Sunday, January 8, 2012

Sanatana Dharma - Thought for the day (05.01.2012)

That which is within all, which is seen as "This" is the source. He who is within and sees as "This" is God. It is the reality. It is in yourself. What is limited is Sadhana; what is unlimited is the end.  

- Shri Kanchi Maha Swamigal


மனோ இந்திரியங்களால், கர்மாகளைச் செய்கிற காலத்திலும் கூட ஆத்மா சிந்தனை தீர்த்தத்தை கொஞ்சம் இவற்றில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே அநேக கர்மாகளுக்கு இடையிலேயும் தியானம் செய்வது, ஆத்மா விசாரதிற்கு என்று, கொஞ்ச காலம் ஒதுக்கத் தான் வேண்டும்.  

- காஞ்சி மஹா ஸ்வாமிகள்



பக்தி  
 
இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்.  
 
சிருஷ்டியில் பலவகையான சக்திகள் பல்வேறு வஸ்துக்களிடம் வியாபித்திருக்கின்றன. இயற்கையைப் பார்த்தால் ஒன்றின் சக்தியைவிட இன்னொன்றுக்குச் சக்தி அதிகம். அதையும்விட இன்னொன்றுக்கு அதிகம் சக்தி. என்கிர ரீதியில் போய்க் கொண்டே இருக்கிறது.  
 
பௌதிகமான நமக்குக் கொஞ்சம் சக்தி இருக்கிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கனம் தூக்குகிறோம். மாடு நம்மைவிட அதிக கனம் தூக்குகிறது. ஒட்டகம் அதையும்விட அதிக பளு தூக்கும். யானையால் அதற்கும் அதிக கனத்தைத் தூக்க முடிகிறது. புத்தி பலத்தைப் பார்ப்போம். தாவரங்களைவிடப் புழுவுக்கு அதிக புத்தி இருக்கிறது. புழுவை விட எரும்புக்கு அதிக புத்தி இருக்கிறது. எறும்பைவிட ஆடு மாடுகளுக்கு அதிக அறிவு. அவற்றைவிட மனிதனுக்கு அதிக அறிவு.  
 
இந்த ரீதியில் யோசித்து ஆராய்ந்து பார்த்தால் இந்த பௌதிக பலம், புத்தி பலம் எல்லாம் பூரணமாக இருக்கிற ஒர் ஆதார வஸ்துவும் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது. அதைத்தான் ஸ்வாமி என்கிறோம். நாம் நம் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டுகிறோம். குருவி தன் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு கூட்டைக் கட்டுகிறது. இந்த உலகத்தை எல்லாம் நிர்மாணிக்கிற புத்தியும், சக்தியும் கொண்ட ஒன்று இருக்கிறதல்லவா? அதுதான் ஸ்வாமி.  
 
ஒன்றிலிருந்து ஒன்றாக சக்தி அதிகமாகிக் கொண்டே போகிற இயற்கையிலிருந்து இப்படி ஈசுவர தத்துவத்திற்குப் போகிறோம். ஒன்றுக்கு ஒன்று மாறாக (Pair of Opposites) என்கிற எதிரெதிர்ச் சக்தி ஜோடிகளையும் நாம் இயற்கையில் பார்க்கிறோம். கடும் பனிக்காலம் என்று ஒன்று இருந்தால் கடும் வெயில் காலம் ஒன்று இருக்கிறது. இரவு என்று ஒன்று இருந்தால் பகல் என்பதாக ஒன்று இருக்கிறது. மிருதுவான புஷ்பங்கள் இருப்பதுபோல் கூரான முட்கள் இருக்கின்றன. தித்திப்புக்கு மாறாக கசப்பு இருக்கிறது. அன்புக்கு மாறாக துவேஷம் இருக்கிறது. எதற்கும் எதிர்வெட்டாக ஒரு மாற்று இயற்கையில் இருக்கிறது. இந்த ரீதியில் ஆலோசனை செய்தால் மனித மனசுக்கு மாற்றாகவும் ஒன்று இருக்கத்தானே வேண்டும்?மனித மனஸின் சுபாவம் என்ன? ஆபாசங்களில் முழுகிச் சஞ்சலித்துக்கொண்டே இருப்பது. திருப்தியே இல்லாமல் தவிப்பது, இதற்கு மாறாக ஆசாபாசமின்றி, சஞ்சலமே இன்றி, சாசுவத சாந்தமாகவும் சௌக்கியமாகவும் திருப்தியாகவும் இருக்கிற வஸ்துவும் இருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்ட வஸ்துதான் ஸ்வாமி.  
 

