Tuesday, December 20, 2011

Sanatana Dharma - Thought for the day (15.12.2011) Part 2

Payasam  
--------------  
 
Payas (in Sanskrit) means milk. So payasam literally means 'a delicacy made of milk'. This term does not refer to the rice and jaggery used to make payasam. They go with the term without saying. Actually payasam is to be made by boiling rice in milk (not water) and adding jaggery. These days we have Dhal payasam, rava payasam, semia peyasam and so on, using other things in the place of rice.  
 
Vaishanavas have a beautiful Tamil term 'Akkaara Adisil' for payasam. The 'Akkaar' in this term is a corruption of the Sanskrit 'sharkara'. The English term 'sugar' is from the Arabian 'sukkar', which in turn is from this Sanskrit term. The same term also took the forms 'saccharine' and 'jaggery'. And the name of the dish 'Jangiri' is from the term jaggery.  
 
-Shri Kanchi Maha Swamigal



Kanji (Porridge)
----------------------

Before we become satiated with madhuram (sweetness), let us turn our attention to a food that is sour. As an alternative to sweetness, our Acharyal (Adi Sankara) has spoken about sourness in his Soundarya Lahiri.

Poets describe a bird called cakora pakshi that feeds on moon-beams. Sankara says in Soundarya Lahiri that the cakora pakshi were originally feeding on the karunya lavanyamruta (the nectar of compassion and beauty) flowing from Ambal's mukha chanran (moon like face). They got satiated with that nectar and were looking for somthing sour, and spotted the full moon, which being only a reflection, issued only sour beams!

Acharyal has used the term kanjika diya, which gives an evidence of his origin in the Malayala Desam. He said that since the cakora pakshis were convinced that the nectar from the moon was only sour kanji, they chose to feed on it as an alternative.
The term kanjika means relating to kanji, but the word kanji is not found in Sanskrit. It is a word current only in the Dakshinam (south). There too, kanji is special in Malayala Desam where even the rich lords used to drink kanji in the morning. This was the variety came to be known as the 'Mayalayam Kanji'.

Kanji is good for deham (body) as well as chittam (mind). And less expensive. You just add a handful of cooked rice rava (broken rice), add buttermilk, salt and dry ginger, which would be enough for four people.

The buttermilk added must be a bit more sour. The salt too must be a bit more in quantity. With the slight burning taste of dry ginger, the combination would be tasty and healthy.

-Shri Kanchi Maha Swamigal
Tambulam  
---------------  
 
It is customary to have tambulam at the end of a South Indian dinner. In the North, taambUlam is popularly known as paan,  
which is usually a wrap of betel nut and other allied items in a calcium-laced pair of betel leaves. In the South, tambulam  
is usually an elaborate and leisurely after-dinner activity. People sit around a plate of tambUlam items, drop a few cut or  
sliced betel nut pieces in their month, take the betel leaves one by one leisurely, draw a daub of pasty calcium on their  
back and then stuff them in their mouth, chatting happily all the while.  
 
The betel leaf is known by the name vetrilai in Tamil, literally an empty leaf. Paramacharya once asked the people sitting  
around him the reason for calling it an empty leaf. When none could give the answer, he said that the usually edible plants  
don't just stop with leaf; they proceed to blossom, and bear fruits or vegetables. Even in the case of spinach or lettuce, we  
have to cook them before we can take them. Only in the case of the betel leaf, we take it raw, and this plant just stops with  
its leaves, hence the name 'Vetrilai' (Vetru Ilai) or empty leaf.  
 
-Shri Kanchi Maha Swamigal

Sanatana Dharma - Spirituality and Food
-------------------------------------------------------

Sojji
-------
Suji is another name from the Turkish. It has become sojji now. It is mostly referred to these days as kesari. In Sanskrit, kesaram means mane, so kesari is a lion with kesaram. It was a practice to add the title 'kesari' to people who are on the top in any field. Thus we have Veera Kesari, Hari Kesari as titles of kings in Tamilnadu. The German Keisar, Roman Caesar and the Russian Czar -- all these titles came from only from this term kesari.

What is the color the lion? A sort of brownish red, right? A shade that is not orange nor red. That is the kesar varnam (color). The powder of that stone is called kesari powder, which became the name of the dish to which it is added for color.

