Sunday, January 15, 2012

Sanatana Dharma - Thought for the day (12.01.2012)

He alone is an Acharya, who, after clearly understanding the conclusive teachings of the Sastras, makes the people of the world gain their welfare by making them stick to the path shown in the Sastras and also himself does everything according to Sastras and remains in that experience.  

- Shri Kanchi Maha Swamigal



பக்தி - கர்மமும் பக்தியும்

ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் விதேக முக்தி அடையப் போகிறார் என்று தெரிந்த போது சாமானிய சிஷ்யர்களெல்லாம் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். வேதாந்த பரமான உபதேசங்கள் அளித்தீரிகள். அதில் பல விஷயங்கள் எங்களுக்குப் புரியவே இல்லை. கடைத்தேறுவதற்கு சுலபமான வழி ஒன்று சொல்ல வேண்டும் என்று ஆசாரியாள் ஸோபான பஞ்சகம் என்று ஐந்து சுலோகங்களை உபதேசித்தார்கள்.

வேதம் வகுத்த வழியைத் தினந்தோறும் பின்பற்ற வேண்டும். வேதம் கூறுகிறபடி கர்மங்களைத் தவறாமல் அநுஷ்டானம் பண்ணுங்கள். ஆசை வாய்ப்பட்டு நம் மனசுக்குப் பிடிக்கிற காரியங்களைச் செய்வது என்பதில்லாமல், லோக உபகாரமாக அவரவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மாவைச் செய்யுங்கள் என்ற கருத்துடன் என்ற கருத்துடன் தொடங்குகிறது ஸோபான பஞ்சகம்.

வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள் இவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்? என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். கர்ம மார்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை. ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா, என்று நினைக்கிறார்கள்.
ஆசாரியாள் ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கர்மத்தையே ஈஸ்வர பூஜையாக செய்ய வேண்டும் என்று தெரிகிறது.கர்மத்தையும் செய்ய வேண்டும். ஈஸ்வரனையும் மறக்காமலிருக்க வேண்டும். கர்மங்களை ஈஸ்வரார்ப்பணமாக செய்ய வேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே, அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈஸ்வரனிடம் வைத்து அவனுக்குக் கர்ம பலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை. சாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கி விட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும். பக்தியும் வேண்டும்.

நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தம நிலை சித்திக்கும். அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம். அல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால், கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா? ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்க்ள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருக்கிறான் இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் துளிக்கூட அன்போ பாசமோ காட்டாமல் வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும். பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். ஈஸ்வரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிடமாட்டான். தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். ஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரனின் மனஸில் அன்பே இல்லாமல், வெட்டு வெட்டு என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவதி பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது. இது பகவான் செய்த லோகம். சர்வ லோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை. எனவே இவர்களெல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள். ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜனசமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழவேண்டுமென்றே நமக்கு வேததர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றை நம்முடைய சொந்த ஆசைகள், லாபங்களை நினைக்காமல் செய்து பகவானின் குடும்பம் ஒழுங்காக நடக்கச் செய்வதே நம் கடமை என்ற உணர்ச்சி வருகிறபோது அதிலேயே ஈஸ்வர பக்தியும் உட்புகுந்து நிற்கும். இப்படி பக்தி உணர்வோடு கர்மம் செய்தாலே பகவத் கிருபையைப் பூரணமாக கிரகிக்க முடியும்.  

கர்மத்தையே பகவானின் பூஜையாகச் செய்கிற நிலை வருவதற்கு ஆரம்பமாகத் தனியாகப் பூஜை, பஜனை எல்லாம் செய்து பகவானை ஸ்மரிக்க வேண்டியதும் அவசியம்.
 [Above excerpts on Kanchi Maha Periyava courtesy by Shri Sai, Thuglak online Reader Forum Posts - Thuglak dt. 12.01.2012]
திருச்சிற்றம்பலம் 7.  

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு  
அரிதென, எளிதென", அமரும் அறியார்,  
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;  
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்  
மதுவளர் பொழில் திருஉத்தர கோச  
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !  
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;  
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !  

"அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,  
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என  
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !  
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.  
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !  
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !  
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !  
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !  

ஆறு - வழி.
திருச்சிற்றம்பலம் 8  

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;  
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !  
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்  
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !  
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்  
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி  
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;  
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !  

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !  
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!  
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்  
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த  
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !  
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,  
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்  
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !  
பள்ளி எழுந்தருள்க !  

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.
திருச்சிற்றம்பலம் 9  

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா  
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்  
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !  
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்  
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !  
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்  
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !  
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !  