இயற்கையில் சகலமும் மாறிக்கொண்டிருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால் நாம் மாறாததாக நினைக்கிற மலையும், சமுத்திரமும்கூட காலக்கிரமத்தில் மாறிக் கொண்டேதான் இருக்கின்றன. இயற்கையில் எதுவுமே சாசுவதம் இல்லை. இதற்கு எதிராக மாறாமலே ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் ஸ்வாமி.

இயற்கையில் படிப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்று என்றும், அதே இயற்கையில் எந்த ஒன்றுக்கும் மாறுதல் உண்டு என்றும் அம்பாள் காட்டி, இந்த இரண்டாலும் கடைசியில் பரமாத்ம தத்துவம் ஒன்று இருந்தாக வேண்டும் என்று உணர்த்துகிறாள்.

அது இருந்து விட்டுப்போகட்டுமே. அதை எதற்கு உபாஸிக்க வேண்டும் என்று கேட்கலாம். நாம் எப்படி இருக்கிறோம்? எப்போதும் எல்லையில்லாத தேவைகளோடு (Wants) இருக்கிறோம். பரமாத்மா ஒரு தேவையும் இல்லாமல் இருக்கிறார். இத்தனை தேவையுள்ள நாம் அற்ப சக்தியோடு இருக்கிறோம். ஒரு தேவையும் இல்லாத பரமாத்மாவோ ஸர்வசக்தராக இருக்கிறார். நாம் ஒரே பள்ளமாக இருக்கிறோம். அவர் பரம உன்னதமாக இருக்கிறார். அவர் சக்தியிலும் ஞானத்திலும் மட்டும் உயர்ந்தவர் என்பதில்லை. தயையிலும் உயர்ந்தவராக இருக்கிறார். அதனால்தான் அவரைத் தியானித்தால் பள்ளமாக இருக்கிற நம்மையும் தூர்த்து நிரம்பச் செய்கிறார். நாம் குறைந்தவர்கள். அவர் நிறைந்தவர்.

நம் குறையைத் தீர்த்து நிறைவாகச் செய்ய அந்த நிறைவால்தானே முடியும்? அப்படிச் செய்கிற கருணா மூர்த்தி அவர். நாம் உபாஸித்தால் நம் குறைகளைப் போக்குகிறார்.
குறை இருக்கிறது என்றால் எதுவோ தேவைப்படுகிறது என்று அர்த்தம். அடியோடு தேவையே இல்லாவிட்டால் அப்படியே நிறைந்து விடலாம். நம் குறைகளை நிவற்த்தி செய்கிற பரமாத்மா கடைசியில் நமக்கு எதுவுமே தேவையில்லை என்ற நிறைவையும் தந்துவிடுவார். அப்போது அந்த உயர்ந்த மேடு நம்மைத் தூர்த்துத் தூர்த்து, பள்ளமாயிருந்த நாமும் அதோடு சமமாக, அதாகவே ஆகியிருப்போம்.
- காஞ்சி மஹா ஸ்வாமிகள்





[Above excerpts of thoughts or discourses by Kanchi Maha Periyavaa source courtesy Sri Sai, Thuglak Reader forum post dated Thuglak issue dated 05.01.2012]
திருவெம்பாவை 20.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

போற்றி ! உன் தொடக்கமான மலர் போன்ற பாதம் அருளட்டும் !
போற்றி ! உன் முடிவான செம்மலர் போன்ற திருவடிகள் அருளட்டும் !
(இறைவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாததால் அவன் பாதமே எல்லாம்).
போற்றி - எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி - திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி - நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.
திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி  
 
திருச்சிற்றம்பலம் 1.  
 
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !  
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு  
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்  
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;  
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்  
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !  
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !  
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !  
 
போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !  
பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு அதுபோன்ற  
மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில்  
எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக்  
கண்டு, அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.  
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான  
வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !  
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !  
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !  
 
சேறு - கள்/ தேன்; ஏறு - இடபம்

திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி  
 
திருச்சிற்றம்பலம் 2.  
 