-Shri Kanchi Maha Swamigal
[Above posts courtesy Sri Sai, Thuglak reader posts on Thuglak dated 15.12.11]
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தா மனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவைநோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்
3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.

விளக்கம்: ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே!
திருப்பாவை 4. மழை பொழிய வேண்டுதல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பொருள்: கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனான வருணப் பகவானே, நீ எங்களுக்கு மட்டும் மழை பொழிந்து குறுகியவனாக இருக்காதே. மாறாக இந்த பூலோகம் முழுவதும் உன் அருளை வாரி வழங்கு. ஆழ்கடல் நீரை அள்ளி எடுத்து, இடிகளை முழக்கி, பின்னர் உனது உடல் நிறத்தை கருமையாக்கி மழை நீரை வாரி வழங்கு.

பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய், விஷ்ணுவின் கையில் உள்ள வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் முழக்கமிடு, சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல நிற்காமல் மழையைப் பெய்ய விடு. உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும், பெய்யட்டும். நீ இப்படி அருளினால்தான் நாங்களும் மார்கழி மாதத்தில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும்.
[Above excerpts are from Thiruppavai, courtesy Sri Rajagopal, Thuglak forum reader posts on Thuglak dated 15.12.11]
திருவெம்பாவை
2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம்,
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

திருவெம்பாவை  
3.  
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்  
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்  
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்  
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்  
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ  
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ  
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை  
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3  
 
தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !  
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,  
அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !  
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !  
படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !  
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !  
(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய  
குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?  
தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்  
தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்  
பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !  
 
பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;  
புன்மை - கீழ்மை.

திருவெம்பாவை  
4.  
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ  
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ  
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்  
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே  
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்  
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்  
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து  
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4  
 
தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே !  
இன்னுமா விடியவில்லை ?  
படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)  
தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ?  
தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.  
கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும்  
போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும்  
பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து  
பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம்.  
வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !  
 
ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).
திருவெம்பாவை 5.
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாத
மலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற
(இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற !
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு
அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு
குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று
நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே !
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

[Above excerpts from Thiruvembaavai are courtesy by Sri Cheenu, Thuglak Reader Forum posts on Thuglak dated 15.12.11]

சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! இன்று சனிப்பெயர்ச்சி!

இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.



ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, ""உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,'' என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.



இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?'' என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
Today, 08:56:37
– Like – Reply
Cheenu
Contd..

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.



தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது'' என வரம் கேட்டான். Œனிபகவானும் அருள் புரிந்தார். நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.

[Above excerpts on Shani Peyarchi courtesy by Sri Cheenu, Thuglak reader forum posts on Thuglak dated 15.12.11]

சொல்லால் விளக்க முடியாத மேம்பட்ட அன்பின் சாரமாக இறைவன் இருக்கிறான். அவனை நாம் உணர முடியுமே தவிர, அவனது அன்பின் தன்மையை யாராலும் விளக்கமுடியாது.
* இறைவன் ஒருவனே கொடுப்பவன். அவன் தரும் காசோலையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதனை பணமாக்கிக் கொள்ளலாம்.
* நன்மை, உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது, ஆனாலும், அது இன்னும் உண்மையின் இடத்தை அடையவில்லை.
* மனிதர்கள் தீமையைக் கண்டு மனம் கலங்கக்கூடாது. உள்ள உறுதியுடன் எதிர்த்துப் போராடவேண்டும்.
அதேபோல, நன்மை கிடைத்துவிட்டதே என தலைகால் புரியாமல் ஆடவும்கூடாது. அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* உயிர்களில் உயர்ந்தவன் மனிதன். உலகங்களில் உயர்ந்தது மண்ணுலகம். மனிதனைவிட உயர்ந்த ஒரு கடவுளை நம்மால் கற்பனை செய்ய முடியாது. எனவே நமது கடவுள் மனிதனே.
* இறைவனின் திருநாமத்தை திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். ஜபம் செய்வதன் மூலம் இறைவனின் எல்லையற்ற அருளை பக்தனால் அடையமுடியும்.
- விவேகானந்தர்

[Above excerpts on speeches by Swami Vivekananda courtesy by Sri Paartha, Thuglak on line post dated 15.12.11]








No comments:

Post a Comment