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !  
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து  
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !  
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !  
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்  
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !  
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !  

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -  
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.


திருச்சிற்றம்பலம் 10.  
 
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்  
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி  
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்  
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்  
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்  
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்  
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !  
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !  
 
"இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது  
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்  
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,  
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,  
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்  
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !  
 
 
புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.
[Above excerpts courtesy by Shri Cheenu, Thuglak Online Reader Forum posts on Thuglak Dt. 12.01.2012]
திருப்பாவை பாடல் - 26:  
 
SIGNIFICANCE OF THE 26TH PAASURAM  
 
This 26th Paasuram is about Isvaran, the 26th Tatthvam. The Upanishad  
points Him out as the 26th Tattvam (Tamm shat-vimsakam ithyAhu:). The importance of the  
number 26 among the Tattvams is seen at Hasthigiri of Lord VaradarAjan. The chEthanam  
(the Jeevan as the 25th tattvam) climbs the 24 steps (SarIram with 24 tattvams, which is an  
obstacle for mOksham) to get to the sannidhi of Isvaran on top of the Hasthigiri waiting for it  
(jeevan) patiently as the 26th and the Supreme Tattvam.  
 
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்  
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்  
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன  
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே  
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே  
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே  
கோல விளக்கே கொடியே விதானமே  
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.  
 
பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.  
 
விளக்கம்: பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குரு÷க்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.



திருப்பாவை பாடல் - 27:

SIGNIFICANCE OF THE 27TH PAASURAM

The Paavai Nonbhu is nearing completion. Andal thinks about SanmAnam (sambhAvanai) from the Lord for the Gopis, who observed this Vratham.

JnaanyAchAryAr points out that in the “MaalE maNivaNNA” paasuram that preceded today's paasuram, the Gopis referred to Svaroopa Siddhi (AathmA's svaroopam to perform kaimkaryam always to the Lord as His servant). He says that in today's paasuram, the alankAram for them (who completed the Vratham) is described. PBA Swamy explains that “MaalE MaNivaNNA” paasuram announced the Gopis receiving Sankham, PaRai, PallANDu-isaippAr, ViLakku, Kodi and VidhAnam. These five are a few of the many blessings that are attained in Parama Padham as revealed by Swamy NammAzhwAr in His “SoozhvisumpaNi Muhil” pathikam.

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

விளக்கம்: கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். ""கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.
ADDITIONAL SIGNIFICANCE OF THIS PAASURAM (ADIYEN):  
The Govindha Naama SankIrthanam starts first in this paasuram (Koodarai vellum SEER GOVINDHAN) and reaches a crescendo during the next two paasurams: “kuraivondumillaatha govindaa” in “KaRavaikaL pin senRu” paasuram and “iRRai paRai KoLLvAnananRu kANN govindaa” in “SiRRam SiRukAlE” Paasuram. The Phala Sruthi is sung in ANDAL's own words (Bhattar PirAn Godhai Sonna) in the FINAL, Vangak Kadal Paasuram. Until the final (30th) Paasuram, the Gopis were at the front end awakening their fellow Gopis, conversing with the occupants of Nandha Bhavanam and finally addressing the Lord Himself. The paasurams were Gopi-Mukham.
திருப்பாவை பாடல் - 28:

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

விளக்கம்: குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்
SIGNIFICANCE OF THE 28TH PAASURAM  
 
In the previous Paasuram (KoodArai Vellum Paasuram), the Gopis declared, “Unnai arutthithu VanthOm” and requested the blessings of “Paal, sORu, AbharaNams, Aadai” et al. That to Lord KrishNa looked like the Gopis were seeking from Him, the siRRinbhams (worldly pleasures). He was amused and Our Lord turned around and asked them: “Oh Gopis! Your mind seems not to be steady. Are you desiring the perishable pleasures or some thing higher than that from me?”. The Gopis recognized the situation and responded:” Oh Lord, we might have given You the impression that we are seeking sanmAnam that is commonly asked of You in a lOka reethi. Our true and inner wish is to have You and perform kaimkaryams to You always”. Then the pleased Lord revealed to them His Isvaryam (MahA VibhUthis) and the Gopis were overwhelmed and sought His pardon (aparAdha KshAmanam) for taking liberties with Him and forgetting His SarvEsvarathvam. They say: “Oh Lord of the Universe! You are Selfcomplete (Svatha: PoorNan). We might have appeared to have offended You due to our Overwhelming sense of affection (PraNayam) or attachment (abhimAnam). For You. You are the most generous (parama OudhAryan). You are the most compassionate (parama DayALu). We are simple folks, who do not know the difference between our right hand and left hand (idathu kai, valathu kai aRiyAtha aai peNNkaL. We do not have the Jn~Anam, Bhakthi, anushtAnam, AachAram, Vidvath balam to seek You innately as SiddhOpAyam in the saasthrA-ordained manner. We do NOT have therefore the seven requisites (states of mind) needed to approach You (the SarvEswaran) as a SaraNAgathan:  
 
