Discourse excerpts courtesy by Sri Paartha, Thuglak Online Reader Forum posts in Thuglak dated 22.12.2011]

Tuesday, December 20, 2011

Sanatana Dharma - Thought for the day (15.12.2011) Part 2

Payasam  
--------------  
 
Payas (in Sanskrit) means milk. So payasam literally means 'a delicacy made of milk'. This term does not refer to the rice and jaggery used to make payasam. They go with the term without saying. Actually payasam is to be made by boiling rice in milk (not water) and adding jaggery. These days we have Dhal payasam, rava payasam, semia peyasam and so on, using other things in the place of rice.  
 
Vaishanavas have a beautiful Tamil term 'Akkaara Adisil' for payasam. The 'Akkaar' in this term is a corruption of the Sanskrit 'sharkara'. The English term 'sugar' is from the Arabian 'sukkar', which in turn is from this Sanskrit term. The same term also took the forms 'saccharine' and 'jaggery'. And the name of the dish 'Jangiri' is from the term jaggery.  
 
-Shri Kanchi Maha Swamigal



Kanji (Porridge)
----------------------

Before we become satiated with madhuram (sweetness), let us turn our attention to a food that is sour. As an alternative to sweetness, our Acharyal (Adi Sankara) has spoken about sourness in his Soundarya Lahiri.

Poets describe a bird called cakora pakshi that feeds on moon-beams. Sankara says in Soundarya Lahiri that the cakora pakshi were originally feeding on the karunya lavanyamruta (the nectar of compassion and beauty) flowing from Ambal's mukha chanran (moon like face). They got satiated with that nectar and were looking for somthing sour, and spotted the full moon, which being only a reflection, issued only sour beams!

Acharyal has used the term kanjika diya, which gives an evidence of his origin in the Malayala Desam. He said that since the cakora pakshis were convinced that the nectar from the moon was only sour kanji, they chose to feed on it as an alternative.
The term kanjika means relating to kanji, but the word kanji is not found in Sanskrit. It is a word current only in the Dakshinam (south). There too, kanji is special in Malayala Desam where even the rich lords used to drink kanji in the morning. This was the variety came to be known as the 'Mayalayam Kanji'.

Kanji is good for deham (body) as well as chittam (mind). And less expensive. You just add a handful of cooked rice rava (broken rice), add buttermilk, salt and dry ginger, which would be enough for four people.

The buttermilk added must be a bit more sour. The salt too must be a bit more in quantity. With the slight burning taste of dry ginger, the combination would be tasty and healthy.

-Shri Kanchi Maha Swamigal
Tambulam  
---------------  
 
It is customary to have tambulam at the end of a South Indian dinner. In the North, taambUlam is popularly known as paan,  
which is usually a wrap of betel nut and other allied items in a calcium-laced pair of betel leaves. In the South, tambulam  
is usually an elaborate and leisurely after-dinner activity. People sit around a plate of tambUlam items, drop a few cut or  
sliced betel nut pieces in their month, take the betel leaves one by one leisurely, draw a daub of pasty calcium on their  
back and then stuff them in their mouth, chatting happily all the while.  
 
The betel leaf is known by the name vetrilai in Tamil, literally an empty leaf. Paramacharya once asked the people sitting  
around him the reason for calling it an empty leaf. When none could give the answer, he said that the usually edible plants  
don't just stop with leaf; they proceed to blossom, and bear fruits or vegetables. Even in the case of spinach or lettuce, we  
have to cook them before we can take them. Only in the case of the betel leaf, we take it raw, and this plant just stops with  
its leaves, hence the name 'Vetrilai' (Vetru Ilai) or empty leaf.  
 
-Shri Kanchi Maha Swamigal

Sanatana Dharma - Spirituality and Food
-------------------------------------------------------

Sojji
-------
Suji is another name from the Turkish. It has become sojji now. It is mostly referred to these days as kesari. In Sanskrit, kesaram means mane, so kesari is a lion with kesaram. It was a practice to add the title 'kesari' to people who are on the top in any field. Thus we have Veera Kesari, Hari Kesari as titles of kings in Tamilnadu. The German Keisar, Roman Caesar and the Russian Czar -- all these titles came from only from this term kesari.

What is the color the lion? A sort of brownish red, right? A shade that is not orange nor red. That is the kesar varnam (color). The powder of that stone is called kesari powder, which became the name of the dish to which it is added for color.