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்  
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்  
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்  
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்  
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !  
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !  
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !  
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !  
 
அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில்  
விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.  
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன்  
எழுவதால் உதயமாகின்றது. கண்களைப் போன்ற மணமுள்ள  
மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி  
போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில்  
வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் ! அருளாகிய செல்வத்தைத்  
தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே ! (ஓயாது வந்துகொண்டிருக்கின்ற)  
அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க !  
 
அருணன் - சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன்  
தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்); இந்திரன் திசை - கிழக்கு;  
நயனம் - கண்; கடி - மணம்; அறுபதம் - வண்டு.

திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி  
 
திருச்சிற்றம்பலம் 3.  
 
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்  
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்  
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்  
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்  
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ  
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ  
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை  
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3  
 
தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !  
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,  
அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !  
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !  
படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !  
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !  
(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய  
குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?  
தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்  
தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்  
பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !  
 
பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;  
புன்மை - கீழ்மை.


Like to share this excellent Upanyasam on திருப்பாவை by Swami Velukkudi Krishnan  
 
http://www.youtube.com/results?search_query=Thiruppavai+~+Upanyasam+by+Sri.+Velukkudi+Krishnan+swamy&oq=Thiruppavai+~+Upanyasam+by+Sri.+Velukkudi+Krishnan+swamy&aq=f&aqi=&aql=1&gs_sm=e&gs_upl=16111314l16117524l0l16118996l5l5l0l0l0l0l1210l2647l0.2.1.6-1.1l5l0


திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

திருச்சிற்றம்பலம் 4.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும்,
(விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

திருச்சிற்றம்பலம் 5.

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

"பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.


திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

திருச்சிற்றம்பலம் 6.

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.



[Above excerpts from Thiruppaavai courtesy Sri Cheenu from Thuglak forum posts on Thuglak dated 05.01.2012]

திருப்பாவை பாடல் - 20:  
 
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று  
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!  
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு  
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!  
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்  
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்  
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை  
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.  
 
பொருள்: முப்பத்து மூன்றுகோடி தேவர்களுக்கு எல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக கடவுளே! எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் தூயவனே! எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமி தாயே! எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடியுடன், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து, இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.  
 
விளக்கம்: எல்லார்க்கும் முந்திய தெய்வம் கண்ணனே என்கிறாள் ஆண்டாள். உண்மை தானே! "ஆதிமூலமே என்று கஜேந்திரன் யானை அலறியதும் கருடன் மீதேறி காற்றினும் வேகமாய் வந்து முதலையிடம் இருந்து காத்தான். பிரகலாதன் அழைத்ததும், கருடனைக் கூட எதிர்பாராமல், தூணில் இருந்தே நரசிம்மமாய் வெளிப்பட்டான் அதனால் தான் இப்படி ஒரு பட்டம் அவனுக்கு.

திருப்பாவை பாடல் - 21:

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனே! எழுவாயாக. வேதங்களால் போற்றப்படுபவனே! பலசாலியே! வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! எழுவாயாக! உன்னை எதிர்த்த அரசர்கள் வலிமையிழந்து, உன் வீட்டு வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை வணங்குவதற்கு காத்திருக்கிறோம்.

விளக்கம்: கண்ணனுக்கு பயந்த மன்னர்கள், பயத்தால் அவனை வணங்கக் காத்திருந்தார்கள். இவ்வாறு இறைவனை வணங்குவதில் பயனில்லை. ஆனால், அவனது திருவடியே தஞ்சமென்று, ஆயர்குலப் பெண்கள் வந்தார்கள். இந்த ஆத்மார்த்த பக்தியையே இறைவன் விரும்புகிறான்.
திருப்பாவை 22: கண்களால் சாபம் போக்கும் கண்ணன்  
 
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான  
 
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே  
 
சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்  
 
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே  
 
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ  
 
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்  
 
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்  
 
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.  
 
 
பொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம்.கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.