(1)Aakinchanyam (kai muthal inmai)  
 
(2)Naichyam (awareness of our lowliness to approach You)  
 
(3)awareness of Your Soulabhyam (ease of access by One& all  
 
(4)awareness of Your Parathvam (as the Supreme Lord)  
 
(5)awareness of knowledge about Sambhandham (Seshathva Jn~Anam: our uRavu to You,  
 
which is timeless & indestructible)  
 
(6)awareness of the need to seek Your pardon for our trespasses (aparAtha KshAmanam).  
 
(7)awareness of the importance of seeking You as the only rakshakan to provide the strength to  
 
seek Your lotus feet as refuge (“Unnadi sEr vaNNam aruLAi, KaLai kaNN maRRilEn”).  
 
The Lord's identity as “PrApya-PrApaka Sangrahan” (essence as means and goal) was revealed succinctly in the First verse (NaarAyaNE namakkE paRai tharuvAn) and that quintessential upadEsam is elaborated in detail in paasurams 28 and 29 (KaRavaikaL pinnsenRu and SiRRam siRukAlE vanthunnai sevitthu). Bhagavath daasyam through Sva-Svaami (servant-Master) relationship is pointed out here as the way for our liberation.
திருப்பாவை- 29 :  
 
சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன்  
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்  
பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ  
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது  
இற்றைப்றை கொள்வானென்று காண் கோவிந்தா  
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு  
உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்  
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.  
 
பொருள்:  
அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை.  
காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.
SIGNIFICANCE OF THE 29TH PAASURAM :  
This is the Third of the PradhAna-BhUtha Thiruppavai PaasurankaLs (27, 28 and 29th), where the name of Govindhan is invoked for the third time. In Sankalpam, we invoke the name of Govindhan thrice: Sri Govindha Govindha GovindhA. This paasuram is like Sankalpam for Bhagavath DhAsyam. The name of “GODHA” is inside the name of Her lord: “GOvinDHA”. When we say Govindha, Govindha, Govindha three times, we invoke the name of GOdhA embedded in there. This 29th paasuram is the last of the ThiruppAvai paasurams, where ANDAL concludes Her Prabhandham in the role of a Gopi describing the feelings of fellow Gopis performing Paavai nOnbhu. In the 30th Paasuram (Vangakkadal Kadaintha), ANDAL speaks with Her own voice/ThAnAna Tanmayil Paadiyathu. Until now, the Gopis under the leadership of ANDAL were mentioning “paRai” and were seeking it from the Lord. In this paasuram, they elaborate on the meaning of that paRai. They state the true purposes of their performance of the nOnbhu as threefold: (1) Our objective (uddhEsyam) is to perform nithya kaimkaryam at Your holy feet (2) We can not live away form You even for a second (3) Please banish any other thought or desire that might interfere with the fulfilment of the above two uddhEsyams.  
SuddhAnandha Bharathi sums up the purport of this Paasuram as: “Let us always, even unto our 7th birth be with Thee, serving Thy will alone! Oh GovindhA! Change all other desires in us into this unique aspiration to be Thy humble servant”.
திருப்பாவை – 30

SIGNIFICANCE OF THE 30TH PAASURAM
Today is the day, when the MahA Prabhandam of Soodikkoduttha NaacchiyAr comes to the stage of SaatthumuRai. It is UttharAyaNa PuNya Kaalam. It is Makara SankarAnthi dinam. May Subhiksham spread all over the lands, where ANDAL BhakthAs are there and May her endearing message for our upliftment to reach Her Lord's Lotus feet easily serve as a beacon light for us all! Today is indeed a Parama MangaLa Dinam for us all! The 30th paasuram has the benedictions for a Kaimkaryam-filled life, the fruits of Bhagavath Daasyam. BhAgavatha dAsyam is the yellai nilam for that Bhagavath dAsyam.

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்குஅப் பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்: திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.
[Above excerpts from Thiruppavai courtesy by Shri Rajagopal, Thuglak Online Reader Forum Posts on Thuglak Dated 12.01.2012]


No comments:

Post a Comment