-Shri Kanchi Maha Swamigal
[Above posts courtesy Sri Sai, Thuglak reader posts on Thuglak dated 15.12.11]
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தா மனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவைநோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்
3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.

விளக்கம்: ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே!
திருப்பாவை 4. மழை பொழிய வேண்டுதல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பொருள்: கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனான வருணப் பகவானே, நீ எங்களுக்கு மட்டும் மழை பொழிந்து குறுகியவனாக இருக்காதே. மாறாக இந்த பூலோகம் முழுவதும் உன் அருளை வாரி வழங்கு. ஆழ்கடல் நீரை அள்ளி எடுத்து, இடிகளை முழக்கி, பின்னர் உனது உடல் நிறத்தை கருமையாக்கி மழை நீரை வாரி வழங்கு.

பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய், விஷ்ணுவின் கையில் உள்ள வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் முழக்கமிடு, சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல நிற்காமல் மழையைப் பெய்ய விடு. உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும், பெய்யட்டும். நீ இப்படி அருளினால்தான் நாங்களும் மார்கழி மாதத்தில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும்.
[Above excerpts are from Thiruppavai, courtesy Sri Rajagopal, Thuglak forum reader posts on Thuglak dated 15.12.11]
திருவெம்பாவை
2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம்,
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

திருவெம்பாவை  
3.  
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்  
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்  
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்  
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்  
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ  
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ  
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை  
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3  
 
தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !  
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,  
அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !  
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !  
படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !  
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !  
(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய  
குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?  
தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்  
தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்  
பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !  
 
பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;  
புன்மை - கீழ்மை.

திருவெம்பாவை  
4.  
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ  
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ  
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்  
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே  
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்  
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்  
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து  
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4  
 
தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே !  
இன்னுமா விடியவில்லை ?  
படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)  
தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ?  
தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.  
கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும்  
போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும்  
பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து  
பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம்.  
வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !  
 
ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).
திருவெம்பாவை 5.
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாத
மலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற
(இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற !
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு
அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு
குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று
நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே !
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

[Above excerpts from Thiruvembaavai are courtesy by Sri Cheenu, Thuglak Reader Forum posts on Thuglak dated 15.12.11]

சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! இன்று சனிப்பெயர்ச்சி!

இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.



ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, ""உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,'' என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.



இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?'' என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
Today, 08:56:37
– Like – Reply
Cheenu
Contd..

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.



தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது'' என வரம் கேட்டான். Œனிபகவானும் அருள் புரிந்தார். நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.

[Above excerpts on Shani Peyarchi courtesy by Sri Cheenu, Thuglak reader forum posts on Thuglak dated 15.12.11]

சொல்லால் விளக்க முடியாத மேம்பட்ட அன்பின் சாரமாக இறைவன் இருக்கிறான். அவனை நாம் உணர முடியுமே தவிர, அவனது அன்பின் தன்மையை யாராலும் விளக்கமுடியாது.
* இறைவன் ஒருவனே கொடுப்பவன். அவன் தரும் காசோலையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதனை பணமாக்கிக் கொள்ளலாம்.
* நன்மை, உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது, ஆனாலும், அது இன்னும் உண்மையின் இடத்தை அடையவில்லை.
* மனிதர்கள் தீமையைக் கண்டு மனம் கலங்கக்கூடாது. உள்ள உறுதியுடன் எதிர்த்துப் போராடவேண்டும்.
அதேபோல, நன்மை கிடைத்துவிட்டதே என தலைகால் புரியாமல் ஆடவும்கூடாது. அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* உயிர்களில் உயர்ந்தவன் மனிதன். உலகங்களில் உயர்ந்தது மண்ணுலகம். மனிதனைவிட உயர்ந்த ஒரு கடவுளை நம்மால் கற்பனை செய்ய முடியாது. எனவே நமது கடவுள் மனிதனே.
* இறைவனின் திருநாமத்தை திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். ஜபம் செய்வதன் மூலம் இறைவனின் எல்லையற்ற அருளை பக்தனால் அடையமுடியும்.
- விவேகானந்தர்

[Above excerpts on speeches by Swami Vivekananda courtesy by Sri Paartha, Thuglak on line post dated 15.12.11]