திருப்பாவை - 23

THE CONNECTION OF THE 23RD PAASURAM TO SRI NARASIMHAN :
This Paasuram is considered to be dedicated to Sri Lakshmi Narasimhan by ANDAL.
In the hills (caves) of AhObilam, MaalOlan, Sri LakshmI Narasimhan, was in deep sleep
(mannik Kidanthu uRanginAn). He is the “Seeriya SrimAnAna Singam”. He reflected on the
unfortunate lot of the people of Kali age and their deep aj~nAnam and took pity on them and
had the sankalpam to bless them. Hence, He came out of the caves of AhObilam Hills and
went on SanchAram to the villages and towns all over BhAratha Varsham in the company of
AadhivaNN SatakOpa Jeeyar and His successors to grow the tatthva Jn~Anam of people and
to bless them with the phalan of Prapatthi at His Thiruvadi.

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் அணல் பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வருவதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக.
மணிவண்ணனே, உனது கோவிலிலிருந்து இங்கே வந்து, வேலைப்பாடுகள் அமைந்த அழகான சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களது கோரிக்கைகளைக் கேட்டு அதை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.


In this Paasuram, the Gopis describe the Majestic gait of KrishNa-simham. In
the previous (angaNmA Gn~Alatthu) paasuram, they announced their arrival at the foot of His
cot and appealed to Him to wake up and look at them and inquire about their mission. He
obliges. Here, they salute the gambhIra Nadai azhahu of that “YasOdhai iLam singam”. The
“Suka Suptha Paranthapan” (the blissfully resting scorcher of His enemies) has now arisen and
the way in which He awakens-- like a Lion waking up in its cave during rainy season after a
deep sleep-- is movingly captured by ANDAL in this Paasuram.

THE CONNECTION OF THE 23RD PAASURAM TO SRI NARASIMHAN
This Paasuram is considered to be dedicated to Sri Lakshmi Narasimhan by ANDAL.
In the hills (caves) of AhObilam, MaalOlan, Sri LakshmI Narasimhan, was in deep sleep
(mannik Kidanthu uRanginAn). He is the “Seeriya SrimAnAna Singam”. He reflected on the
unfortunate lot of the people of Kali age and their deep aj~nAnam and took pity on them and
had the sankalpam to bless them. Hence, He came out of the caves of AhObilam Hills and
went on SanchAram to the villages and towns all over BhAratha Varsham in the company of
AadhivaNN SatakOpa Jeeyar and His successors to grow the tatthva Jn~Anam of people and
to bless them with the phalan of Prapatthi at His Thiruvadi.
THE SIGNIFICANCE OF NUMBER 23
This is the 23rd paasuram. When you consider 23 as 2+3, the sum is 5. The fifth nakshathram is
Mruga Seersham or the One who has the head of an animal (Nrusimhan). Although
HayagrIvan, VarAhar have the heads of animals, according to Vedam (mrugOrana Bheema:
kuchara: giristha:), the Mrugaseershan referred to here is thus Nrusimhan. The Paasuram is
then about Narasimha Moorthy showing us the Maarga Seersahm (Talai siRantha UpAyam),
Prapatthi maargam for our salvation.
ACHARYA RAAMANUJA AND LAKSHMI NARASIMHAN
VisishtAdvaitha Matha Pravarthakar, AchArya RaamAnujA's aarAdhya dhaivam was Lakshmi
Narasimhan. He appointed 74 peetAdhipathis and gave each of them the icon of Sri Lakshmi
Narasimhan and asked them to spread the glory of our sampradhAyam and enhance its
splendor through AarAdhanam of Lakshmi Narasimhan. Thiruvarangatthu AmudanAr refers to
this important niyamanam of AchArya RaamAnujA this way:
“Valarntha VenkOpa MadangalonRAi--kizhitthavan keerthi
payir yezhunthu viLainthidum chinthai RaamAnusan”.
NARASIMHA AARADHANAI BY ACHARYAS
In all AchArya's aasthAnam, it is interesting to note that Lord Narasimhan is worshipped
(Uduppi, SrungEri, VaanamAmalai et al). Adhi SankarA sang the “Lakshmi Nrusimha
KarAvalampa SthOthram”, when he was in deep distress. His moving cry was like the
Gajendran's cry “AadhimoolamE”.


PERIYAZHWAR AND ANDAL AS BHAKTHAS OF NARASIMHA
PeriyAzhwAr was a Narasimha Bhakthar and His daughter was also Narasimha Bhakthai.
PeriyAzhwAr stated in His paasuram that he is “yEzhpadikkAl” Narasimha Bhakthan. For
seven generations, He and His family are Narasimha BhakthAs. His daughter of the next
generation is a natural Narasimha Bhakthai. She goes on to say in VaaraNamAyiram Paasuram
dealing with Laaja Homam that Narasimhan is Achyuthan (One who never fails in His
RakshaNa vratham of His BhakthAs: “arimuhan acchuthan”). ANDAL through Gopis reminds
us of the Achyutha Tatthvam of MalOlan and His aasritha PakshapAtham. One AzhwAr
saluted this Nrusimham as “azhahiyAn thAnE! ariuruvan thAne” and Kaliyan saluted Him as
“Nammudai NamperumAn” in his Nallai nenjE paasuram.
ANDAL in Her 23rd Paasuram of ThiruppAvai sang about the Vaibhavam of Nrusimhan, when
She chose the words, “Mannik Kidanthu uRangum Seeriya Singam”.


திருப்பாவை பாடல் - 24:

This Paasuram is one of the most auspicious one in ThiruppAvai. That is why we recite it
twice. Since the prayer is in the form of a PallANDu, it can be recited many times more.
The gana prEmai (deep affection) of the Gopis for their Lord poured forth in the form of
MangaLAsAsanam and PallANDu. They forgot what they came for. First, they hail the
Thiruvadi that measured the Universes as Thrivikraman (anRivvulaham aLanthAi adip
pORRi). This is the third time ANDAL refers to Thrivikraman's mysterious deed (Ongi
UlahaLantha, ambarmUdarutthu Ongi ulhalantha and anRivvulaham aLanthAi here). The
anusandhAnam for three times is perhaps to remind us that Vaamanan begged for three feet of
land from Emperor Bali. She seems to say that MahA Bali could not succeed in granting three
feet of land, but She gave Him three feet/adis (Each ThiruppAvai Paasuram has eight feet or
Yettadi). She devoted one adi in each of the above three paasurams to salute the magnificent
deed of Thrivikraman, which is hailed by the VedAs as “ThrINi padhAn VichakramE”). The
Gopis say: “anRu ivvulaham aLanthAi!adip pORRi! inRu Yaam vanthOm”. After saluting
MahA Bali VrutthAntham, the Gopis saluted the valor of the Lord in destroying RaavaNan as
Raaman, SakatAsura vadham and the wondrous deed of lifting Govardhana Giri to teach
Indran, normally an anukoolan, an unforgettable Lesson.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

விளக்கம்: இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை "போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.


திருப்பாவை பாடல் - 25:

Lord KrishNA's avathAra rahasyam is being celebrated here. He is “ajAyamAno BahudhA
vijAyathE” (He manifests Himself in many forms although He has no birth). “Devaki mahanAi
piRanthu, YasOdhai mahanAi” vaLarnthAn. Swamy NammAzhwAr addresses Him as
“piRantha MaayA” (A master-trickster taking birth in this world as one of us) in a
ThiruvAimozhi paauram.

In Her ThiruppAvai Paasuram, ANDAL does not mention explicitly the name of Devaki or
YasOdhai, but refers to both of them as “oruthi”. Here “Oruthti” is a respectful reverence to
the matchless ones (adhvidhyALs), who had the Bhaagyam of giving birth to Him and raising
Him. SampradhAyam suggests that we do not call the great ones by their given names, but
refer to them by their place of birth or vamsam (e. g: ThirukkOttiyUr nampi, Vangipuratthu
Aacchi et al) Following this sampradhAyam, MaNavALa Maamuni refers to Swamy Desikan as
“Ubhayukthar” (The great One). In this traditional way, ANDAL refers to both Devaki and
YasOdhai respectfully as “Orutthi”. He was born to one (orutthi) and was raised by the other
(orutthi).

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்: பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. "உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் "தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.


[Above excerpts from Thiruvembaavai source courtesy Sri Rajagopal, Thuglak reader forum posts on Thuglak dated 05.01.2012]


ஜ்வாலை
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளிலேற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவிந்தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை

(Above info source one reader forum post on Ananda Vikatan issue dated 5.1.2012 on Madan's Q&A where one reader with nick name 'JWALAI' has posted above info (his source unknown), in response to another post on a different context.

No comments:

Post a Comment